ஈழத்தமிழினம் ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்திருக்கிறது. 2.85 லட்சம் மக்கள் சிங்கள இனவெறி அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழினம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. தமிழகத் தமிழர்கள் புழுங்கிச் சாகின்றனர். இத்தகையச் சூழலில், ஈழத்தமிழர்களின் இந்த அவல நிலைக்குக் காரணமான சிங்கள இனவெறி அரசையோ, அதற்கு முழு உதவிகள் புரிந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளையோ கண்டிக்க வக்கில்லாத ஒரு கூட்டம், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும், போராட்ட இயக்கத்தையும், இயக்கத் தலைமையையும் வேண்டுமன்றெ கொச்சைப்படுத்தியும், அவதூறு செய்து எழுதியும் பேசியும் மகிழ்ச்சி கொள்கிற மனசாட்சி இல்லாதவர்களாக இன்றைக்கும் உலவி வருகின்றனர்.
ஒரு இனவாத அரசு தன்னால் ஒடுக்கப்படுகின்ற ஓர் இனம், அதன் விடுதலைக்காகப் போராடும் பொழுது அந்த இனத்தில் உள்ள பலவீனமான குழுக்களை முதலில் அடையாளம் காணும் வேலையைச் செய்யும். அப்படி அடையாளம் காணும் குழுக்களை நேரடியாக ஒடுக்குகின்ற இனத்தின் ஆளும் வர்க்கம், தன்னுடன் இணைத்துக் கொள்வதும் உண்டு. மாறாக, அவர்களை இருக்குமிடத்தில் அப்படியே வைத்துக் கொண்டு அங்கிருந்து நீங்கள் எங்களுக்கான வேலையை செய்யுங்கள் என உத்தரவிடுவதும் உண்டு. டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் முதல் வகையறா. “இந்து வெறி” அ.தி.மு.க., பார்ப்பனீய பா.ச.க., பூணூல் கம்யுனிஸ்ட்கள் மட்டுமின்றி முற்போக்கு முகமூடி போட்டுத் திரியும் ம.க.இ.க, உள்ளிட்ட அமைப்புகள், “துக்ளக்” சோ, சு.சுவாமி, “இந்து” என்.ராம், அ.மார்க்ஸ், இரயாகரன், சோபாசக்தி உள்ளிட்ட முற்போக்கு முகமூடிகள் அணிந்த தனிநபர்கள் என இரண்டாம் வகையறா பட்டியல் நீள்கிறது.
அ.தி.மு.க., பா.ச.க., பார்ப்பனக் கம்யுனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளையும், சோ, சு.சுவாமி, இந்து ராம் போன்றவர்களைப் பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை. அவர்கள் நேரடியாக எதிரி முகாமில் எச்சம் தின்பவர்கள் என்பது வெளிப்படை. ஆனால், ம.க.இ.க., இரயாகரன், அ.மார்க்ஸ், சோபா சக்தி உள்ளிட்டவர்கள் அப்படியானவர்கள் அல்ல. அதாவது சிங்கள அரசின் வெளிப்படையான சேவகர்கள் அல்ல. மறைமுக சேவகர்கள் அவ்வளவே. ம.க.இ.க.வினரின் அரசியலைக் கேள்விக்குட்படுத்தி எழுதப்பட்ட எமது முந்தைய கட்டுரைக்கு “கீற்று” இணையதளத்தில் சிலர் எதிர்வினை புரிந்திருந்தனர். கேள்விகளுக்கு பதில் கேட்டால் அதற்குப் பதிலளிக்காமல் அக்கேள்விகளை மறுபடியும் கேள்விக்குட்படுத்துவதும், “நக்கல்” அடித்து பேசி கேள்வியை திசைமாற்றுவதும், வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு “நாங்கதான்டா புரட்சியாளர்கள்.. நீங்களெல்லாம் துரோகிகள்/எதிரிகள்" என்று நகைச்சுவை செய்வதும் இவர்களுக்கு கைவந்த கலை என்பதனை இவர்களது கமெண்ட்டுகள் நமக்கு உணர்த்தியது.
விமர்சனம் என்ற போர்வையில் ம.க.இ.க., இரயாகரன் உள்ளிட்டோர் செய்து வரும் வேலைகளை மென்மையான முறையில் அ.மார்க்ஸ், சோபா சக்தி வகையறாக்கள் “முற்போக்கு” முகமூடியில் ஒளிந்து கொண்டு செய்கின்றனர்.
ஈழவிடுதலைக்கு உதவ முடியாமலும், தம் இரத்த சொந்தங்களை போர் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாமலும் போய் விட்டதே என்ற வருத்தம் தமிழ்நாட்டுத் தமிழர் மனதில் ஆறாக் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிங்கள அரசிற்கு உதவிகளை வாரி இறைத்து சிங்களனுடன் “நட்புறவு” பேணும் இந்தியாவின் இவ்வகை போக்கால், இந்த வருத்தம், இந்திய அரசின் மீதான கோபத்தை கிளறிவிட்டிருக்கிறது. இந்திய அரசின் மீது மட்டுமல்ல, தமிழ்நாட்டை இந்திக்காரர்களுக்குக் காட்டிக் கொடுத்து லாபம் பெறும் தமிழ்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் மீதும் தமிழக மக்களுக்கு இயல்பானதொரு கோபமும் இருக்கின்ற நிலையில், இவற்றைத் தணிக்க பெருந்திட்டம் தீட்டி வருகின்றது, ஆரிய இந்திய அரசு. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் தமிழ்நாட்டில் எழுந்து வரும் தமிழ்த் தேசியம், ஈழவிடுதலை குறித்த கருத்தியல்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றது, இக்கூலிக் கும்பல.
விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள்
“புலிகள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. வடதுசாரிய சிந்தனையுள்ளவர்களாக இருந்தனர். சாதி ஒழிப்பைப் பற்றி எங்கும் அவர்கள் பேசவில்லை. புலிகள் முஸ்லிம்களை விரட்டினார்கள். சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து புலிகள் செயல்படவில்லை. மாற்று இயக்கத்தினருடன் இணைந்து பணியாற்றவில்லை. தமிழ் மக்களை புலிகள் அழித்தொழித்தனர்”
- மேற்கண்டவை தாம் புலிகள் மீதான இக்கூலிக்கும்பலின் பிரதான குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்புவதால் இவர்கள் எல்லோரும், ஏதோ சனநாயகவாதிகள் என்றோ, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்றோ கருத முடியாது. என்.ஜி.ஏ. அமைப்புகள் செய்யும் பணிகளுக்கு பின்னால் ஏகாதிபத்தியம் எப்படி ஒளிந்து கொண்டுள்ளதோ அதே போன்று தான் இவர்களது நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஆரியம் ஒளிந்து கொண்டுள்ளது. இவர்களது செயல்பாடுகளை உற்று நோக்கினால், சிங்களப் பேரினவாதம் செய்யும் வேலையை இவர்கள் நம்முடன் இருந்து கொண்டே செய்கிறார்கள் என்பது புலப்படும். இன்னும் சரியாக சொல்லப் போனால், சனநாயகம், மார்க்சியம் போன்ற முற்போக்கு கருத்தியலின் சொல்லாடல்களைக் கொண்டு, அவதூறுகளை அள்ளி வீசும் அற்பத்தனங்களை திறம்பட செய்பவர்கள் இவர்கள் என வரையறுக்கலாம்.
புலிகள் என்றுமே விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் கிடையாது. அவர்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தான். அந்த விமர்சனத்தை அவர்கள் மீது எழுப்புகின்றவர்களின் நோக்கமும், விதமும் தான் விமர்சனங்களை எழுப்புபவர்களின் அரசியலைத் தீர்மானிக்கிறது. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கம், தன் மீதான விமர்சனங்களுக்கு ஏற்ப தன்னை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும் என்று இவர்கள் எண்ணுவதில்லை. மாறாக, அப்போராட்ட அமைப்பு மீது சேறடித்து வீழ்த்துவதன் மூலம், சிங்களப் பேரினவாதத்திற்கு மறைமுகமாக துணை போவது தான், இந்த எழுத்துப் போர் “ஏகாம்பரங்களின்” வேலைத்திட்டம்.
கீற்று இணையதளக் கட்டுரையின் பின்னூட்டத்தில் ம.க.இ.க. தோழர் ஒருவர் எழுதியிருந்தார், ”நல்ல நண்பன் குறைகளை சுட்டிக் காட்டுவான்” என்று. நான் திருப்பிக் கேட்கிறேன், “நீங்கள் என்றைக்கு புலிகளுக்கு நண்பனாக இருந்தீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்”. வாய்த்திறந்தாலே “புலிகள் பாசிஸ்ட்கள்” என்று சொல்வதும், எழுதுவதும் தவிர தமிழ்நாட்டில் இவர்களது ம.க.இ.க.வும் அதன் தலைமையும் ஈழத்திற்காக செய்த வேலை தான் என்ன? “பிரபாகரன் ஒரு பாசிஸ்ட்டு” - “புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கம்” என்று வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் இவர்கள் முழங்காமல் அடக்கி வாசித்ததும், புலிகள் சர்வாதிகாரிகள் என்று சொல்லி விட்டு பின்னர், அவர்களுக்கே ”வீரவணக்கம்!” போட்டுக் கொண்டதும் தானே இவர்களது ”வீரதீர” நடவடிக்கைகள்.
விமர்சனம் என்ற பெயரில் தான் மேற்கொண்டுவரும் காட்டிக்கொடுப்பு வேலைகளையும், அவதூறுகளையும் இதுவரை யாருமே அங்கீகரித்தில்லை என்பது தெரிந்தும் அதனை மட்டுமே தொடர்ந்து செய்து வரும் இவர்களது “வீரதீர” நடவடிக்கைகள் வேடிக்கையாக இருக்கிறது. ஈழப் போராட்டம் பற்றி இவர்கள் எழுதுவதை கண்டாலே இதனை தெரிந்து கொள்ளலாம். இவர்களைப் போன்ற சிங்கள இனவெறி அரசின் துணைக்குழுக்கள் எழுப்பும் கேள்விக்கெல்லாம் நாம் பதிலெழும் பட்சத்தில் அவர்கள் திருந்திவிடப் போவதில்லை. மாறாக, அப்படிப்பட்ட துரோகக் குழுக்களில் உண்மை தெரியாமல் சிக்கியிருக்கும் அப்பாவி தமிழ் இளைஞர்களை மீட்டெடுப்பதற்கும், அவர்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களை உடைத்தெறியவுமே அவை உதவும்.
புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லையா?
புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லை என்று இக்குழுக்கள் கூறுகின்றன. இதற்கான பதிலை புலிகளே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்ட “சோசலிச தமிழீழம்” என்று தலைப்பிடப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் வேலைத் திட்டம் குறித்த நூலில் இதற்கான பல விளக்கங்கள் உள்ளன. அதன் முதற்பகுதி விடுதலைப்புலிகள் இயக்கமும், தேசிய விடுதலைப் போராட்டமும் என்று தலைப்பிடப்பட்டது. இரண்டாம் பகுதி அரசியல் வேலைத்திட்டமும் கொள்கை விளக்கமும் என்று தலைப்பிடப்பட்டதாகும். இந்நூலை தற்பொழுது எடுத்துக்காட்டுவதன் நோக்கம், புலிகள் இயக்கம் வீரியமுடன் செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்தே மேற்கொண்டு வந்த பல கொள்கைகளும், வரையறுப்புகளும் தற்பொழுது பெரும்பாலானோர்க்கு தெரிந்திருப்பதில்லை. அதனால் இதனை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறேன்.
அதே நேரத்தில், தொடக்கத்தில் லட்சிய உறுதியுடனும் போர்க் குணத்துடனும் செயல்படத் தொடங்கியவர்களில், இறுதி வரை அதே போர்க்குணத்துடனும் லட்சிய உறுதியுடனும் நீடித்தவர்கள் சிலரே. ஆனால், புலிகள் அவ்வாறல்லாமல், தனது தொடக்க காலத்தில் தனக்கென வரையறுத்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இறுதி வரை கடைப்பிடித்தனர். அதனால் தான் அவர்களது இயக்கம் இன்று வரை உலகத் தமிழர் மனதில் நீங்கா இடத்துடனும், உலக வரலாற்றில் வேறு எந்த கெரில்லா விடுதலைப் போராட்ட இயக்கமும் செய்திராத மாபெரும் சாதனைகளை செய்தும் உள்ளது.
“எமது இயக்கம் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியல் இலட்சியமே ஆயுதப் பாதையை வழிநடத்த வேண்டும் என்பதில் நாம உறுதியாக இருக்கிறோம்.
ஆரம்பகாலத்திலிருந்து எமது இயக்கம் அரசியல் பிரிவிலிருந்து இராணுவ அமைப்பை வேறுபடுத்தவில்லை. பதிலாக, இரு பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்ட அரசியல் - இராணுவ வேலைத் திட்டத்தின் அடிப்படையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டம் ஆயுதப் போராட்டத்தை ஒரு அதியுயர்ந்த அரசியற் போராட்ட வடிவமாகவே கொள்கிறது."
(பக்கம் 9 பத்தி 2இன் பிற்பகுதி முதல் பத்தி 3 வரை, முதல் பகுதி)
இது 1980களில் புலிகளால் எழுதப்பட்டது. ஒரு அரசியல் சக்தியாக இல்லாவிட்டால், புலிகள் அம்மண்ணில் கடந்த 35 வருடங்களாக காலூன்றி நின்றிருக்க முடியாது. மக்களை அரசியல்மயபடுத்தியதன் காரணமாகத்தான், புலிகள் கைகாட்டியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். மக்களை அரசியல்படுத்தியதால் தான், “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற பிரகடனம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று இன்றைக்கு உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகின்றது. புலம் பெயர் மக்களை புலிகள் அரசியல்படுத்தியதால் தான் அவர்கள் புலம் பெயர் நாடுகளில், அந்தந்த நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் மக்கள் திரளாக அவர்களால் வளர முடிந்திருக்கிறது. இவ்வாறு, ஈழத்தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தனது இராணுவ நடவடிக்கைகளின் மூலமாகவே அரசியல்படுத்தியவர்கள் புலிகள். இவர்களைப் பார்த்து மக்களை அரசியல்படுத்தவில்லை என்ற குற்றம் சாட்டுகின்றது, இக்கூலிக் கும்பல்.
புலிகள் மீது மட்டுமின்றி, தமிழகத்தில் ஆயுததாங்கியப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மாவோயிஸ்டுகள் மீது ம.க.இ.க. - புதிய ஜனநாயகக் கும்பல் அவதூறுகளை அள்ளி வீசின. புதிய ஜனநாயகத்தின் இந்த அவதூறுகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தனர். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக புதிய ஜனநாயகமும் ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தது. அவ்வெளியீட்டில், புதிய ஜனநாயகம் தானே அம்பலப்பட்டது.
“அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம்தான் ஆயுதப் போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணரச் செய்யவேண்டும்” என்று நாம் கூறுவதையும் மாவோயிஸ்டு அமைப்பினர் ஏளனத்துடன் மறுக்கிறார்கள்.”
(மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் கருவிலே சிதைவது ஏன்?, பு.ஜ.வெளியீடு, சனவரி 2008, பக்கம் 63, பத்தி 3 தொடக்கம்)
அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம் தான் ஆயுதப் போராட்டம் என்று தானே கூறும் ம.க.இ.க. - புதிய ஜனநாயகக் கும்பல், அதனை புலிகளோ, மாவோயிஸ்டுகளோ செய்தால் தூற்றுவார்களாம். அவதூறு செய்வார்களாம். அதனை அவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமாம். மற்ற யார் செய்தாலும், அது சாகசவாதம் என்பார்களாம். நக்சல்பாரிகளின் ஆயுததாங்கிய எழுச்சி மிக்க போராட்டத்தைப் பற்றி புகழ்ந்தும் இவர்கள் எழுதுவார்கள், அதே சமயம் அதனை சாகசவாதம் என்றும் வாதாடுவார்கள். இவர்களது துண்டறிக்கைகள் பலவற்றில், “ஆயுதாங்கிய பாதையில் அணி திரள்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், 30 வருடங்களாக தன்னை நம்பியுள்ள தோழர்களிடம் அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியது கிடையாது. இது தான் இவர்களின் அரசியல் லட்சணம். அப்பாவித்தனமாக இவர்களிடம் சிக்கியிருக்கும் இளைஞர்களின் நிலை தான் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
புலிகள் வலதுசாரிச் சிந்தனையுள்ளவர்களா?
தனது இலக்கு சுதந்திர சோசலிச தமிழீழத் தனியரசே என்று முதலிலேயே தனது அரசியலை பிரகடனப்படுத்தியவர்கள் புலிகள். தேசிய இன விடுதலைப் பற்றிய மார்க்சியப் புரிதல்களுடன் தான் அவர்களது போராட்ட இயக்கம் கட்டமைக்கப்பட்டது. தேசிய விடுதலையும், சோசலிச சமூகப் புரட்சியுமே தமது இயக்கத்தின் அடிப்படை அரசியல் இலட்சியங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்டவை.
உலகமயம் அழித்து வரும் தேசிய இன அடையாளங்களை பாதுகாப்பதன் மூலமும், தேசிய இன அடையாளத்தை மீட்டெடுப்பதன் மூலமும், தேசிய இன விடுதலைக்குப் போராடுவதன் மூலமும் உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் புலிகள். ஈழ மண்ணில் எந்தவொரு ஏகாதிபத்தியமும் காலூன்ற முடியாத படி தனது இராணுவத்தைக் கட்டமைத்தது புலிகள் இயக்கம். ஏகாதிபத்தியம், காலனித்துவம், நவ-காலனித்துவம், இனவாதம் ஆகியவையே உலக மக்களின் பொது எதிரிகள் என்று புலிகள் வரையறுத்திருந்தனர்.
“தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. அதே சமயம், எமது சமூகத்தை பிரபுத்துவ சமூக வடிவமாகவும் சித்தரிக்க முடியாது. தமிழீழ சமுதாய அமைப்பானது தனக்கேயுரிய ஒரு தனித்துவமான பொருளுற்பத்தி வடிவமாகத் திகழ்கிறது. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு சிக்கலான பொருளாதா அத்திவாரத்தில் எமது சமுதாயம் கட்டப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் எமது சமுதாயத்திற்கு அத்திவாரமாக விளங்கும் பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்குமுறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது.
எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்.”
(பக்கம் 11 பத்தி 8 மற்றும் 9, இரண்டாம் பகுதி)
1980களில் எழுதப்பட்ட மேற்கண்ட வரிகள், புலிகளின் தமிழ்ச் சமூகத்தின் மீதான புரிதல்களையும், மார்க்சிய இயங்கியல் கண்ணோட்டத்திலேயே தமிழர் பிரச்சினையை புலிகள் அணுகியதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
சாதி ஒடுக்குமுறை பற்றி புலிகள் பேசவில்லையா?
சாதிய ஒடுக்குமுறை பற்றி புலிகள் எங்குமே பேசவில்லை. யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்தினரின் மனநிலையே புலிகள் இயக்கத் தலைமையின் மனநிலை என்று ஒரு பெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த அவதூறுகளுக்கும் புலிகளின் முதல் அரசியல் அறிக்கையே பதில் அளிக்கிறது.
“எமது சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு சாபக்கேடாகவும் சமூக சமத்துவத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருந்துவருவது சாதியக் கொடுமையாகும். சாதிய அமைப்பு எமது கிராமியப் பொருளாதார வாழ்வுடன் ஒன்று கலந்திருக்கிறது. வர்க்க அமைப்புடன் இணைப்பெற்றிருக்கிறது. தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள் உற்பத்தி உறவுகளுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. மத சித்தாந்த உலகிலிருந்து வேரூன்றி வளர்ந்திருக்கிறது.
தொழிலின் மகத்துவத்தை இழிவுபடுத்தி, மனிதனை மனிதன் வேறுபடுத்தும் இந்த மூட வழக்குமுறையை முற்றாக ஒழித்துக்கட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது. சாதியத்தின் பெயரால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து நசுக்கப்பட்டுவரும் தமிழீழப் பாட்டாளி வர்க்கத்தின் விடிவிற்காக எமது இயக்கம் அயராது உழைக்கும். உழைப்பின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச பொருளாதாரத் திட்டத்தை அமுலாக்குவதன் மூலமும், புரட்சிகரமான கல்விமுறை வாயிலாகவும் இந்த சமூக தீமையை எமது இயக்கம் ஒழித்துக்கட்டும்.”
