இணக்கமான சூழலொன்றில்
உருவாகிவிட்டது உன்சிருஷ்டி
இருளறையில் கருமைக்கோளமாய்த்
திரண்டிருக்கிறாய்
மிகமென்மையாகத் தான் உணரவேண்டும் உன்னை
ஆனால்
என் உடலைச் சிறுகடுகெனப் புரட்டி எறிகிறாய்.
திடுமெனப்
பூரணத்துவம் பெற்று
புகைப்படலமாகிறாய் எங்களுள்
வரையறுக்கப்பட்ட ஆண்டுக்கணக்கில்
மறைபொருளாகிறாய்
வழியற்று ரத்தமும் சதையுமாக உன்னை வெளியேற்ற
எழுந்த படபடப்பு என்னுள் அடங்க
எவ்வித எதிர்ப்பு மற்றுக்
கரையும்
உன் மெளனத்துடன்
என் சம்மதமும்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!