குறிப்பிட்ட ஒரு வியாதியால் ஒரு நாட்டில்/ இடத்தில் அதன் பாதிப்பு/இறப்பு விகிதம் அதிகம் இருக்குமானால், தடுப்பூசியின் காரணமாக, அது உறுதியாக தடுக்கப்படும் என்ற விஷயம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தால், அவ்வியாதியை தடுக்க செலவு குறைந்த மாற்று வழிகள் இல்லை என இருக்கும் சமயத்தில் மட்டுமே தடுப்பூசியை பயன் படுத்தி வியாதி வராமல் காப்பது நன்மை பயக்கும்.

நம் நாட்டில் மஞ்சள்காமாலை தடுப்பூசியை அமுலுக்கு கொண்டுவர, அரசு/மருத்துவர்கள்/மருந்துக் குழுமங்கள் சொல்கின்ற காரணம்.

1. இது ஒரு ஆட்கொல்லி வியாதி.
2. இதன் பாதிப்பு மக்களிடையே மிகவும் அதிகம். 10 சதவீதம் மக்கள் மஞ்சள் காமாலை நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
3. இந்நோய் பாதிப்பின் காரணமாக ஈரல் முழுவதும் பாதிக்கப்பட்டு இறப்பு நிகழ்வது.
4. இந்நோய் காரணமாக ஈரல் புற்றுநோய் பாதிப்பால் பலரும் இறப்பது.
5. இந்த தடுப்பூசி நம்பகமானது, பாதுகாப்பானது... போன்றவை.

இனி இவை உண்மைதானா? மக்கள் நலன்தானா? இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்துவதற்கு காரணம்? போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கலாம்.

People for Economical and Effective Medicare (PEEM) என்னும் இயக்கத்தைச் சேர்ந்த ஹைதராபாத் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு. பா°கர் ராவ் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.

ஆட்கொல்லி, கொள்ளை நோயாக இருக்கும் பட்சத்தில் மட்டும் (அல்லது) கொள்ளை நோயாக உருவாகக் கூடிய அபாயமுள்ள வியாதிகளுக்கு எதிராக மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும். இந்தியாவைப் பொறுத்த மட்டில் இது கொள்ளை நோயாகவோ (அ) உருவாகவோ வாய்ப்பு இல்லை என்பதை இருக்கின்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது ஆட்கொல்லி வியாதி என்பதும் உண்மைக்கு புறம்பானது. இவ்வியாதியால் பாதிக்கப் பட்ட பெரும்பாலோர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுகின்றனர். இவ்வியாதி பற்றிய உலகின் மிகச்சிறந்த வல்லுநர் திருமதி Dr. ஷீலா செர்லாக் கூறுவது.

“மஞ்சள் காமாலை ஏற்படுத்தும் இக்கிருமிகள் (Hepatitis ‘B’ Virus) 100 பேர் உடம்பில் உட்புகும் போது 95 பேருக்கு அதன் உடனடி தாக்கம் (Acute Infection) தெரியும். அதில் 94 பேர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவர். இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட 1% கீழானவர்களுக்கே இறப்பு நிகழும் போது இதை எப்படி ஆட்கொல்லி வியாதி என அழைக்கமுடியும்.”

இந்தியாவைப் பொறுத்தவரை இவ்வியாதியின் உடனடித்தாக்கத்திற்கு ஆளானவர்கள் குறித்தான புள்ளி விபரங்கள்/ஆய்வுகள் இல்லை. இக்கிருமித் தாக்கத்தின் காரணமாக பாதிப்பு ஏதும் சிறிதளவு இல்லாமலும், ஆனால் அதே சமயம் இக்கிருமியை பிறருக்கு பரப்பக்கூடிய தன்மை கொண்டவர்கள் (Carriers) பற்றிய ஆய்வு/புள்ளி விபரங்கள் மிகவும் சிறிதளவில் உள்ளன. இவ்வாய்வுகளில் நோய் சுமப்பவர்கள் (careers) 1.62 – 4% எனத் தெரிய வந்துள்ளது. அதிலும் 1% இவ்வியாதியின் தீவிர பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

