Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

நெருக்கடி
ப.கு.ராஜன்
.

முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் உள்ளார்ந்த முரண்பாட்டை விளக்கும் ஆங்கிலக் கதை ஒன்றுண்டு. வட இங்கிலாந்தின் ஒருபகுதி. மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தை ஒட்டிய குடியிருப்பு. அங்கே ஒரு சுரங்கத் தொழிலாளியின் இல்லம். வட இங்கிலாந்திற்கே உரிய எலும்பை உறைய வைக்கும் கடுங்குளிர் காலத்தின் முன்னிரவு நேரம். கனப்படுப்பின் முன்னே தொழிலாளியின் குட்டி மகள் தன்தாயை ஒட்டி அமர்ந்திருப்பாள். கனப்படுப்பின் நெருப்பு அணையும் தருணம். தாய் தன் கையிலிருந்த கடைசி நிலக்கரித் துண்டை அடுப்பில் இடுவாள். அந்தக் குட்டிப்பெண்ணுக்கு குளிர் தாங்காது. அம்மா எனக்குக் குளிர் தாங்கவில்லை, இன்னும் கொஞ் சம் நிலக்கரி போட்டு நெருப்பைப் பெரிதாக்கு என்பாள். அம்மாவி டம் நிலக்கரி இல்லை. என்னிடம் நிலக்கரி இல்லையென்பாள். ஏன் என்பாள் மகள். வாங்குவதற்கு காசில்லை என்பாள் தாய். மகளின் வினாக்களும் தாயின் விடைகளும் தொடரும். ஏன் காசில்லை? அப்பா விற்கு வேலை போய்விட்டது, அதனால் சம்பளம் இல்லை. ஏன் வேலை போனது? அப்பாவின் கம்பெனியில் நிலக்கரியை வெட்டிக் குவித்துவிட்டார்கள். வாங்க ஆள் இல்லை, அதனால் வேலையில்லை. தந்தை நிலக்கரியை வெட்டிக் குவித்தக் காரணத்தால் மகளுக்கு நிலக்கரி இல்லை. சுரங்கத் தொழிலாளியின் இல்லத்தில் நிலக்கரி தேவை. ஆனால் சுரங்கத்தில் விலைபோகாமல் நிலக்கரி. ஏன் என்பாள் மகள். மகளின் வினாவுக்கு அந்த தாயிடம் விடை இல்லை. ஆனால் மார்க்ஸிடம் விடையிருந்தது என்பர்.

மார்க்ஸியம் உதயமான காலத்தில், மேற்கத்திய அறிவுலகு அதனை தமது ஆழ்ந்த அமைதியாலும் பாராமுகத்தாலும் சந்தித்தது. ஆனால் மார்க்ஸியம் கிணற்றில் இட்ட கல்லாய் மறைந்து போகாமல் வலுவுற்று இயங்கிய போது, அதனைக் குறித்த விமர்சனம் என்று பேசவேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. மார்க்ஸியம் குறித்து வந்த முதல் விமர்சனமே அதுவொரு மூடுண்ட தத்துவம், அது காலாவதி யாகி விட்டது என்ற ரீதியில்தான் வந்தது. ஆக மார்க்ஸியத்தின் பிறப்பைப் பற்றிய அறிவிப்பே அதன் மரணச் சான்றிதழ் வடிவில்தான் வந்தது.

ஆனால், இந்த மரண அறிவிப்புகள், எதிர்ப்புகள், முதலாளித்துவத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், மார்க்ஸிய இயக்கங்களில் ஏற்பட்ட சரிவுகள், பிறழ்வுகள், தவறுகள் எல்லாவற்றையும் தாண்டி முதலா ளித்துவ பொருளாதார அமைப்பு குறித்த மார்க்ஸின் ஆய்வுகளும் முடிவுகளும் அடிப்படையில் சரியா னவை என நிரூபணம் ஆகியுள்ளது.

மார்க்ஸ் மூலதனத்தை வெளியிட்ட காலத்திற்குப் பின்பு ஏற்பட்ட பல நெருக்கடிகள், 1929ஆம் ஆண்டு ஏற் பட்ட பெருநெருக்கடி, பின்னர் 1970களில் துவங்கி மீண்டும்மீண்டும் ஏற்பட்ட நெருக் கடிகள், இப்போது கடந்த சில வருடங்களாக தொடரும் நெருக்கடி, எல்லாவற்றுக்கும் மேலாக இப்போ தைய நெருக்கடி என ஏராளமான நிகழ்வுகள் மார்க்சியத்தின் அறிவியல் பூர்வமான இந்தக் கோட்பாடு அடிப் படையில் இன்றும் பொருந்தக் கூடியதே என்று பறைசாற்றுகின்றன.