(பக்கம் 12 பத்தி 1 மற்றும் 2, இரண்டாம் பகுதி)
சாதியைப் பற்றி எங்குமே புலிகள் பேசவில்லை என்ற அவதூற்றை, 1980களிலேயே எழுதப்பட்ட புலிகளால் எழுதி வெளியிடப்பட்ட அரசியல் அறிக்கையின் மேற்கண்ட வரிகள் தோலுரித்துக் காட்டுகின்றன. சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் உடனடியாக அதனை ஒழிக்க முடியாது என்பதையும் அதற்கு தொடர்ச்சியான நீண்டகாலத் திட்டங்கள் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்பதனை இவை காட்டுகின்றன. புலிகள் இயக்கத் தோழர்கள் அவரவர் சொந்த சாதியிலேயே திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்ததை இச்சமயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
முஸ்லிம்கள் மீதான அணுகுமுறை
இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தனித்துவமான ஒர் இனக்குழு என்றும் முஸ்லிம்களின் தாயகம் வடகிழக்குப் பிரதேசமே என்றும் புலிகள் அங்கீகரித்திருந்தனர்.
“வடகிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவான தாயகத்தையும், பொதுவான மொழியையும், பொதுவான பொருளாதார வாழ்வையும், பொதுவான நலன்களையம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் ஒன்றிணைந்த சமூகப் பொருளாதா வாழ்வு காரணமாக ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் தங்கியிருப்பதால் தமிழரும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்ட சக்தியாக ஒருங்குசேர்ந்து தமது உரிமைக்காகப் போராடுவது அத்தியாவசியமானதாகும். முஸ்லிம் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், தமது நலன்களை அடைந்து நல்வாழ்வு காண வேண்டுமென்றால், முக்கியமாக, தமது இன, மத, கலாச்சார தனித்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால் தமிழருடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, தமிழருடன் ஒருங்கிணைந்து போராடுவதே சாலச்சிறந்ததாகும்.”
(பக்கம் 13 பத்தி 7, இரண்டாம் பகுதி)
“தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தைக் குலைத்து, தமிழ்த் தேசிய ஒன்றியத்திணை சிதறடிக்கும் நோக்கத்துடன் சிங்கள இனவாத அரசானது தமிழர் முஸ்லிம் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டிவிடும் நாசகார முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு எமது பொதுத் தாயகப் பூமியையும் படிப்படியாக விழுங்கி வருகின்றது. பொதுவான எதிரியையும், பொதுவான இலட்சியங்களையும் எதர்கொள்ளும் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.”
(பக்கம் 14 பத்தி 1, இரண்டாம் பகுதி)
புலிகள் முஸ்லிம் மக்களுடன் உறவு பேண விரும்பியதையும், அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஈடுபாட்டையும் புலிகள் கொண்டிருந்தனர் என்பதனை மேற்கண்ட வரிகள் தெளிவுபடுத்துகின்றன.
காலப்போக்கில், முஸ்லிம் மக்கள் சிங்கள இனவெறியர்களுடன் உறவு பேணியதால், சில உரசல்கள் ஏற்பட்டன. முஸ்லிம் மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில், புலிகளின் முதல் முஸ்லிம் போராளியின் படத்தைத் தாங்கியபடி “ஒன்றிணைந்து போராடுவோம்” என்று புலிகளின் அரசியல் பிரிவு ஒரு புத்தகத்தையும் இந்நேரத்தில் வெளியிட்டது. அந்த புத்தகத்தில் புலிகள் முஸ்லிம் மக்களுக்கும் தமிழர்களுக்குமான பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை முறியடிக்க ஒன்றிணைந்து போராடுதல் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தி இருந்தார்கள்.
சிங்களப் பேரினவாதம் தமிழ் - முஸ்லிம் மக்களிடையிலான உறவை சீர்குலைத்து, பகைமையைக் கட்டமைக்கும் வழிமுறைகளில் ஈடுபட்டிருந்ததையும் புலிகளின் வெளியீடுகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தன. ஆனால், முஸ்லிம் இனவாதக் குழுக்கள் பல உருவாக்கப்பட்டு, சிங்கள இனவெறி சக்திகளுடன் இணைந்து கொண்டு ஆயுதம் தரித்து தமிழர்களை வேட்டையாடிதை வரலாறு கண்டது.
சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து நடவடிக்கைகளில் பல முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டு வந்தன. இவர்களுக்கு எதிராக புலிகளின் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட சிலரை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரானவர்கள் புலிகள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. மூதூர் வெளியேற்றம் குறித்து மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுகின்ற பலரும், அந்த வெளியேற்ற நடவடிக்கைக்காக புலிகள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது குறித்து வாய்த்திறக்காமல் முடிக்கொள்வதற்கு, பின்னணியில் பேரினவாதம் தான் ஒளிந்து கொண்டுள்ளது.
சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடவில்லையா?
“சிறீலங்காவின் பாசிச அரசானது தமிழ் பேசும் மக்களது விரோதி மட்டுமின்றி ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சிங்களப் பாட்டாளி மக்களதும் பிரதான எதிரியாகும். இந்தப் பாசிச அரச இயந்திரத்தை இயக்கிவரும் ஆளும் வர்க்கமானது தமிழருக்கு எதிரான இனவெறியைக் கிளறிவிட்டு தனது ஆட்சி அதிகாரத்தை நீடித்து வருகிறது. பேரினவாத சித்தாந்தத்தைப் பரப்பி தமிழ் - சிங்கள பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டையும் சிதறடித்து வருகிறது. இந்தப் பேரினவாத பாசிச அரசையே விடுதலைப் புலிகள் இயக்கம் தனது எதிரியாகக் கருதுகிறதே தவிர, சிங்களப் பொது மக்களை அல்ல. சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தோழமை சக்தியாகவே எமது இயக்கம் செயல்படும். சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக நாம் முன்னெடுக்கும் சுதந்திரப் போராட்டம் சி்ங்களப் பாட்டாளி வர்க்கத்தின் சுபீட்சத்திற்கும் வழி வகுக்கும் என்பது திண்ணம்.
.... சுதந்திர தமிழீழத்தில் தமிழ் பேசும் மக்களோடு ஐக்கியமாக வாழவிரும்பும் சிங்கள மக்களை தமிழீழப் பிரஜைகளாக ஏற்று, அவர்களுக்கு சகல சனநாயக சுகந்திரங்களையும், உரிமைகளையும் வழங்க எமது விடுதலை இயக்கம் முடிவு செய்திருக்கிறது.”
(பக்கம் 14 பத்தி 1, இரண்டாம் பகுதி)
தனது முதல் கொள்கை அறிக்கையிலேயே தெளிவுடன் சிங்களப் பாட்டாளி வாக்கத்துடன் இணைந்து போராட தயாராக இருந்ததாக புலிகளின் மேற்கண்ட வரிகள் தெரிவிக்கின்றன. புலிகளின் இம்முடிவை அங்கீகரித்து தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து போராட முற்பட்ட சிங்கள பாட்டாளி வர்க்க சக்திகள் ஏதேனும் ஒன்றையாவது இந்தக் கூலிக்கும்பல் அடையாளம் காட்ட முடியுமா?
முடியாது. சிங்கள இனத்தில் அப்படிப்பட்ட பாட்டாளி வர்க்க சக்திகளே இல்லாத நிலையில், தமிழ்த் தேசிய இனம், தனது விடுதலைப் போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு, சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கம் எழுந்து நிற்கிற வரை சிங்கள இனவெறிக் கும்பலின் ஒடுக்குமுறைகளை தாங்கிக் கொண்டு அப்படியே அழிந்து போக வேண்டுமாம். இது தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று புளுகுகிறது, சோபாசக்தி, அ.மார்க்ஸ், ம.க.இ.க. கும்பல். இது தான் இந்திய சிங்கள ஆரியக் கும்பலின் ஆசையும் கூட..
“ஒன்றுபட்ட இலங்கை” என்ற பெயரில் ஓலமிடும் இந்திய சிங்கள ஆரியக்கும்பலின் முழக்கத்திற்கும் “சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுங்கள்” என்று முழக்கமிடும் ம.க.இ.க., சோபாசக்தி உள்ளிட்ட ஆரியக் கூலிக்கும்பலின் முழக்கத்திற்கும் வித்தியாசம் இது தான். ஆசியக் கும்பல் “தேசிய ஒருமைப்பாடு” என்று கூச்சலிடுவதை, இந்தக் கூலிக்கும்பல் மார்க்சிய சாயம் புசி வாந்தி எடுக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம். இந்தியாவின் போலிக் கம்யுனிஸ்டுகளின் “ஒன்றுபட்ட இலங்கை” முழக்கத்தையே அதிலிருந்து பிறந்த ம.க.இ.க.வும் வலியுறுத்துகிறது. பாட்டாளி வர்க்க சர்வதேசிய சாயமடித்து பார்ப்பனியத்தை திணிக்கும் கலையில் ம.க.இ.க.விற்கு நிகர் அவர்களே தான்.
முதலில் தமிழ் இனம் ஒர் அங்கீகரிக்கப்பட்ட தேசத்தை பெற வேண்டும் அதற்குப் பிறகு தான் சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து சர்வதேசியத்தைப் பற்றி சிந்திக்க முடியும் என்று இக்கும்பல் சொல்வதற்கு வக்கில்லை. ஆனால், தனித்தமிழ் ஈழத்திற்காக போராடும் புலிகளை மட்டும் சிங்களர்களைப் போலவே இவர்களும் சேர்ந்து இழிவுபடுத்துவதை மட்டும் தவறாமல் செய்வார்களாம். என்னே இவர்களது சர்வதேசியம்..!
ஒரு பாட்டாளி வர்க்கம் தனக்கான ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட இறையாண்மையுள்ள ஒர் ஆட்சிப் பகுதி இருந்தால் தான் அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தையும், உலகு தழுவிய உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வதேசியப் போராட்டத்திலும் பங்கெடுக்க இயலும். தனக்கருககில் உள்ள அண்டை தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடவும் இயலும். இதுவே மார்க்சிய அடிப்படை.
ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய விடுதலைக்கான தீர்வை இன்னொரு நாட்டின் பாட்டாளி வர்க்கம் வரையறுக்கக் கூடாது என்றும் சிலர் சொல்கிறார்கள். தனித்தமிழ் ஈழக் கோரிக்கை தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை என்பது போல அரைவேக்காட்டுத் தனமாக புரிந்து கொண்டிருக்கும் ம.க.இ.க. கும்பலின் கூற்று இது. ஈழசிக்கலுக்கு தமிழ்த் தேசிய இன மக்கள் நாடிய தீர்வே தனித்தமிழ்ஈழம் என்பது. இதனை அவர்கள் 1977இல் நடந்த தேர்தலில் மெய்ப்பித்தார்கள். இதனடிப்படையில் தான் புலிகளும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தனித்தமிழ் ஈழமே தமது இலட்சியம் என கொண்டனர். இது ம.க.இ.க.விற்கு நன்கு தெரியும். ஆனால், அதை அவர்கள் எவ்வாறெல்லாமோ மழுப்பி கடைசியில் “ஒன்றுபட்ட இலங்கை” குட்டைக்குள்ளும் “பாட்டாளி வர்க்க சர்வதேசிய” சொல்லாடல்களிலும் விழுந்து விடுவார்கள்.
ஒடுக்குகின்ற இனத்தின் பாட்டாளி வர்க்கம் தனது விடுதலைக்காக முன்னெழுந்து போராடுகின்ற நிலையில், ஒடுக்கப்படும் இனத்தின் பாட்டாளி வர்க்கம் அதனுடன் சேர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்க சக்திகள் இல்லாத நிலையில், ஒடுக்கப்படும் இனம் எவ்வாறு அவர்களுடன் சேர்ந்து செயல்பட இயலும்?
ஜனதா விமுக்தி பேரமுனா கட்சி சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கக் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டு, இன்று சீரழிந்த இனவாதக் கட்சியாக உள்ளது. இது போன்ற சிங்களப் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இனவாதத்தில் விழுந்து போவதற்குக் காரணம் என்ன? சிங்கள உழைக்கும் மக்களின் உளவியல் தான் காரணம். இவ்வாறான உளவியலைக் கொண்ட சிங்கள உழைக்கும் மக்கள், தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்தின் விடியலுக்காக இதுவரை செய்தது தான் என்ன? செய்யப் போவது தான் என்ன? ஒன்றுமில்லை.. ஆனால் இவை பற்றி எண்ணாமல், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் உறவு பேணவே புலிகள் விரும்பினர். எழுச்சியுடன் ஜே.வி.பி. வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர்களுடன் உறவு பேண புலிகள் முயற்சி எடுத்தனர். “ஹீரூ” -HIRU என்ற ஜே.வி.பி. ஆதரவு பத்திரிக்கை புலிகளின் முயற்சியை வரவேற்று, புலிகளின் கொள்கைகளையும் அங்கீகரித்து எழுதியது. பின்னால், அப்பத்திரிகையின் ஆசிரியர் துரத்தியடிக்கப்பட்டு அம்முயற்சி ஜே.வி.பி.யாலேயே உடைத்தெறியப்பட்டது. இது மறுக்க முடியாத உண்மை.
புலிகள் மாற்று இயக்கத்தினருடன் இணைந்து செயல்படவில்லை என்கிறார்கள். மாற்று இயக்கத்தினர் என்று இக்கூலிக்கும்பல் சொல்லும் அனைத்து இயக்கங்களையும் அவர்களே “ஒட்டுக்குழுக்கள்” என்று தான் விமர்சிப்பார்கள். சிங்கள பேரினவாதத்துடன் இந்திய ஆரியத் தலைமையுடனும் சமரசம் செய்து கொண்ட அது போன்ற ஒட்டுக்குழுக்களுடன் புலிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கு “சேவகம்” புரிய வேண்டுமாம். இதைத் தான் இந்தக் கூலிக்கும்பல் விரும்புகிறது. அதாவது, சிங்கள பேரினவாதத்துடனும், இந்திய உளவுத்துறையினருடனும் சமரசம் செய்து கொண்டு புலிகள் இருக்க வேண்டுமாம். இந்த ஒரு வாதமே இந்தக்கூலிக்கும்பலை யாரென அம்பலப்படுத்துகின்றது. தமிழ் மக்களை புலிகள் கொல்லுகிறார்கள் என்று சிங்களர் குரலில் பேசும் இந்தக் கூலிக்கும்பலுக்கும், அந்தக் கூலிகளே “சதியாளர்கள்” என விமர்சிக்கும் இந்து என்.ராம், பார்ப்பன செயா, சோ, சு.சுவாமி போன்றவர்களுக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்?
தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தும் இந்தத் துரோகக் குழுக்கள், இந்த விமர்சனங்களை எழுப்புகின்ற போர்வையில் ஒளிந்து கொண்டு நீங்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினால் மட்டும் இருந்த இடம் தெரியாமற் காணாமற் போய்விடுவார்கள். புலிகளின் மீது இந்த ஆரியக் கூலிக்கும்பலுக்கு இருக்கும் வன்மம், புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்த் தேசிய சக்திகளையும் விட்டுவைப்பதில்லை.
இந்தியாவின் ராஜதந்திரம் தோற்றுவிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அய்யா கூறிவருகிறார். இன்னும் இந்தியத் தேசிய மனநிலையிலிருந்து முற்றிலும் விடுபடாத அவரது இக்கருத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் இந்தியத் தேசியததை ஏற்பவர்கள் தாம் என்று முழங்கி வரும் ம.க.இ.க.வின் பார்ப்பனீய செயல்பாடுகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.
உண்மையான தமிழ் உணர்வாளர்கள், இந்தியத் தேசியத்தை ஏற்கவில்லை என்பது இந்த கும்பலுக்கு நன்கு தெரியும். இருந்தாலும், அவ்வப்போது நெடுமாறன் போன்ற பலவீன சக்திகளை மய்யப்படுத்தி தமிழ் உணர்வாளர்களை, இனவாதிகள் எனறு சேறடிக்க வேண்டும் என்று செயல்படுவது இவர்களது தமிழ்நாட்டு வேலைத்திட்டத்துள் ஒன்று. இது தனது எஜமானர்களிடமிருந்து ம.க.இ.க. கற்றுக் கொண்ட பார்ப்பனிய ராஜதந்திரம் போலிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகத் தான், புலிகள் மீது எப்படி யாழ்ப்பாண வெள்ளாளர் மனநிலை உள்ளவர்கள் என்று முத்திரைக் குத்தப்படுகின்றதோ அதே போல, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் மீது தொடர்ந்து ஆதிக்க சாதி வெறி முத்திரை குத்தப்படுகின்றது. புலிகளுக்கு சோபாசக்தி போல, தமிழ்நாட்டு தமிழ்த் தேசியர்களுக்கு மதிமாறன் போன்றவர்கள் இதற்கேற்ப செயல்படுகின்றனர்.
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் குறிப்பிட்டது போல, தமிழர் என்ற ஒற்றுமை உணர்வை சீர்குலைக்கவே உளவுத்துறையினர் சட்டக்கல்லூரி சாதி மோதலை தூண்டியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. ஈழத்தில் ஏற்பட்டுள்ள இன அழிவால் தமிழகத்தில் தற்பொழுது ஓரு தமிழ்த் தேசிய அலை மெல்ல எழுந்து வருகின்றது. அனைத்துத் தரப்பிலிருந்தும் “நாம் தமிழர்” என்ற முழக்கம் சாதி வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி மெல்ல அரும்பி வருகின்றது. இச்சூழல் ஆரிய இந்தியத் தலைமைக்குத் தலைவலியைக் கொடுத்துள்ளது. இதனை சீர்குலைக்க மற்றொரு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழர் என்ற அடையாளத்தை அழித்து சாதி வேற்றுமையை முதன்மைப்படுத்துவது தான் அது. இல்லையெனில், எப்பொழுதோ எழுந்த ஒரு விவாதத்தை “நாம் தமிழர்” என்று எல்லோரும் உணர்ந்து வரும் இவ்வேளையில் வெளியிட்டு, தமிழ்ச் சமூகத்தின் சாதி வேற்றுமைகளை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என்று எண்ணுகிற “குமுதம்” இதழ் குசும்பிற்கு சற்றும் சளைக்காத மதிமாறன்கள் தற்பொழுது வேகமாக செயல்படவேண்டிய அவசியம் என்ன?
நட்பு சக்திகள் போல் வேடமிட்டு வரும் சீர்குலைவு சக்திகளை நாம் அடையாளம் கண்டு கொண்டால் தான் நாம் எதிரியை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும் என்ற புரிதலை நாம் பெற்றாக வேண்டும். இது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. இந்தக் கூலிக்கும்பலில் சிக்கியிருக்கும் இளைஞர்கள், இனியாவது சிந்திக்க வேண்டும்.
- அதிரடியான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
டாக்டர் அய்யா,
உங்களது கேள்வியும் குமுறலும் நியாயமானதுதான். இங்கே ’சேட்டுக்களையும ், சேட்டான்களையும் ’ எதிரியாக்க் காட்டி தமிழ் தேசம் கேட்பவர்களுக்கு ம், மராட்டியர்களின் உரிமைக்காக கூப்பாடு போடும் தாக்கரேக்களுக்க ும் என்ன வித்தியாசம். தமிழக உழைக்கும் மக்களுக்கும் மராட்டிய உழைக்கும் மக்களுக்கும் எதிரி யார்? இவர்களைச் சுரண்டிக் கொழுக்கும் பெருமுதலாளிகளும ், நாட்டை விற்கும் தரகு முதலாளிகளுதானேய ொழிய பிற மாநிலத்தவனோ, பிற இனத்தவனோ கிடையாது.
இதை மறைக்கத்தான் அம்பானியின் ஸ்பான்சரில் இனவெறி ஆட்டம் போடுகிறான் ராஜ்தாக்கரே.