ஆக விஷயம் இப்படி இருக்க ஆந்திர மாநிலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும். (4.5 லட்சம் குழந்தைகள்) - Bill Gates Foundation உதவியுடன் கிடைத்த இத்தடுப்பூசிகள் போடுவது தேவைதானா? கொழுத்த வியாபாரியான பில் கேட்ஸ்கு ஆந்திரக் குழந்தைகள் நலன் மீதுதான் அக்கறையா? அமெரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்படுவது, அவ்வூசிகளின் காரணமாக எழும் பின்விளைவுகளுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழந்தைகள் மீது இல்லாத கரிசனம், பில்கேட்ஸ்கு ஆந்திரக்குழந்தைகள் மீது மட்டும் எழக் காரணமென்ன? இத்தடுப்பூசியின் காரணமாக எழும் பின்விளைவுகளுக்கு ஆந்திர அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியாவிலேயே நல்ல, தரமான மஞ்சள்காமாலை தடுப்பூசி குறைந்த விலையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை வாங்குவதற்கு பதிலாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் விலை உயர்ந்த மருந்துக் குழுமத்தில் இருந்து வாங்கி ஆந்திர குழந்தைகளுக்கு கொடுப்பது, வெளிநாட்டு மருந்து குழுமத்தின் வணிக நலனை கருத்தில் கொண்டு ஆந்திரக் குழந்தை களை சோதனை விலங்குகளாக மாற்றுவதாகவே எடுத்துக்கொள்ள முடியும்.

(வெளிநாட்டு உதவியுடன் நடக்கும் தடுப்பூசித் திட்டங்களே இந்திய குழந்தைகளை பரிசோதனை விலங்குகளாக மாற்றும் நோக்கத்துடனேயே உள்ளதை UNICEF அஸ்ஸாமில் செய்த ஆய்வில் 15 குழந்தைகள் (போலியோவில்) இறந்ததையும், கேரளாவில் திருவனந்தபுரத்தில் புற்றுநோய் ஆய்வில் ஏற்பட்ட பிரச்சினைகளையும், சமீபமாக ஹைதராபாத்தில் மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை பெரியவர்களுக்கு கொடுத்து சோதனை செய்ததில் 7 பேர் இறந்ததையும், இதே போல் பெங்களூருவில் மரபணு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தினை (இரண்டிலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்/அமைச்சகம் இருந்து அனுமதி பெறாமலே) பரிசோதித்தது குறித்து வழக்கு (PIL) தொடரப்பட்டிருப்பதையும், Glaxo மருந்து நிறுவனம் கிறித்துவ மடங்களின் உதவியோடு அனாதை குழந்தைகளிடத்து AIDS மருந்தின் பின் விளைவுகளை அனுமதி பெறாமலே சோதித்தும் - மக்கள் மீது இவர்கள் கொண்டுள்ள அக்கறையை தோலுரித்து காட்டியுள்ளது.) மேலும், மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பு 10% மக்களுக்குள்ளது எனும் தவறான புள்ளிவிபரத்தை அரசு/மருத்துவர்கள்/மருந்துக்குழுமங்கள் சொல்ல காரண மென்ன? மக்கள் நலனா? வணிக நலனா?.

Arre Z Zuckerman எனும் புகழ்பெற்ற மருத்துவர் எழுதிய புத்தகத்தில் (பக்கம் 545) மஞ்சள் காமாலையின் (Hepatitis ‘B’ Virus) காரணமாக பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் (90%) தானாகவே இயல்பு நிலைக்கு திரும்புவர் என்பதும் 1% கீழ் தான் பாதிப்பு மோசமாக இருப்பதும் உள்ளது. இதன் காரணமாக American Public Health Service (USPHS) American Academy of Paediatrics (ARP) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவில் 1997ல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்க வேண்டும் எனும் ஆணையை திரும்ப பெற்றுள்ளது. அதே வருடம் Communicable Disease Control (தொற்று நோய் தடுப்பு அமைச்சகம்) and Epidemiology of US Federal Government நிறுவனமும் மஞ்சள் காமாலை பாதிக்கப்படாத தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட வேண்டும் என்பதையும் திரும்ப பெற்றுக்கொண்டது.

US Federal Government மஞ்சள் காமாலையால் கருவுற்ற பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது மட்டும் (Hbs Ag Positive) பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் பரவலாம் என்பதற்காக, அக்குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி கொடுக்கலாம். மீதிக்குழந்தைகளுக்கு இது தேவையில்லை. ஏனெனில் இந்நோய் பெரும்பாலும் பெரியவர்களை மட்டுமே பாதிக்கக்கூடிய நோயாக உள்ளதால் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியால் பலன் அதிகம் இல்லை.