இதுகுறித்து 1933 ஆம் ஆண்டு இங்கி லாந்தில் ஒரு தொழிற்சங்கம் பதிப்பித்த சிறுபிரசுரத்தை, ஒரு இடதுசாரி இணையதளம் (Jay’s Leftist and Progressive Internet Resource Directory வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரை யின் மொழிபெயர்ப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

ப.கு.ராஜன், மொழிபெயர்ப்பாளர்

நெருக்கடியின் சாத்தியம்

நெருக்கடி என்பது முதலாளித்துவ சமூக அமைப்பின் அனைத்து முரண்பாடுகளின் மொத்த வெளிப்பாடு என மார்க்ஸ் கருதினார்.

உலகச்சந்தையில் பொது நெருக்கடியின்போது பூர்ஷ்வா உற்பத்திமுறையின் சகல முரண்பாடுகளும் ஒருங்கே வெடித்து எழுகின்றது... (மார்க்ஸ் - உபரி மதிப்புக் கோட்பாடுகள் - தொகுதி 2 - பகுதி 11 ப. 318) மார்க்ஸ் நெருக்கடியை அதன் பல்வேறு பரிமாணங்க ளோடும், பல்வேறு வெளிப்பாடுகளோடும் கண்டு விளக் கியுள்ளார். நெருக்கடி எவ்வாறு பன்முக விளைவுகளை ஏற்படுத்துகிறது, எப்படி முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் சகல அம்சங்களையும் பாதிக்கிறது, எப்படி எல்லாத்தரப்பிலும் உருவாகி வளர்கிறது என்பதை யெல்லாம் மார்க்ஸ் பகுத்து ஆய்ந்துள்ளார்.

சரக்கு உற்பத்தியின் முரண்பாடு- நெருக்கடியின் சாத்தியம்:

பொருள் உற்பத்தி, சரக்கு உற்பத்தி எனும் ரீதியில் நிகழ் வதில்தான் நெருக்கடியின் அடிப்படையான சாத்தியம் உள்ளது என்பதை மார்க்ஸ் கண்டறிந்து கூறினார். மார்க்ஸின் புகழ்பெற்ற நூலாகிய மூலதனத்தின் மையமே இந்த விளக்கம்தான் எனக் கூறுவோர் உண்டு. முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளைக் கண்டறிந்து விளக்கிய மார்க்ஸின் மிகமுக்கியக் கோட்பாடுகளில் ஒன்று, முதலாளித்துவ நெருக்கடி குறித்த மார்க்ஸியக் கோட்பாடு ஆகும். தொழில் மந்தம் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களால் அழைக்கப்படுவதுதான் மார்க்சிய இலக்கியத்தில் நெருக்கடி என அழைக்கப்படுகிறது.

பண்டமாற்று முறை வழக்கிலிருந்தபோது, உற்பத்தி என்பது உற்பத்தியாளரின் சொந்த நுகர்வுக்காகவே நடந் தது. பின் உற்பத்திச் சக்திகள் சிறிது வளர்ச்சியடைந்து, உற்பத்தியில் ஓரளவு வேலைப்பிரிவினை ஏற்பட்டது. இந்த கட்டத்தில் உற்பத்தி சொந்த நுகர்வுக்கு என்பதைத் தாண்டியது. சொந்த நுகர்வுக்கு பெருமளவும் சக உற்பத்தி யாளர்களின் நுகர்வுக்காக சிறிதளவுமாக நடந்தது. சொந்த நுகர்வுக்குப் போக உபரியாக இருந்த பொருட்கள் தாம் இந்தவகையில் சரக்காக பண்டமாற்றாக பரிவர்த்தனை செய்துகொள்ளப்பட்டன. உபரியாக இருந்த பொருட்க ளின் பரிவர்த்தனை அடிப்படையம்சமாக இருக்க வில்லை. ஆனால் சரக்கு உற்பத்திமுறையில் பொருட் களை பணமாக மாற்றுவது அதாவது விற்பனை என்பது நடந்தேத் தீரவேண்டிய ஓர் இன்றி யமையாகும். சொந்த நுகர்வுக்கான உற்பத்தி, எதார்த்தமாக நடைபெறக்கூடியது. சரக்கு உற்பத்திமுறையில் விற்பனை நடக்கவில்லையெனில் நெருக்கடிதான்.1