////இத்தனைக்கும ் உங்களது கட்சி தமிழ் நாட்டைத் தவிர வேறெங்கும் இடையாது. ஆக, எந்த நெருக்கடியும் இல்லாத நீங்கள் தமிழ்த்தேசம் கேட்பதுதானே முறை? ////
உங்களது கட்சி (எது என்று எனக்குத் தெரியாது, இருந்தாலும்...) இலங்கையில் இருக்கிறதா? ஈழத்தில் ஒடுக்கப்படுகின் ற மக்களுக்காக நேர்மையாக்க் குரல் கொடுக்கிறீர்கள் அல்லவா, அதுபோலத்தான் இதுவும். பேசப்படுகின்ற கருத்து சரியானதா அல்லது தவறானதா என்பதில் ஊன்றி நின்று நியாயமாகவும் நேர்மையாகவும் மக்களிடம் சென்று பேசினால் போதும், என்று நினைக்கிறேன்.
///அன்றிலிருந்து இன்று வரை அனைத்து அழிவையும் தமிழனுக்கு செய்யும் இந்தியாவிலிருந் து விடுபடுவது தான் தமிழனுக்கான ஒரே வழி. இது கட்சிகளுக்கப்பா ல் உள்ள சாதாரண மக்களின் புரிதல்.///
ஒட்டுமொத்த இந்தியாவையும் அதற்குள் ஒரு தேசிய இனமாகச் சிறைபிடிக்கப்ப் ட்டிருக்கும் தமிழ்நாட்டையும் ஒரு சேர மொட்டையடித்து மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய – தரகுமுதலாளித்து வ கூட்டு எப்படிப்பட்ட்து என்பதை இனியாவது சற்று கூர்ந்து கவனியுங்கள், தமிழர்களின் எதிரி யார் என்று தெளிவாகப் புரியும், அய்யா.
படித்து முடித்ததும்... சுகுணா அவர்களின் கருத்து தான் எனக்கும் தோன்றியது.
இப்படி ஏட்டளவில் புலிகள் எழுதியுள்ளதை எடுத்துப்போட்டு எழுதிய அபத்த கட்டுரைக்கு கீற்று ஏன் பதிகிறது என்பது ஆச்சர்யம்.
தமிழ் தேசியர்கள், புலி ஆதரவாளர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் விடுகிற வாய்சவடால்களை தொடர்ச்சியாக ம.க.இ.க. அம்பலப்படுத்துவ து இவர்களுக்கு வருகிற எரிச்சல் இருக்கிறதே! அப்பப்பா!
அதிரடியான் தொடர்ந்து மக.இ.க. வை (!) பற்றி அவதூறுகளை அள்ளி வீசுகிறாரோ இல்லையோ! ம.க.இ.க இவர்களை தொடர்ந்து அம்பலப்படுத்தும ்.
எனக்கு பால் தாக்கரே பற்றியோ மோர் தாக்கரே பற்றியோ கவலை இல்லை! எனக்கு எனது தேசம் பற்றித்தான் கவலை. அன்றிலிருந்து இன்றுவரை தமிழருக்கு துரோகம் மட்டுமே செய்யும் இந்தியாவிலிருந் து பிறிவது தானே தமிழருக்கு நல்லது? மராத்தியனுக்கு இந்தியா இந்த அளவு துரோகம் செய்யவில்லை. துரோகம் செய்யப்பட்ட மக்கள் காஷ்மீர மக்கள், அஸ்ஸாம் மக்கள், நாகாலாந்து மக்கள், தமிழ் மக்கள். இவர்கள் எல்லோருமே தனி நாடு கேட்கின்றனர். இதில் தவறு உண்டா?
நீங்கள் சொல்லுகிற மளையாள "சேட்டன்கள்" தான் தமிழினத்தை ஈழத்தில் அழித்தவர்கள். அவர்கள் எமது எதிரிகள். டிக்ஷித் என்ற சேட்டன். மேனன் என்ற சேட்டன். நாராயணன் என்ற சேட்டன். நம்மியார் என்ற ஐ.நா வின் சேட்டன். கோபிநாத் என்ற ஐ.நா வுக்கான இந்திய தூதன் சேட்டன். இந்தப் பட்டியல் மிக நீண்டது தம்பி! சேட்டன் ஒரு ஒட்டுண்ணி! Parasite. அவனுக்கு தனித்தேசம் தேவையில்லை என்றிருப்பவன். அதனால் தான் அவன் பார்ப்பனீயத்தோட ும், முதலாளிய சேட்டுகளோடும் கூட்டு சேர்ந்து இந்தியாவைக் கட்டியாளும் ஒரு சக்தியாகத் திகழ்கிறான். எங்கு பார்த்தாலும் சேட்டன்களின் ஆதிக்கம் தான். ஒடுக்கப்படும் இந்திய தேசிய இனங்களின் ஒட்டுமொத்த எதிரி அவனும் தான்.
தரகு முதலாளிகள் இந்திய தேசிய இனங்களை சிறை வைத்துள்ளார்கள் , நம்மையெல்லாம் சுரண்டுகிறார்கள ் என்பீர்கள். அதைச் செய்கிற சேட்டுகளைக் காட்டி தமிழத்தேசம் பேசினால் அதை கொச்சைப் படுத்துவீர்களா? ஏனிந்த அபத்த முரண்கள்? நீங்கள் எழுதுவதை ஒருமுறையாவது, திரும்பிப் படிப்பதுண்டா?
ஈழத்தில் எம்மக்கள் கொடூரமாக, லட்சக்கணக்கில் கொல்லப்ட்ட போது இந்தியாவின் எந்த உழைக்கும் வர்க்கமும் தமிழனுக்காக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. ஆக, அவர்களைப்பற்றி தமிழன் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீர் வேண்டுமானால் கவலைப்படும். ஆனால், எம்மக்களை மடையர்களாக்க முயற்சிக்காதீர் . அவனவன் சிக்கல்களை அவனவன் தீர்த்துக் கொள்ளட்டும். எம்மைப்பற்றி சற்றும் கவலைப்படாதவன் பற்றி அலட்டிக் கொள்ளும் பத்தாம்பசலிகளல் ல தமிழர்கள். அந்தக் காலம் மலை ஏறிவிட்டது. தமிழன் விழித்தக் கொண்டான்.
தமிழனுக்கு எதிரி யார் என்று நீர் சொல்லி எனக்கு விளங்கவண்டியதில ்லை. இதையெல்லாம் புரிந்துகொள்ளும ் ஆழந்த அறிவும், நேர்மையும், கருத்துத் தௌிவும் எமக்குண்டு.
நிறைய எழுதுங்கள் ஏலைவன். அது உங்களை மக்களுக்கு அடையாளம் காட்டும். நாங்கள் விரும்புவதும் அது தான்.
இயற்கை சீற்றமானாலும், எதிரிகளின் சுரண்டலாயாருந்த ாலும், தனது தேசத்தின் ஆதிக்க சக்திகளின் சுரண்டலாக இருந்தாலும், மிகவும் பாதிக்கப் படுவது பொருளாதார பாதுகாப்போ, சமூக பாதுகாப்போ இல்லாத விளிம்பு நிலை மக்கள் தான்.
(ஆனால், ஈழத்தில் இன்று அந்த நிலை வெகுவாக மாறிவிட்டது. கொடூர எதிரியை எதிர்கொள்ளும் அவர்கள், தமக்குள் உள்ள வேற்றுமைகளைக் களைந்து கொண்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் மாபெரும் மனமாற்றங்கள் உண்டாகியுள்ளன. தமிழகத்திலும், ஈழ சோகத்தின் பின்னனியில், சாதிக்கெதிரான மனமாற்றங்கள் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது என்பதை, களப்பணி ஆற்றுகின்றவன் என்ற முறையில் என்னால் நன்கு உணர முடிகிறது.)
ஆனால், அப்படிப்பட்ட விளிம்பு நிலை ஈழவர் சமூகத்தைச் சேர்ந்த பிரபாகரனைத்தான் , பாஸிஸ்டுகள் என்று அன்றிலிருந்து, (ஒட்டுமொத்த உலகத்தின் கயமையால் ஒழித்துக்கட்டப் பட்டுள்ள) இன்று வரை, இந்தப் பார்ப்பனீய ம.க.இ.க. தூற்றிக்கொண்டுள ்ளது.
ஏதோ பிரபாகரணிண் தவறுகளால் தான் அவர்கள் அழிக்கப்பட்டார் கள் என்பது போன்ற ஒரு சித்திரத்தை இந்தக் கும்பல் வலிந்து வரைய முற்படுகிறது. இதற்கு உள் நோக்கமுண்டு.
இன்று சிங்களக் கம்மனாட்டிகளின் அட்டூழியங்களைப் பற்றியும், இந்தக் கேடுகெட்ட இந்திய அரசின் துரோகக் கொடூரங்களைப் பற்றியும் பல உண்மைகள் வௌிவந்த வண்ணம் உள்ள நிலையில், ஈழ மக்களின் ஞாயமான வேட்கைகள் பற்றி தமிழகத் தமிழர்களிடம் பரிதாப உணர்வு வந்து விடக்கூடாதென்று திட்டமிட்டு செயல்படுகிறது ம.க.இ.க. ஞாயத்தை நம்மக்கள் உணர்ந்தால் தமிழ்த்தேசத்திற ்காக அணிதிரள்வார்கள் பாருங்கள்! ம.க.இ.க. தான் இந்திய தேசிய வாதிகளாயிற்றே! இப்போது புரிகிறதா கலை?
நான் சமீபத்தில் தான் இந்தியா சென்றுவந்தேன். அங்கு, (உ. பி. பீகார், ம.பி. யில்) ஒடுக்கப்பட்ட மக்கள், பள்ளிகளில் தனியாகத் தான் அமர்கிறார்கள். அனைத்து வேற்றுமைகளும் அவர்கள் மீது திணிக்கப்படுகின ்றன, இன்றும்; சற்றும் குறைவில்லாமல்.
தமிழ் நாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள் கலை. ஒரு சில இடங்களைத் தவிர பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழக ஒடுக்கப்பட்ட சமூகம், பொருளாதாரத்திலு ம், சமூக அந்தஸ்த்திலும் வளமான மாற்றங்களை அடைந்துவருகின்ற னர். உங்களிடம் யதார்த்தமான, பரிவான அனுகுமுறை இருக்குமானால் இந்த மாற்றங்கள் துரிதமாக நடக்கும்.
நமக்குள் வேறுபாடுகளைக் களைந்து ஒரே தமிழ் சமூகமாக மலர கடுமையாக உழைத்துக் கொண்டுள்ளோம். நம்பிக்கையோடு ஒத்துழையுங்கள். ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்காலமும் மிளிரும்.
