இசைக்கலைஞனைப் பின்தொடரும்
குழந்தையென
நீர்க்குமிழிகளைப் பின்தொடர்கிறேன்
காற்றின் சொல் கேட்டு
திசையற்ற வெளிகளில் பயணித்த
நீர்க்குமிழ்கள்
சிறகுகளைத் தந்தன கால்களுக்கும்
வானவில் ஒன்று
மிதந்து வருவதாய் பதறின
மேகக்கூட்டம்
கரைந்து மிதக்கிறதோ
தன் வண்ணங்களென
திடுக்கிட்டு விழித்தது
வண்ணத்துப்பூச்சி
குமிழொன்றிற்குள்
விதைக்குத் திரும்பும் விருட்சமாய்
சுருண்டு படுத்திருந்தது
தென்னை
கருப்பை ஒன்றின்
பனிக்குடமென
வசீகரித்தது ஒரு குமிழ்
சோப்புக் கரைசலின் மாயத்தில்
உருவாகியிருந்தது
புத்தம் புதிதாய் ஓர் உலகம்
காலி டப்பாக்களை
தூக்கி வீசியபடி
வீட்டுக்குள் ஓடிப்போனார்கள்
சிறுவர்கள்
கைவிடப்பட்ட குமிழ்கள்
வெடித்துச் சிதறின
காற்றின் திசை பற்றி
பறந்திருந்த எனக்கு
தொலைந்துபோயிருந்தது
என் திசை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டவே CAA வெளியீடு
- வங்கித் துறையை சீரழித்த மோடி அரசு
- காடு திறந்து கிடக்கிறது
- காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் - வழ வழா அறிக்கை
- தமிழ்நாடு மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)