மனிதர்களே!
மாடுகளைக் கொன்று
உங்கள்
வயிற்றில் புதைக்காதீர்கள்.
உங்களைவிட
பசுமாடு என்பது
பலமடங்கு உயர்ந்தது.
நீங்கள்
தொட்டால் தீட்டு
உங்களைத்
தொட்டாலும் தீட்டு
பசுவின் பீ நறுமணம்
அதன் மூத்திரம் மங்களம்.
மனிதர்களே
(தாழ்த்தப்பட்டவர்களே)
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
உதாரணம் போல்
இந்தியா முழுக்க
பரவலாக பல ஊர்களில்
உங்கள் உடைமைகளைக்
கொளுத்தியிருக்கிறோம்
உயிர்களைக் குடித்திருக்கிறோம்
உண்மையைச் சொல்லுங்கள்
உங்கள் மாடுகளை நாங்கள்
மாய்த்திருக்கிறோமா?
மனிதர்களே
(இஸ்லாமியர்களே)
பிரிவினையின்போதும் சரி
குஜராத்திலும் சரி
கர்ப்பிணியின் வயிறு கிழித்து
உங்கள் குழந்தையின்
உயிர் கிழித்தோம்
நெஞ்சில்
கை வைத்து சொல்லுங்கள்
உங்கள் கன்றுக்குட்டிகளை
நாங்கள் காயப்படுத்தினோமா?
மனிதர்களே
(பிற்படுத்தப்பட்டவர்களே)
மனிதர்களே
(பிற சாதிக்காரர்களே)
மனிதர்களைக் கொன்றாவது
மாடுகளைக் காப்பாற்றுங்கள்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
விழி - டிசம்பர் 2007
- விவரங்கள்
- வே.மதிமாறன்
- பிரிவு: விழி - டிசம்பர் 2007