உலகம் இன்று செய்திகளால் நிரம்பி வழிகிறது. நடப்புகள் அனைத்தும் செய்தியாக்கப் படுகின்றன. ஏதோவொரு ஊடகத்தில் அவை பதிவு செய்யப்படுகின்றன.

போட்டிகள் நிறைந்த இத்துறையில், பரபரப்பான செய்திகள் தேவைப்படுகின்றன. சுடச் சுட பரிமாறப்பட வேண்டியது அவசிய மாகிறது. தவறும் ஒவ்வொரு கணமும், அது செய்தியைச் சாகடித்து விடக்கூடும்.

ஒவ்வொரு செய்தியாளனும் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம். துறைசார்ந்த நெருக்கடிகள் ஒருபுறமென்றால், அறம் சார்ந்த நெருக்கடிகள் மறுபுறம். மற்ற எந்த வேலையை விடவும் செய்தியாளனாக, தன்பணியைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தனி மனிதனின் அறம் சார்ந்த கடமை மிகமுக்கியமானது. உயிர் காக்கும் மருத்துவருக்கு இருக்கும் அதே கடமையும் பொறுப்பும் ஒரு செய்தியாளனுக்கு உண்டு. சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே.

சமூகத்தின் மீதிருக்கும் பொறுப்பும் அக் கறையுமே ஒரு மனிதனை நல்ல செய்தியாளனாக மாற்றக்கூடும்.

ஒரு நடப்பை செய்தியாக்குவது எதற்காக? செய்திகளை உலகம் அறியச் செய்வது எதன் பொருட்டு? பணம் செய்யவா? பரபரப்புக்காகவா? இல்லை..! அப்படி இருக்கக் கூடாது விழிப் புணர்வுக்காக. ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்? விழிப்புணர்வே மனிதனைக் காக்கும்.

இப்படி மனிதம் காக்கும் பணியில் எண்ணற்ற செய்தியாளர்கள் உலகம் முழுவதும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு செய்திக்காக அவர்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காது.

செய்தியாளர்களில் பல வகை உண்டு.

சினிமா, அரசியல், வணிகம், அறிவியல், விளையாட்டு எனத் தொடரும் இப்பட்டியலில் போர் செய்தியாளர் என்பதும் ஒரு பிரிவு. போர் நடக்கும் இடங்களில் போரின் ஊடாகப் பயணித்துச் செய்திகளைத் தருபவர்களைப் ‘போர் செய்தியாளர்’ (War corres pondent) என்கிறோம்.

 இவர்களின் பணி மிகக் கடுமையானது. மரணங்களின் ஊடாகப் பயணிப்பவர்கள். பல மரணங்களைச் செய்தியாக்குபவர்கள். சில சமயங்களில் தாங்களே செய்தியாகுபவர்கள். ஆமாம். உலக முழுவதும் பணியில் மரணமடைந்த, பணியின் பொருட்டு மாண்டுபோன, செய்தியாளர்கள் பலர் உண்டு.

அண்மையில் கொல்லப்பட்ட ‘மேரி கொல் வினை’ நாம் அறிவோம். பணியில் கொல்லப்பட்ட செய்தியாளர்களின் புள்ளி விவரத்தைப் ‘பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு’ (committee to protect journalists) என்னும் அமைப்பு வெளியிட் டிருக்கிறது.

2012-இல் மட்டும் 17 செய்தி யாளர்களும் 1992-இலிருந்து இக்கட்டுரை எழுதப்படும் வரை 911 செய்தியாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 179 செய்தியாளர்கள் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

உலகின் இருபது அபாயகரமான நாடுகள் மற்றும் அந்நாடுகளில் கொல்லப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை:

1. ஈராக் :  151

2. பிலிப்பைன்ஸ் :  72

3. அல்ஜீரியா : 60

4. ரஷ்யா :  53

5. கொலம்பியா : 43

6. பாக்கிஸ்தான் : 42

7. சொமாலியா: 40

8. இந்தியா : 28

9. மெக்ஸிக்கோ : 27

10. ஆப்கானிஸ்தான்: 24

11. பிரேசில் : 21

12. துருக்கி : 20

13. போஸ்னியா : 19

14. இலங்கை : 19

15. ருவாண்டா : 17

16. தாஜிக்ஸ்தான் : 17

17. சியரா லியோன் : 16

18. வங்காளம் : 12

19. இஸ்ரேல் மற்றும் ஆக்கிர மிக்கப்பட்ட பாலஸ்தீன மண் டலம்: 10

20. நைஜீரியா: 10

இதில் பெரும்பாலான நாடுகளில் போர்கள் நடந்து கொண் டிருக்கின்றன. பாகிஸ்தான், பங்காள தேஷ் போன்ற நாடுகளின் ஆட்சி அமைப்பு முறையில் இருக்கும் குறையை நாம் அறிவோம். ஆனால் இந்தியாவில்? எட்டாமிடம்.