இனி மஞ்சள் காமாலை (Hepatitis ‘B’) குறித்து உலக வல்லுநர்களின் கூற்றை பார்ப்போம்.

1. சிறு குழந்தைகளுக்கு (1 வயதிற்கு கீழ்) மஞ்சள் காமாலை தொற்றும் வாய்ப்பும் 1-3% (Us Department of Public Health1996)

2. கருவுற்ற பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலொழிய பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. அதனால் US Federal Authorities அனைத்து குழந்தைகளுக்கும் இது கொடுக்க வேண்டிய தேவையில்லை (1999ம் ஆண்டு அறிக்கை)

3. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட பெரும்பாலும் முடியாத பிறந்த குழந்தைகள்/சிறு குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி தேவையில்லாமலே கொடுக்கப்படுகின்றது. (Pat Griggin Mackie)

4. இந்த தடுப்பூசியால் எவ்வளவு காலம் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், பாதுகாப்பை பெருக்க கூடுதல் ஊசி தேவையா என்பதும் தெளிவாக இல்லை. (National Vaccine Information Center- USA. Harrison’s Principles of Internal Medicine).

5. மஞ்சள் காமாலை நோய் கண்டு, அதிலிருந்து விடுபட்டவர்கள் வாழ்க்கை முழுக்க அந்தநோய் திரும்ப தாக்காத அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாக்கப்படுகின்றது. (Robbin’s Pathologic Basis of Disease 1994)

6. சிசு கருப்பையில் இருக்கும் காலத்திலே பாதிப்பு ஏற்பட்டு பிறக்கும் போது HBs Ag Positive இருந்தால் இத்தடுப்பூசியால் எந்த ஒரு பயனும் இல்லை. Zucker Man 1993.

7. ஏற்கனவே ஒருவர் Carrier ஆக இருந்தால் அவருக்கும் இந்த தடுப்பூசியால் ஒரு பயனும் கிடையாது. (National Drug Bulletin 2001).

8. 1987ல் மரபணு மாற்ற தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இத்தடுப்பூசியின் திறன் குறித்து தெளிவான விளக்கம் இல்லை. மேலும் குழந்தை பருவத்தில் கொடுக்கப்படும் இவ்வூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு கொடுக்கும், அவர்கள் பெரியவர் களாக வளர்ந்த பருவத்திலும் பாதுகாப்பை கொடுக்குமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது. குழந்தைகள் மீது பரிசோதிக்கவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. (Morbidity and Mortality Report Jan.1997)

9. 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இத்தடுப்பூசி கொடுத்தால், அவர்களுக்கு நோய் தடுப்பைக் காட்டிலும் இவ்வூசியின் பின் விளைவுகள் காரணமாக இறப்போ/பிற பின் விளைவுகளோ ஏற்படுவது 3 மடங்கு அதிகமாக உள்ளது. (Association of American Physicians and Surgeons, Dr.Jane Orient 08.07.1999)

10. அமெரிக்காவில் கட்டாயப்படுத்தப்படாத ஒரு தடுப்பூசியை, அங்கு விற்க முடியாத/கடினமான, தேவைக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை வளரும் நாடுகளின் கையில் திணித்து, பரிசோதனை விலங்குகளாய் மாற்றுவது மட்டு மின்றி/இலாபமும் அரசு/மருத்துவர்கள்/ மருந்துக் குழுமங்களின் துணையோடு சம்பாதிக்க நினைப் பதை என்னவென்று சொல்லுவது. பில்கேட்ஸின் கரிசனம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்தியா போன்ற ஏழை (ஆக்கப்பட்ட) நாடுகளில் தடுப்பூசியின் பின் விளைவுகளை ஆராய தொடர் ஆய்வு (Followup) செய்யப்படாமல் போவதால் இத்தடுப்பூசியினால் ஏற்படும் பிரச்சினைகளும் பின் விளைவுகளும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. எனினும் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களையாவது நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

நியூசிலாந்தில் மஞ்சள்காமாலை தடுப்பூசி திட்டத்திற்கு பின் அங்கே சர்க்கரை நோயால் (Diabetes) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது. Newzealand Medical Journal 24.05.1995.