நாங்கள் ஆயிரம் பெயர்களில் எழுதினாலும் நாங்கள் எங்களை ம.க.இ.க வினர் என்று அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
உங்கள் அரசியல் என்ன, நீங்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது எமக்கு தெரிய வேண்டாமா.உங்களி டம் அதை தான் கேட்டேன்.
இப்பொழுது வரை உங்கள் கட்டுரையில் மேல் விமர்சனம் வைக்காமல் பேசி கொண்டு இருப்பது தான் நம்ம அம்பியின் தம்பிகள் வேலை...அதிலும் பாருங்க நம்ம ஏகலைவன் பேர மாத்தி மாத்தி ஒரே சமயத்துல 3 பதிவு போட்டு குழலி என்பவரின் பதிவில் பதில் சொல்லாமல் ஓடி வந்தவர் என்பது சிறப்பு செய்தி..
அம்பிகளின் தம்பிகள் தங்கள் புரச்சியை நடத்தி இன்னும் பல கீ போர்டுகளையும், மெளஸ்களையும் உடைக்க எல்லாம் வல்ல காரல்மார்க்ஸை வேண்டுகிறேன்.
வணக்கத்துடன்
லார்ட் லபக்கு தாஸ்
தார்மீக ஆவேசம் பொங்க இங்கு குதித்தாடும் அதிரடியான், அவரது ஆரம்ப கட்டுரையில் தோழர்கள் செய்த எதிர்வினைகளை அவதூறு என்றும் அவற்றில் ஒன்றுமே இல்லையென்றும் மிகச் சுலபமாக ஒதுக்கித் தள்ளியுள்ளார். யாரும் அவற்றை பார்க்கப் போவதில்லை என்ற தைரியமா அல்லது தொடர்ந்து இது போல அவதூறு மழையை பொழிந்தால் பழைய விவாதங்கள் மறைந்துவிடுமே என்ற கோயபல்ஸ் தந்திரமா என்பதை படிக்கும் வாசகர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.
இப்பொழுது அந்த பழைய விவாதங்களை அதிரடியானின் முன்பு மீண்டும் வைக்க விரும்புகிறேன்.
அதிரடியானைப் போல சுட்டி கொடுக்காமலேயே அவதூறு என்ற தூற்ற மாட்டேன். மாறாக, அதிரடியானின் அந்த குறிப்பிட்ட கட்டுரைக்கான சுட்டியைத் தருகிறேன். (keetru.com/.../...)
அவரது குறிப்பிட்ட அந்த முதல் கட்டுரை முற்றிலும் பொய்களும், புனைச்சுருட்டுக ளும் நிரம்பியது என்பதை அம்பலப்படுத்தும ் பின்னூட்டங்கள்:
#1)
2009-06-17 04:08:00
[email protected]
//தேசியத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடித ் துள்ளிக் குதித்த ஒரே கும்பல் ம.க.இ.க. - பு.ஜ. பு.க. கும்பலாகத் தான் இருக்கும்.//
இந்த பொய்க்கு எதுவும் ஆதாரம் இருக்கா? வாய்க்கு வந்த பொய்களை எழுத ஒரு தேசியவாதி வேசம் வேறு..
//’நீங்களே பாசிஸ்ட் என வரையறுத்தவர்களு க்கு ஏன் வீரவணக்கம் செலுத்துகிறீர்க ள்?’ என்று விசாரித்தால் ‘இல்லை. தோழர்.. அதான் இப்ப டிரண்ட்.. அதனால் தான்..’ என்று ஆரம்பித்து லெனின், மாவோ உட்பட பல தலைவர்களை மேற்கோள் காட்டி விளக்கம் பேசுவார்கள். பா//
இப்படி அந்த தோழர்களிடம் கேட்டீர்களா? அவர்களிடம் கேட்க்காமெலேயே உங்களுக்கு விருப்பமான கருத்துக்களையெல ்லாம் ம க இகவின் மீது ஏற்றி அதனை மறுத்து விமர்சனம் செய்யும் நேர்மையற்றத்தனத ்திற்கு நீங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். அது சுயமரியாதையுள்ள வன் செய்யக் கூடிய செயல். உங்களிடம் எதிர்பார்க்கலாம ா என்று தெரியவில்லை.
ஈழ போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரையான அவர்களின் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக சல்லிசான விலையில் விற்று வருகிறார்கள். படித்து பாருங்கள். பிறகாவது உங்கள் கண் திறக்கிறதா என்று பார்க்கலாம்.
புரச்சி
#2)
2009-06-17 04:11:00
[email protected]
//ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாகவும் தான் செயலலிதா இன்று வரை கூறி வருகிறார். இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?//
அப்படியா? விடுதலை புலிகளை சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்ளச் சொல்லி தனது தவறுகளை சரி செய்து கொள்ளச் சொல்வதுதான் ம க இகவின் நிலைப்பாடு என்பது எனது புரிதல்.
ஒருவேளை நீங்கள் நம்புவது போல புலிகளை எதிர்ப்பதுதான் அவர்களின் நிலைப்பாடு எனில் அதனை ஏன் கேள்வி வடிவில் கேட்கிறீர்கள்? (இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?)
உங்களுக்கே தெளிவாக தெரியாத ஒன்று என்ற பயத்தில்தானே அந்த கேள்வி.
இது முற்றிலும் ஒரு காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்டுரை. நேர்மையான எந்தவொரு விமர்சனமோ, கேள்வியோ இல்லாத ஒரு கட்டுரை
#3)
2009-06-17 04:52:00
[email protected]
//‘ம.க.இ.க.வின் மறைமுகப் பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்தியத் தேசியமும்’ என்று தனியொரு நூலே எழுதியுள்ளார். மேலும் ‘தாழ்த்தப்பட்டவ ர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை மறைமுகமாக பறித்திட அறைகூவல் விடுத்தது, இதே ம.க.இ.க. தான். இதனை மணியரசன் நடத்தும் தமிழர் கண்ணோட்டம் இதழ் அம்பலப்படுத்தியது.//
விடுதலைப் புலிகள் குறித்த ம க இக கருத்துக்களை விமர்சிப்பார் என்று பார்த்தால் அதிரடி அதிரடியாக தனது பழைய அரிப்புகளையெல்ல ாம் பட்டியலிடுகிறார ். பிழைத்துப் போகட்டும் அதனையும் ஒரு முறை பார்த்து விடலாம்.
ம க இ கவின் இடஓதுக்கீட்டு கொள்கை குறித்து புத்தகம் உள்ளதே அதனை மறுத்த் பே.ம உள்ளிட்டோர் எதுவும் எழுதவில்லையே ஏன்? இதே இணையத்தில் மயிர்பிளக்க இரு வருடம் முன்பு கூட ம க இகவுடன் சர்வ கட்சி கூட்டணியினர் விவாதம் செய்தனரே அவர்கள் எல்லாம் கடைசியில் பதுங்கி பம்மி ஓடினரே ஏன்? உங்களுக்கு விருப்பம் எனில் அந்த சுட்டிகளை தருகிறேன் நீங்கள் அந்த விவாதத்தை தொடருங்கள். அம்பலமாவது யார் என்று தெரிந்து விடும்.
'தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ இது அம்பேத்கரின் முழக்கம். அம்பேத்கரை மறுப்பதுதானே பெ.ம கும்பலின் நுண்ணரசியலும் கூட. கருணாநிதியின் நாக்கை வெட்டுவேன் என்று ஒரு ஆர். எஸ். எஸ் பன்றி சொன்ன போது இந்து மதத்தை கருணாநிதி விமர்சிப்பது தவறு என்று கட்டையை திருப்பிப் போட்டு அடித்தவர்தானே இந்த பார்ப்பன, இந்து மத ஆதரவு பெ.மணியரசன்.
இந்திய தேசியத்தை எதிர்ப்பவர்கள் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள ்? இந்து, இந்தி, இந்தியா என்ற அடிப்படையில். ஆனால் அதிரடியான் ஆதரிக்கும் புலிகளும் சரி, அல்லது வேறு எந்த அமைப்பும் சரி(பெதிக ஓரளவு விதிவிலக்கு இந்த விசயத்தில்) இந்திய தேசியத்தை எதிர்க்கிறோம் என்பதை முல்லைப் பெரியாறு, காவேரி தாண்டி வேறெதிலும் காட்டுவதில்லை. இந்த யோக்கிய சிகாமணிகள் எல்லா வகையிலும் 'இந்து'வுடனும், 'இந்தி'யுடனும் சமரசம் செய்பவர்கள்தான் . ஏன் ஈழப் பிரச்சினையில் கூட இவர்கள் இந்தியாவை கடசி வரை விட்டுக் கொடுக்கவில்லை. இந்தியாவை நிராகரித்து, அதனை அம்பலப்படுத்தி களத்தில் செயல்பட்டவர்கள் ம க இ கவினர்தான்.
//ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று ஊளையிடும் பார்ப்பனக் கம்யுனிஸ்டு தலைவர் வரதராஜனின் நிலைபாடு தானே ம.கஇ.க.வின் ஈழப்பிரச்சினைக் கான தீர்வு...!?//
இது இன்னொரு பொய். இதெற்க்கெல்லாம் ஆதாரம் கேட்டாலே அதிரடியான் பொய்யடியானாக மாறிவிடுவார். இன்னொரு தேசத்தின் விடுதலைப் போருக்கு இன்ன வகையான தீர்வு என்று அடுத்த நாட்டு பாட்டாளி வர்க்க கட்சி வரையறுக்க முடியாது. அதன் அடிப்படை உரிமைகளை ஆதரிக்க மட்டுமே முடியும். அந்த உரிமைகளை வென்றெடுப்பது, அதற்க்கான சரியான தீர்வு இதனை அந்த நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் தனி ஈழமோ, ஒன்றுபட்ட இலங்கையோ எதுவாகிலும், ஈழத் தமிழ் தேசிய இன்ங்களின் சுயநிர்ணய உரிமை வெல்ல வேண்டும் என்பதே ம க இ கவின் நிலைப்பாடு. போலி கம்யுனிஸ்டு CPM சொல்வது போல ஒன்று பட்ட இலங்கை என்று ம க இ க எங்கும் சொன்னதில்லை.
