விழித்தே உள்ளது,
எங்கள் குட்டிமணி
செகனின் விழிகள்!
பசித்தே உள்ளது,
எங்கள் திலீபனின்
விடுதலை வயிறு!
இடுக்கண் வந்தாலும்
முத்துப்பல் காட்டி
சிரித்தே உள்ளது,
எங்கள் தமிழ்ச்செல்வனின்
கரவற்ற முகம்!
சிதையாமலே உள்ளது,
குப்பிக் கடித்த
எங்கள் மாவீரர்களின்
நஞ்சற்ற பற்கள்!
கலங்கரை விளக்காய்
வழிகாட்டியே உள்ளது,
எங்கள் கரும்புலிகளின்
இணையற்ற ஈகம்!
எப்போதும் புறம்
பாடியே உள்ளது,
புறப்பட்ட எங்கள்
உயர் புலிப்படை!
மீண்டும் புலிக்கொடி
ஏற்றவே உள்ளது,
தமிழ்ப் பெண்களின்
புலி கருவறைகள்!
தமிழீழம் மீணவிழித்தே உள்ளது,
எங்கள் குட்டிமணி
செகனின் விழிகள்!
பசித்தே உள்ளது,
எங்கள் திலீபனின்
விடுதலை வயிறு!
இடுக்கண் வந்தாலும்
முத்துப்பல் காட்டி
சிரித்தே உள்ளது,
எங்கள் தமிழ்ச்செல்வனின்
கரவற்ற முகம்!
சிதையாமலே உள்ளது,
குப்பிக் கடித்த
எங்கள் மாவீரர்களின்
நஞ்சற்ற பற்கள்!
கலங்கரை விளக்காய்
வழிகாட்டியே உள்ளது,
எங்கள் கரும்புலிகளின்
இணையற்ற ஈகம்!
மலரவே உள்ளது,
தம்பியின் தலைமறைவு!
உயிர்த்தே உள்ளது,
இந்திய - இலங்கையின்
தகரி உழுத
மாவீரர் நிலம்!
ஆம்! எல்லாம்
உயிர்த்தே உள்ளது,
விடுதலையாய் வாழ!