Dr. Philip Incao, Ohio House of Representative Columbus Ohio முன் கொடுத்த வாக்குமூலத்தில் 1987ம் ஆண்டு முதலே பல மருத்துவ உலக ஆய்வுகளில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக நாட்பட்ட (Chronic) தன் நோய் எதிர்க்கும் திறனை தானே அழிக்கும் வியாதிகள் (Auto Immune Disorders) நரம்பு மண்டலங்களை பாதிக்கும் (Neurological) வியாதிகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்படும் எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.

மஞ்சள் காமாலை தடுப்பூசியின் மோசமான பின் விளைவுகளை அறிய மே 1999ல் US Senate Congressional Hearing by its Subcommittee ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் 81 புகழ்பெற்ற இது குறித்தான மருத்துவ கட்டுரையிலிருந்து Dr. Buston A Wais Bren என்பவர் பட்டியலிட்டு பின்வருவனவற்றை கூறுகிறார். அவை.

1. Convulsion (வலிப்பு நோய்)
2. Bell’s Palsy (முக ஜன்னி)
3. Lumbar Neuro Pathy (இடுப்பு, நரம்பு வலி)
4. Optic Beuritis (கண்பார்வை பாதிப்பு)
5. Transverse Myelitis (தண்டுவட பாதிப்பின் காரணமாக கை, கால் வாதத்தால் பாதிக்கப்படுவது.)
6. Polyneuropathy (பல நரம்புகள் பாதிக்கப்படும்).
7. Myasthenia Gravis (தசைகளை தளர்த்தி பாதிக்கும் நோய்) அமிதாப்பச்சன் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். விஷயம் இப்படி இருக்க தடுப்பூசி விளம்பரம்/பணம் போன்றவற்றிற்கு அவர் ஆசைப்படுவதை என்னவென்று அழைப்பது?
8. Demyelination (நரம்பு உறைகள் பாதிக்கப்படுதல்)
9. Multiple Sclerosis (மூளை,பிற நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ஒரு வகை நோய்)
10. Guillion Barre Syndrome (நரம்புகளை பாதிக்கும் நோய்)
11. Encephalitis (மூளைக் காய்ச்சல்)
12. Uvetis (கண்களை பாதிக்கும் நோய்)
13. Rheumatoid Arthritis (மூட்டுகளை பாதிக்கும் நோய்)

இவை அனைத்தும் உலக மருத்துவ ஏடுகளில் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயங்கள். பல இறப்புகளும் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் Nicholas, Lyla Rose, Mathew... போன்ற பல ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர்.

இணைய தளத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் பாதிப்பு 1000 பக்கங்களை எளிதில் தாண்டும்.

இவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாதிப்புகள் என்றால், ஏற்றுக்கொள்ளப்படாத பாதிப்புகள்?

ஆக தீவிர மஞ்சள்காமாலை தடுப்பூசித்திட்டத்தை கைவிட்டு தேவைப்படுபவர்களுக்கு மட்டும் அதனைக் கொடுப்பது சிறந்தது. அயோடின் சத்துக் குறைவு உள்ள இடங்களில் மட்டும் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துவது நல்லது. எல்லோரும் அயோடின் கலந்த உப்பைத் தான் உட்கொள்ள வேண்டும் என்பது சரியில்லாதது).

Hepatitis B Virus காரணமாக ஏற்படும் மஞ்சள் காமாலை பாதிப்பு பெரும்பாலும் பெரியவர்களுக்கு (Adults) என்றிருக்க, ஒட்டு மொத்தமாக குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி கொடுப்பது நல்லதன்று.

மாற்று:

அரசானது கருவுற்ற அனைத்துப் பெண்களையும் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என அறிய Hbs Ag பரிசோதனை செய்வது மட்டும் நல்லது. பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களின் (Hbs Ag Positive) குழந்தைகளுக்கு மட்டும் இத்தடுப்பூசி போடுவது நல்லது. இது பாதுகாப்பானது, விலையும் குறைவு, தேவையற்று அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுப்பது தவிர்க்கப்படுகிறது. மேலும் இத்தடுப்பூசிகளை நம்மூரிலே தயாராகும் தரம் நிறைந்த குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துக் குழுமங்களிடமிருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், யாருக்குக் கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

கொடுக்கக்கூடாதோர் பட்டியல்

1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படாத (Hbs Ag Negative) கருவுற்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள்.