//, புத்தக விற்பனை செய்வதற்கும், ஆள்பிடிக்கும் வேலை செய்வதற்கும் இந்த ‘பிழைப்புவாதிகள ்’ நடத்தும் கூட்டங்களுக்குத ் தான் வெட்கமின்றி செல்வார்கள்.//
விடுதலைப் புலி தலைமை பாசிச-சந்தர்ப்ப வாத வழிமுறைகளை கையாண்ட அதே நேரத்தில் அதன் அணிகள் தியாக உணர்வுடன், நேர்மையாக போராடினர். ஈழப் போரின் இறுதி நிகழ்வாகக் கூட புலித் தலைமையின் சரணடைவு துரோகமும், புலி அணிகளின் வீரத் தியாகமும் நிகழ்ந்தது. அதே போல பல்வேறு அமைப்புகளின் அணிகள் நேர்மையாக உள்ளனர். இவர்களை வென்றெடுக்க பிரச்சாரம் செய்வதில் என்ன தவ்று? ஒரு வேளை உங்களிடம் பிரச்சாரம் செய்யும் வலு இல்லை என்ற பொறாமையா அதிரடியான்?
//இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று உளறுவார்கள். இந்த கம்பெனிக்கு ஈழத்தமிழர்களை பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளதென்று கேட்டால் கூட நாம் ‘பாசிஸ்ட்’ அல்லது ‘தமிழின பிழைப்புவாதி’ ஆகிவிடுவோம்.//
முதல் விசயம், இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் என்று ஒற்றை வரியில் ம க இ க எங்கும் சொன்னதில்லை. அப்படி ஒரு கருத்து மார்க்ஸிய வரலாற்று பொருள்முதல்வாத வழிப்பட்ட கண்ணோட்டமும் அல்ல. இவ்வளவிற்கும் காரணம் என்ன என்று பரிசீலியுங்கள், ஆய்வு செய்யுங்கள் என்று கடைசி நிமிடம் வரை புலிகளிடம் கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர் ம க இ கவினர். இரண்டாவது விசயம், கேள்வி கேட்பவர்களை தமிழின பிழைப்புவாதி, பாசிஸ்டு என்று ம க இ க எங்கு சொன்னது என்று அதிரடியான் நீருபிக்க வேண்டும். உண்மையில் கேள்வி கேட்பவர்களான ம க இ கவை 'மறைமுக பார்ப்பனியம்' என்ற உளுத்துப் போன முழக்கம் கொண்டு அணுகும் நேர்மையற்ற தற்குறிகளின் குரல்தான் அதிரடியானுடைய இந்த புரளி கட்டுரை.
//இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ‘தமிழ்த் தேசியவாதி’ என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக ் கூடத் தெரியும்.//
இந்த நெடுமாறனோ ஆர் . எஸ் . எஸ்ஸின் தமிழக குடி தாங்கியாக இருக்கிறார். தமிழ் தேசியம், இந்துத்துவம், பார்ப்பனியம், இந்தியம், ஈழம் இவையெல்லாம் ஒருங்கே திகழும் இந்த அற்புத மனிதர்தான் அதிரடியான் கண்களில் தமிழ்த் தேசியவாதியாக தெரிந்தால். அது தமிழ் தேசியத்திற்கு பிடித்த வியாதி என்றே நாம் கருத இடமுள்ளது.
//இவர்களை உண்மையான ‘தமிழ்த் தேசியவாதிகள்’ என்று ம.க.இ.க.வைத் தவிர வேறு எந்த அடிமுட்டாளும் வரையறுக்கமாட்டான்//
உண்மை, உண்மை... உங்களைப் போன்ற அதிமேதாவி வரையறுத்த தமிழ் தேசியவியாதியான நெடுமாறனின் வீரதீரங்களை நான் இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.. என்னே அவரின் தமிழ்த் தேசிய போராட்டங்கள்.
எனக்கு ஒரு சந்தேகம், ஈழ போராட்டத்தின் ஒட்டு மொத்த நிகழ்வில் நெடுமாறன் மீது ஒரு சருகு கூட விழவில்லையே ஏன்? கைதான கொளத்தூர் மணி, சீமான் எல்லாம் அதிரடியான் பார்வையில் தமிழ் தேசியவாதிகள் இல்லையெனில், உண்மையில் அவ்ர்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்கள். பின்னே நெடுமாறனுடன் அவர்களும் ஒன்றாக நிற்க்க வைக்கப்படுவது என்பது அவர்களது போராட்ட உணர்வுக்கு அவமானம்.
//அதே போல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகின்ற ‘தமிழ்த் தேசியம்’ என்பது இந்தியத் தேசியத்தின் வரையறைக்கு உட்பட்ட ஒரு சில உரிமைகளுடன் கூடிய ஒரு தமிழர் மாகாணத்தை ஏற்படுத்த வலியுறுத்துவதாகும்.//
இது என்னையா இது. மாமியார் பிடிச்சா கொளுக்கட்டை அப்படினு ஒரு பழமொழி சொல்ற மாதிரி, தமிழ் தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும், இந்திய புரட்சி பேசும் ம க இ க பார்ப்பனிய கட்சியாம். ஆனா, இந்தியாவுக்குள் ளேயே ஏதோ ஒரு மாதிரி தமிழ் மாகாணத்தை பேசும், ஆர். எஸ். எஸ்வுடன் கூடிக் குழாவும் நெடுமாறன் தமிழ் தேசியவியாதியாம் . எனக்கென்னவோ அதிரடியான் டிக்சனரியில் தமிழ்தேசியம் என்பது நேடுமாற தேசியம் என்று இருக்கும் என்று தோன்றுகிறது.
//காங்கிரஸ் மரபு வழி வந்த அய்யா நெடுமாறன், ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப்புலிகள ின் இந்திய ஆதரவு நிலைபாட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்.//
இந்தியாவை புலிகள் ஆதரிக்கலாமாம். அவர்கள் பார்ப்பனியவாதிக ள் கிடையாதாம். அவர்களின் அந்த நிலைப்பாட்டை நெடுமாறன் ஆதரிப்பார் அவர் பார்ப்பனியவாதி கிடையாதாம். ஆனால் இந்தியாவில் பார்ப்பனி கொடுங்கோன்மையில ் உழலும் மக்களின் ஒற்றுமையை முன்னிறுத்தும் இந்திய புரட்சி பேசும் ம க இ க, 'இந்து' இந்தியாவின் ஒற்றை பார்ப்பனிய தேசியத்தை சமரசமின்றி எதிர்க்கும் ம க இ க பார்ப்பனியவாதிக ளாம். உங்களது நோக்கம் நேர்மையாக இல்லையே அதிரடியான்.
// மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா ஆனைமுத்து அவர்களும் இதே போன்றதொரு தீர்வை, ‘தமிழ்த் தேசியத்’தை ஏற்கிறார் எனலாம்.//
ஆக இவர்கள் யாருக்குமே இந்திய தேசியத்தை எதிர்க்க துப்பில்லை. வெற்று வாய்ச்சவடால். இந்த சமரசவாதிகள் அனைவருமே ராஜீவ் படுகொலை நிகழ்ந்த சமயத்தில் பதுங்கி இருந்த இடம் எங்கு என்று தெரியவில்லை. அப்பொழுதும் களத்தில் ஈழத் தமிழர்களுக்கும் , ராஜீவ் கொலையை ஆதரித்தும் குரல் கொடுத்தவர்கள் ம க இ கவினர்தான்.
//இந்திய அரசை எந்த சமரசமும் //
//தோழர் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தோழர் மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி ஈழப்பிரச்சினையை முன்னிறுத்தி போராடி வருகின்றனர். இக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகள ை நேரடியாக ஆதரிக்கும் கூட்டமைப்பாகும் . இந்திய அரசை எந்த சமரசமும் இன்றி எதிர்க்கும் ஒரே கூட்டமைப்பாக//
இந்தியத் தேர்தலில் மறைமுகமாக பங்கெடுப்பதன் மூலம் இவர்களின் சம்ரசமற்ற தன்மை வெளிப்பட்டதே அது குறித்து அதிரயானின் கருத்து என்ன?
//என்றாவது இவ்விரு அமைப்புகளும் புலிகளின் வெளியுறவுக் கொள்கையான ‘இந்திய ஆதரவு நிலையை நாங்களும் ஆதரிக்கிறோம்’ என்று எழுதியிருக்கிறா ர்களா பேசியிருக்கிறார ்களா என்று தெரியவில்லை. //
எதிர்க்கிறோம் என்று என்றைக்காவது பேசியிருக்கிறார ்களா? இந்த அமைப்புகள் கள்ளமௌனம் சாதித்ததன் அர்த்தம் என்ன்வென்று சொல்லுங்கள் அதிரடியான்.
//தமிழக இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள்! எதிரிகளைவிட உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிககள் மிகவும் ஆபத்தானவர்கள்.. .! //
இதே எச்சரிக்கையைத்த ான் நானும் கொடுக்க விரும்புகிறேன்..
புரச்சி
#4)
2009-06-17 04:54:00
[email protected]
வெற்று விளம்பரத்திற்கா கவோ அல்லது வேறு ஏதாவொரு காரணத்திற்காகவோ தான் இந்த கட்டுரை முகப்பில் இடப்பட்டுள்ளது என்பது எனது வலுவான எண்ணம். ஏனேனில் கட்டுரை மிக கீழ்த்தரமாக, முற்றிலும் ஆதாரமற்ற பொய்களும், அவதூறுகளும் நிரம்பியதாக உள்ளது.
#5)
2009-06-18 04:43:00
[email protected]
////இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ‘தமிழ்த் தேசியவாதி’ என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக ் கூடத் தெரியும்.////
தமிழ்தேசியவியாதியும், அதிரடியானின் அன்பு தலைவருமானன மாவீரன் நெடுமாறனின் இந்திய மேலாதிக்க பூசாரி வேலை குறித்த கட்டுரை:
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!
www.vinavu.com/.../nedumaran
புரச்சி
#6)
2009-06-26 03:28:00
[email protected]
//தமிழ்தேசியவியாதியும், அதிரடியானின் அன்பு தலைவருமானன மாவீரன் நெடுமாறனின் இந்திய மேலாதிக்க பூசாரி வேலை குறித்த கட்டுரை://
மாவீரனுக்கு மாவீரன் என்று பெயர் வந்த கதை தெரியுமா அதிரடியான்?
பாசிச இந்திரா காந்தி மதுரை வந்திருந்த போது அவர் மீதான தாக்குதலில் இருந்து வீராதீரமாக பாதுகாத்ததினால் நெடுமாறனுக்கு மாவீரன் பட்டம் வந்தது.