இருபத்தெட்டு செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் தினகரன் எரிப்பில் கொல்லப்பட்ட வினோத் குமார், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூவரின் கணக்கு தனி. மேலும் காரணம் தெரியாத கொலைகளின் வரிசையில் 18 செய்தியாளர்கள் வருகிறார்கள்.

உலக முழுவதும் 160 செய்தியாளர்கள், போரில் செய்தி சேகரிக்கும்போது கொல்லப் பட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 22, 2012-இல் கொல்லப்பட்ட மேரி கொல்வினிக்கு பணயம் வைத்துச் செய்திகளைச் சேகரிக்கிறார்கள்? தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் அளவிற்கு அப்படி என்ன கதை அங்கே இருக் கிறது? அவர்களின் உயிரைவிடப் பெரிதாக எதை நினைக் கிறார்கள்?

இக்கேள்விகளுக்குப் பதில் வேண்டுமாயின், அவர்களோடு நாம் பயணித்தால் மட்டுமே கண்டெடுக்க முடியும்.

 ‘The Bang Bang Club’ என்னும் திரைப்படம் நமக்கு அப்படியான ஒரு வாய்ப்பை ஏற் படுத்தித்தருகிறது. கனடிய -----_- -தென் ஆப்பிரிக்கப் படமான இதை ‘ஸ்டீவன் சில்வர்’ (Steven Silver) இயக்கி இருக்கிறார்.

‘கெவின் கார்ட்டர்’ (Kevin Carter), கிரெக் போரினொவிச்’ (Greg Parinovich), ‘கென் ஓஸ்டர் புக்’ (Ken Oosterbroek) மற்றும் ‘ஜோவா சில்வா’(João Silva) ஆகிய நான்கு, போர் புகைப் படச் செய்தியாளர்களின் போர் அனுபவத்தைச் சொல்லுகிறது இப் படம்.

தென்னாப்பிரிக்காவின் நிற வெறிப் போரில், குறிப்பாக 1990 முதல் 1994-க்கு இடைப் பட்ட காலக்கட்டத்தில், இந்த நான்கு புகைப்படக்காரர்களுக்கு நடந்த அனுபவத்தை பதிவுச் செய்திருக் கிறது. இந்த நால்வர் குழுவின் பெயர் தான் The Bang Bang Club’.

இந்நால்வர் குழு சந்திக்கும் சிக்கல்களையும், போராட்டத்தையும், மனவுளைச்சலையும் இப்படம் விவரிக்கிறது. ‘கிரெக் போரினொவிச்’ 1991- இலும், ‘கெவின் கார்ட்டர்’ 1994-இலும் புலிட்சர் விருதுகளைப் பெற்றார்கள். 18, ஏப்ரல் 1994- இல் ‘கென் ஓஸ்டர்புக்’ பணியில் இருக்கும்போது துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். 1994 சூலையில் ‘கெவின் கார்ட்டர்’ தற்கொலை செய்து கொள்கிறார். (மனசாட்சியை உலுக்கிய புகைப்படம்) பிறகு 2010 அக்டோபரில் ஆப்கா னிஸ்தானில் கந்தகர் போரின் போது ‘ஜோவா சில்வா’ கண்ணி வெடியில் கால் வைத்ததனால் தன் இரு கால்களையும் இழக்கிறார்.

கிரெக் போரினொவிசும் ஜோவா சில்வாவும் இணைந்து எழுதிய இதே பெயரைக் கொண்ட புத்தகத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப் பட்டிருக்கிறது.

படத்தைப் பாருங்கள். போர்க்களத்தின் ஊடே ஒரு புகைப்படக்காரனாக பயணிப் பதில் இருக்கும் சவால்களையும் சாகசத்தையும் மட்டுமல்ல மானுடத்தையும் காணமுடியும்.

Pin It