2. Hbs Ag Positiveகுழந்தைகளுக்கு

3. முழு வளர்ச்சி இல்லாத குறைப்பிரசவ குழந்தைகளுக்கு (Premature born Children)

4. சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டு எடை குறைவான குழந்தைகள் (Malnourished and undernourished Children

5. இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் (Anemic Children)

6. அதிக சளித்தொல்லையால் (Respiratory infection) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு

7. ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு (Children with History of Allergy)

முக்கிய பிரச்சனை என்னவெனில் பெற்றோர் அனுமதியின்றி (Informed Consen) பெரியவர்களுக்கும் ஒப்புதல் இன்றி (அதன் சாதக/பாதங்களை விளக்கிய பின்னரும்?!) யாருக்கும் இதைக் கொடுக்க கூடாது. இது “உரிமை மீறல்” பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும். விஷயம் தெரிந்து கொள்வது (Right to correct) சாதக/பாதகங்களை (விளக்கப்பட்டால் தானே?) தெரிந்த பின்னர் தன் உடல் நலன் குறித்தான முடிவெடுக்கும் உரிமைகள் நோயாளிகள்/மக்கள் தெரிந்து பின்பற்றுவது முக்கியமானது. குறிப்பாக இந்தியாவில் பலரும் சத்துகுறைவால் பாதிக்கப்பட்டு, எடைக் குறைந்தும், இரத்த சோகையால் பாதிக்கப் பட்டும் இருக்கும், தற்போதைய சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது கொஞ்சம் கூட பொருந்தாத ஒன்று.

யார் யாருக்கு இத்தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டும் என (CDC-USA) வரையறுத்ததைக் காண்போம்.

1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களுக்கு (Hbs Ag Positive) பிறக்கும் குழந்தைகளுக்கு

2. விபரீதமாக Hbs Ag இரத்தம் ஒருவர் உடம்பில் கலக்கும் (இது பரிசோதிக்காத இரத்தம் ஒருவர் உடம்பில் ஏற்றுகையில் இதன் பாதிப்பு வரலாம்)

3. Hbs Ag Positive உள்ள ஒருவரிடத்து உடலுறவு கொள்ளும்போது இதன் பாதிப்பு ஏற்படலாம்.

4. குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மஞ்சள் காமாலையின் பாதிப்பு (Acute Hepatitis B Infection) இருக்கையில் அக்குடும்பத்திலுள்ள 1 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு ஏற்படலாம் என்பதற்காக கொடுக்கலாம்.

அரசு சுகாதாரத்திற்கென ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். மஞ்சள் காமாலை தடுப்பூசியை பொறுத்தவரை மருத்துவர்களால்/மருந்து குழுமங்களால் உருவாக்கப்படும் தேவையற்ற, பொய்யான மாய வலையில் சிக்காமல் இந்நோய் பரவ முக்கிய காரணமாக நீர், இரத்தம்/இரத்தப்பொருட்கள் ஒருவருக்கு ஏற்றுகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உரிய பாதுகாப்புகள், பொதுவான நோய் எதிர்ப்பு சக்தியை அனைத்து மக்களும் பெற, அனைவருக்கும் (குறிப்பாக ஏழைகளுக்கு) அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் திட்டங்கள் (அனைவருக்கும் உரிய இடம், உண்ண சத்தான உணவு (வறுமை நீங்கி) அனைவருக்கும் வேலைப்பாதுகாப்பு, நிரந்தர வேலை, தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்படல்), உடுக்க உடை, பாதுகாக்கப் பட்ட குடிநீர் கிடைக்கச் செய்வதே நிரந்தர தீர்வை நோக்கிய பாதையாக அமையும். தடுப்பூசிகளை விடவும் இவை முக்கியமானவை. நீண்ட கால, நிரந்தர தீர்வைப் பற்றியான கண்ணோட்டத்துடன் பார்த்தால் அவை செலவு குறைந்து இருப்பது தெளிவாக புரியும்.