இந்திய பார்ப்பன தேசியத்தின் பாதுகாவலந்தான் உங்களாது தமிழ தேசிய திருமகன்
புரச்சி
[email protected]
மக இக வின் அவல அரசியலைத்தான் வெளிப்படுத்துகிறார்.
சிபிஐ.சிபிஎம்.ஓட்டுகட்சிகள்,பெதிக.ததேபொக.தநாமாலெக,தியாகு நெடுமாறன் என்று எதாவது ஒரு அமைப்பை சேர்ந்தவராக அதிரடியான் இருந்தால் மட்டுமே அவர் மீது பாய்ந்திருக்க முடியும் இவர்களால்
அதனால்தான் பாவம் அமைப்பை சொல்லு முகத்தைக் காட்டு என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்த அமைப்பியும் சாராத தனிமனிதர்கள் கருத்துகளை முன்வைத்தால் எதிர்கொள்ள தங்களுக்கு வக்கில்லை என்பதை மீண்டும் நிறுபித்திருக்க ிறார்கள்.
சுரேஷ் அவர்களே இதோ முத்திரை குத்திவிட்டார்க ள் , மணியரசன், நெடுமாறன், சீமான், கொளத்தூர் மணி கோஷ்டி என்று அதிரடியான் மேல்..!! இனி ஆட்டம் பாருங்க அம்பியின் தம்பிகளுக்கு !! ஒரே ஆளு பல பேருல வரும்
lordlabakkudass.blogspot.com
யப்பா பொரட்ச்சி... ஒரு கதை சொல்லவா பதில் நீயே சொல்லு ஒ.கே.வா
ஒரு வீட்ல நீ லூசு , நான் லூசுன்னு ரெண்டு பேரு இருந்தானுங்க... நீ லூசு வெளிய போயிட்டான் அப்போ வீட்ல இருக்கறது யாரு ?? சொல்லுங்க பார்ப்போம்
அந்த மாதிரி தான் இருக்கு நெடுமாறன் தமிழ்தேசியவாதி அல்ல அவர் ஒரு இந்திய/பார்ப்பன ிய பாத தாங்கி என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளட்ர்டும் என்பது
1) 1980ல் புலிகளால் வெளியிடப்பட்ட சோசலிஸசத் தமிழீழம் புத்தகத்தை வைத்துப் பந்தி பந்தியாகப் பாடம் நடாத்தும் உங்கள் அப்பாவித்தனத்தை என்னவென்பது?
1980களில் அவ்வாறான கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இயக்கத்துக்குப் போனவர்கள் பின்னர் தடம் மாறிச் செல்லும் கொள்கைகளால் முரண்பட்டு வெளியேறினர். தாம் கவரப்பட்ட அக்கொள்கைகளின் பிறழ்வினைத் தாங்க முடியாமல் இன்றும் விமர்சிக்கின்றன ர்.அப்படியே கடைசி வரை கொள்கைகள் இருந்ததாக எப்படி நம்புகிறீர்கள்? உங்களுக்கு விளங்குவது போல் சுருங்கச்சொன்னா ல்,தமிழ்நாட்டு அரசியல்வாதி ஒருவர் தன் தேர்தல் வாக்குறுதியில் சொன்னவற்றை அவரது ஆட்சியின் தரத்தை விளக்குவதற்கு உபயோகிப்பீர்களா ?செயற்படுத்தினா ரா? என்பதல்லவா முதற் கேள்வி.
2) ஏன் எப்பொதுமே தமிழ்நாட்டுக்கா ரர்கள் யாராக இருந்தாலும் சிங்களவர்கள் என்று அவ்வினத்தையே ஒட்டு மொத்தமாகக் குற்றஞ்சாட்டுகி றீர்கள் இவ்வளவு இனவெறியா உங்களுக்கு என்று எமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. தமிழர்களுக்காக நியாயமாகக் கவலைப்படும் பத்திரிகையாளர்க ள் கலைஞர்கள் மற்றும் பலரை அவ்வாறு பொதுமைப்படுத்தவ தால் அவமதிக்கிறீர்கள ். மறுவளமாகப் பார்த்தால் தமிழர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் எனச் சிறிலங்கா அரசும் அதன் பாதுகாப்புப் படைகளும் செயற்படுவதை ஒத்ததாக இக்கருத்து இருக்குமே.
3) ஈழத்தமிழர்களை எண்ணி தமிழகத்தமிழர்கள ் வேதனைப்படுவதை எழுதியிருந்தீர் கள்.முதலில் உங்கள் காலடியில் அகதிகளாக வந்து கிடக்கும் இலங்கை அகதிகளைச் சரியாகப் பராமரிக்க முயலுங்கள். நானும் அகதியாக மண்டபம் முகாமில் வாழ்ந்தவள்.அங்க ு இறங்கியதிலிருந் து இரக்கமற்றுப் பணம் பறிப்பதிலேயே பொலிஸ், முகாம் பராமரிப்பாளர்கள , கடைக்காரர்கள் என எல்லோருமே குறியாயிருப்பர் . நல்ல அறை பூட்டியிருக்கும ்.பொறுப்பான அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக் கு அது கொடுக்கப்படும். இப்படிப்பலதும் முகாமிலென்றால்; கூலி வேலைக்குப் போனால் குறைந்த கூலி. வேறு வழியின்றி முறிந்து வேலை செய்ய வேண்டிய பொருளாதார நிலை.அகதியென்றா ல் சற்று இளக்காரம் தான்.அகதிப் பசங்க பள்ளிக்கூடம் போகையிலும் அது உண்டு. இவ்வளவு வருடங்களாக முகாம்களில் வாழ்ந்து கஷ்டப்படபவர்களு க்கு உதவும் திட்டங்களை ஈழத்தமிழர்களுக் காக இரக்கப்படும் அமைப்புகள் கட்சிகள் ஆர்வலர்கள் எத்தனைபேர் செய்தீர்கள்?
உங்கள் பகுதிகளில் இருக்கும் முகாம் மக்களை எவ்விதம் நோக்கினீர்கள்? ஆயுதந் தாங்கியவர்கள் மட்டுமே ஈழத்தமிழர்களல்ல .
வலைப்பதிவுகளில் ம.க.இ.க.வினர் செய்யும் அட்டகாசங்களையும ் அறிந்து கொண்டேக். வலைப்பதிவு ஒன்றும் தொடங்கினேன். நிறைய அதில் எழுதலாம் என நினைத்திருந்தேன்.///
இணையத்தில் ம க இ க தோழர்கள் எழுத வந்த பின்னணி குறித்து பார்த்தால், சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளும் , ஏகாதிபத்தியவாதி களும் கேட்பாரின்றி பொய்யையும், புரட்டையும் எழுதி வந்தனர். இந்தச் சூழலை மாற்றியமைத்து புரட்சிகர ஜனநாயக சக்திகளுக்கான தளமாக இணையத்தை மாற்றியமைக்கும் உத்வேகத்துடன் உள் நுழைந்தனர் ம க இ க தோழர்கள் பலர். இதனை அந்த தோழர்கள் பலரின் ஆரம்பகால பதிவுகளை படித்தால் புரிந்து கொள்ளலாம்.
திராவிட அரசியல் பேசுபவர்களுடன் பிரதானமாக நட்பு சேர்ந்து ம க இ க தோழர்கள் இணையத்தில் நெடியதொரு போராட்டத்தை நடத்தினர்.
இப்படிப்பட்ட சூழல் அதிரடியானை இணையத்தில் எழுதத் தூண்டவில்லை என்பதும், ம க இ கவினர் இணையத்தில் வலுப் பெற்ற சூழலே தம்மை எழுதத் தூண்டியது என்றும் அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்திலி ருந்து அவரது அரசியல் என்னவென்பதை நமக்கு அறியத் தருகிறார்.
பார்ப்பன பயங்கரவாதிகளோ அல்லது ஏகாதிபத்தியவாதி களோ அல்லது இவரது பிரதான எதிரிகளான இந்திய தேசியவாதிகளோ அல்ல மாறாக ம க இ க போன்ற புரட்சிகர முற்போக்குவாதிக ளை எதிர்த்தே அதிரடியானுடைய இணைய பிரவேசம் ஏற்பட்டுள்ளது அவருக்கு பொருத்தமான இண்ட்ரோடக்சனே.
நல்ல தமிழ் தேசிய அரசியல்(??)
புரச்சி
IF ONLY JAYALALITHA WAS THERE IN POWER MA.KA.EI.KA WOULD DARE TO FIGHT FOR CHIDAMBARAM CAUSE. THEY VERY WELL KNOW GOVT IS WITH THEM.
THEY SHOULD EXPLAIN TO THE TAMILNADU PEOPLE WHAT HAPPPENED TO " COKE PLANT ON TAMIRAPARANI".
PLACHIMADA PROPLE IN KERALA FOUGH CONTINOUSLY TO UNDERMINE COKE, MA.KA.EI.KA IN ASSOCIATION WITH COCK AND GOVERNMENT, TO AVOID PEOPLE TO FIGHT SUCH A CAMPAIGN IN TAMIRABARANI(GA NGAI KONDAN), THEY INITIATED AN AGITATION AND KILLED IT ,SO THAT PEOPLE GET THE FEAR AND BURNOUT FEEL AN D LEAVE THE PROTEST IN MIDDLE.
THEY ARE INSULTING REVOLUTIONARY ATTITUDE OF PEOPLE.
IF ONLY GOVT BAN THE POSTER, WALL WRITING & PRINITNG MAGAZINE, MA.KA.EI.KA LEFT WITH NO OPTIONS TO RUN ITS REVOLUTION. THEY RUN THEIR PARTY WITH THIS STUNT.
IF ANYWHERE YOU MA.KA.EI.KA GUYS TALK ABT YOUR CONTRIBUTION TO MUTHUKUMAR RISING, YOU WILL GET THE BEAT WITH EXPOSING WHAT CRIMINAL STUFF YOU DID ON THE OTHERDAY. IF YOU WUD HAVE DONE SOMEHTING YOUR ACT WUD HAVE SHOWN TO THE WORLD WHAT OU WORTH FOR. I FELT ASHAMED OF GIVING DONATIONS IN MY EARLY LIFE TO YOU
RSS feed for comments to this post