தடுப்பூசி/மருந்தின் சாதக பாதங்களை விளக்கி, பின் மக்கள்/நோயாளிகள் கொடுக்கும் ஒப்புதல் (iகேடிசஅநன உடிளேநவே) இல்லாமல் குழந்தைக்கோ/பெரியவருக்கோ தடுப்பூசி கொடுத்தால், அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சட்டப்படி மருத்துவர்களும், மேலும் அத்தடுப்பூசியை உயர்த்திப் பிடிக்கும் மருந்து உற்பத்தி யாளர்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ, ஏன் அரசோ பொறுப்பேற்க வேண்டும்.

மஞ்சள் காமாலை ஆட்கொல்லி தடுப்பூசியை தவிர்க்கவும்

By Barry Forbes The Tribune/ Thomson News paper, Sunday Feb 07, 1999 “Who is calling the shots” நிகழ்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் பின் விளைவுகள், பாதிப்பு காரணமாக அது கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது. அதில் பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட “Hep B” மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டம், அவ்வூசி “Multiple Sclerosis” எனும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வியாதியை ஏற்படுத்தியதின் விளைவாக நிறுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் விளைவாக Multiple Sclerosis என்னும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டதால், UK Smithkline Beechem நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற முடிவு அவ்விருவருக்கும் அந்த மருந்து குழுமம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

கனடா நாட்டில் 18,000 நான்காம் வகுப்பை சேர்ந்த மாணவர்களைக் காக்க Manitoba என்னுமிடத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், மஞ்சள் காமாலை தடுப்பூசி பின் விளைவுகள் காரணமாக நீதி கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். Wyoming, Newhampshire, Illinois (USA) போன்ற பிற மாநிலங்களிலும் பெற்றோர் இத்தடுப்பூசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் 1990-1998 -க்கு இடைப்பட்ட காலத்தில் 17,497 பேர் காமாலை தடுப்பூசியின் பின் விளைவுகளால் ( Adverse Reactions) பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 5,983 பேர் உயிரை பாதிக்கும் அளவிற்கு, மருத்துவமனையில் அவசியம் சேர்ப்பதற்கு, நிரந்தர உடல் ஊனத்திற்கோ, இறப்பு... முதலியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1999-ல் 0-1 வயது அமெரிக்க குழந்தைகளில் 54 பேருக்கு மட்டுமே அந்நோயின் தாக்கம் தென்பட்டுள்ளது. ஆனால் அதே வருடத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3.9 மில்லியன். 1 வயதிற்கு கீழான குழந்தைகளின் பாதிப்பு விகிதம் 0.001%. இது மிக, மிகக் குறைவு. அதனால் அங்கு தடுப்பூசி கட்டாயமயமாக்கப்படவில்லை.

Who wins? அமெரிக்க பொதுமக்களே இத்தடுப்பூசி திட்டத்தின் காரணமாக பணரீதியாகவும்/பிறரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலனடைந்திருப்பது the foxes in charge of the henhouse-Merch, Smithkline beechem எனும் பெரும் மருந்துக் குழுமங்கள் தான். அமெரிக்க சட்டப்படி, தடுப்பூசியின் பின் விளைவுகளுக்காக இவ்விரு மருந்து நிறுவனங்களையும் நீதி மன்றத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது. Merch நிறுவனத்திற்கு மட்டும் இத்தடுப்பூசி விற்பனையின் விளைவாக கிடைக்கும் ஒரு வருட பணம் 1 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Dr.Bonnie Dunbar - செல்களில் (cell) ஏற்படும் மாற்றங்கள் குறித்தான ஆய்வில் மிக முக்கியமானவர். மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு பிறகு பலரும் இறப்பு உட்பட மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், எனத் தெளிவாக கூறியுள்ளார். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 140-320 பேர் தான் மஞ்சள் காமாலை (Hepatitis ‘B’ Virus) காரணமாக இறக்கின்றனர்.

15,000 பிரஞ்ச் குடிமக்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கெதிராக அரசு மீது தொடர்ந்த வழக்கின் காரணமாக பின் விளைவுகள் இருப்பதை அரசு ஒப்புக் கொண்டு அக்டோபர் 1998ல் பிரஞ்ச் சுகாதார அமைச்சகம் குழந்தைகளுக்கு கட்டாயமாக கொடுத்து வந்த மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தை கை விட்டது. National Vaccination Information center கணக் கெடுப்புபடி அமெரிக்காவில் 1996ல் மட்டும் 14 வயத்திற்கு கீழ் 872 பேர் காமாலை தடுப்பூசி காரணமாக, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 13 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவில் திரு. பாஸ்கரராவிற்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி பாதிப்பின் காரணமாக 70 பேர் தொலைபேசி செய்ததாகவும், 2 இறப்புகள் நிகழ்ந்ததாகவும் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆகஸ்டு 2004ல் சேலத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுத்து பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி உள்ளது. கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டினம் குப்பத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தீபனுக்கு (தற்போது வயது 5) மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக வலிப்பு நோய் வந்துள்ளது.

1990ல் இங்கிலாந்தில் 598 மருத்துவர்களை உள்ளடக்கிய ஆய்வில் 50% மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட மறுத்துள்ளனர். அரசு மருத்துவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் இருப்பதை சுட்டிக் காட்டியும் 50ரூ மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். (British Medical Journal 27.01.1990).

மஞ்சள் காமாலை தடுப்பூசியானது, மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவரின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுவதால் (அவர்களுக்கு AIDS வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதால்) ஊசி போடப்படுபவர்களுக்கும் AIDS தொற்றும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் விளைவாகவே AIDS திட்டமிட்டு பரப்பப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகளில் தான் அமெரிக்காவில் முதலில் மஞ்சள் காமாலை தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அங்கு தான் AIDS தாக்கம் அதிகம் இருந்ததாக ஆதாரங்கள் உள்ளன.

பெரும்பாலான குழந்தைகளைப் பொறுத்தவரை, காமாலை தடுப்பூசியில் கிடைக்கும் பாதுகாப்பைக் காட்டிலும், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் 100 மடங்கு அதிகம் என்று Dr. Jane orient தலைவர் (AAPS) கூறுகிறார். 1991ல் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்கப்பட்ட 358 காம்பிய (Gambia) குழந்தைகளில் 20ரூ மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. (Lancet Study).

கல்பாக்க கதை: அணுசக்தி நிர்வாகமும், மஞ்சள் காமாலை தடுப்பூசியும்.

மருத்துவரான நான் கல்பாக்க கதிர்வீச்சின் பாதிப்பை (Multiple Myloma - எனும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய், இந்தியாவிலே, கல்பாக்கத்தில் அதிகம் என்றும், அதற்கான காரணம் இங்குள்ள கதிர்வீச்சு தான் என (புள்ளி விபரங்களுடன்) நிறுவிய பின், அதுவரை பெருமளவில் சுற்றுப்புற மக்களுக்கு ஒன்றும் செய்யாத அணுசக்தி நிர்வாகம், பல மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தி (என்னை ஓரங்கட்ட) அதில் மஞ்சள் காமாலை தடுப்பூசியை இலவசமாக பலருக்கும் கொடுத்து (கெடுத்து) வருவது வேடிக்கையாக உள்ளது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை (இக்கட்டுரையை) படித்த பின் என்ன சொல்ல போகின்றனர் என்பதை கேட்க ஆவலாக உள்ளது. இங்குள்ள அதிகாரிகள் அமெரிக்கர்கள் செய்யும் எதற்கும், எதிராக செய்வதை நினைத்து ஒரு வகையில் சந்தோஷமே. அமெரிக்காவில் Multiple Myloma - வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை கொடுக்கப்படுகிறது. இங்கு அது இல்லை. அங்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயமயமாக்கப்படவில்லை. இங்கு அதை அவர்கள் ஒருவேலை கட்டாயமாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மருத்துவ முகாம்களில் கலந்து கொண்ட பல அணு சக்தி மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை, என்பதும் குறிப்பிடத் தக்கது.

பின் குறிப்பு:

“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது”

மருத்துவ சேவையை கடும் எதிர்ப்பிற்கிடையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தாலும் அதன் மூலம் தண்டனை பெற்றவர்கள் மிகமிகக் குறைவே. இந்திய உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பானது, மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்காக குற்றவியல் வழக்கு அவர்கள் மீது தொடர முடியாது என்றும், பாதிப்பு/இறப்பிற்காக நஷ்ட ஈடு மட்டுமே கோர முடியும் என்பது மருத்துவர் கையில் எல்லையற்ற அதிகாரத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இது நீதிமன்றங்கள் மக்கள் உரிமை/நலன்கள் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளன என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

உதவி: திரு. பாஸ்கரராவ் பேட்டி
Pharmabiz இதழ் ஜனவரி 2003

Pin It