சமூகத்தின் பொருளுற்பத்தி சரக்கு உற்பத்தியாக இருக் கும் வரை, அதாவது சரக்கு பொருளாதார அமைப்பு உள்ள வரை நெருக்கடி ஏற்படும் சாத்தியத்தையும் சமூகம் தன் சரக்குப் பொருளாதார அமைப்பிற்குள் கொண்டுள்ளது. நேரடி பண்டமாற்று என்பது பரிவர்த்தனையின் ஆரம்ப நிலை. இந்த நிலையில் பொருட்கள் பெருமளவிற்கு சொந்த நுகர்வுக்காகவே உற்பத்தி செய்யப்பட்டன. சுய தேவையின் பூர்த்திக்குப் பிறகு உபரியாக இருந்த பொருட் கள் மட்டுமே சரக்காக மாறின. இவை மட்டுமே பிற நுகர்வுப் பொருட்களுக்காக நேரடியான பண்ட மாற்றாக பரிவர்த்தனை செய்துகொள்ளப்பட்டன.

சரக்கு உற்பத்திமுறையில் எல்லாப் பொருட்களும் பண மாக மாற்றப்படல் வேண்டும். ஒரு பொருளுக்கு உள்ள பயன்பாட்டு மதிப்புக்கும் அதற்கு சரக்கு என்ற வடிவில் ஏற்படும் மதிப்பிற்கும் இடையே ஒரு முரண்பாடு உள்ளது. இது சரக்கு பொருளுக்கும் பணத்திற்கும் இடை யேயான இடைவெளியில் வெளிப்படுகின்றது. சரக்கு பொருளாதார சமூகத்தில்,வாங்குபவர் இல்லையெ னில் ஒருவரும் பொருளை விற்பனை செய்ய இயலாது. விற்பனையும், கொள்முதலும் ஒன்றில்லாமல் மற் றொன்று இருக்க இயலாதவை; இரண்டிற்கும் இடையே உள்ளார்ந்த இணைப்பு உள்ளது. ஆனால், ஒரு பொருளை விற்பனை செய்பவர் வேறு ஒரு பொருளை வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.

ஆக விற்பனைக்கும் கொள்முதலுக்குமிடையே ஒரு பிரி வினையும் உள்ளது. சரக்குப் பரிவர்த்தனையில் விற்ப னைக்கும் கொள்முதலுக்கும் இடையேயுள்ள இந்த பிளவு,ஒரு மிகப்பெரிய வலைப்பின்னலான சமூக உறவு களை உருவாக்குகிறது. இது தன்னெழுச்சியாக வளரக் கூடியதும், இதில் பங்கேற்பவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதும் ஆகும். விவசாயி தான் உற்பத்தி செய்த கோதுமையை விற்றால்தான், ஒரு நெசவாளர் தான் உற்பத்தி செய்த துணியை அந்த விவசாயியிடம் விற்க முடிகின்றது. நெசவாளர் தான் உற்பத்தி செய்த துணியை விற்றால்தான் ஒரு பாதிரி தன்னுடைய பைபிளை அந்த நெசவாளரிடம் விற்க முடிகிறது. வாழ்வின் வற்றாத நீரை விற்பனை செய்ததால்தான் அவர் தேவ மதுவை வாங்க முடிந்தது.

விவசாயி கோதுமையை விற்க முடியவில்லையென்றால் அவரால் எந்தத் துணியையும் வாங்கவும் இயலாது. ஆக நெசவாளர் பைபிள் வாங்குவதற்கு முன்வர மாட்டார். அது மட்டுமல்ல. விவசாயி கோதுமையை விற்க முடிந்தாலும், வேறு பொருள் எதனையும் வாங்குவதில்லை என்ற முடி வோடு பணத்தை பணமாகவே வைத்துக் கொண்டாலும் விற்பனை கொள்முதல் என்ற இந்த சங்கிலி அறுபடுகின் றது. விற்பனை - கொள்முதல் எனத் தொடர்ந்து நடை பெற வேண்டிய இயக்கத்தில் ஏற்படும் இந்த பிளவு பூதா கரமானதாக வளர்ந்து பரிவர்த்தனை உறவுகள் அனைத் தையும் பாதித்து நெருக்கடியாக உருவெடுக்கிறது. இங்கு நெருக்கடி என்பது நேரக்கூடிய சாத்தியம் என்ற அளவில் தான் உள்ளது. நெருக்கடி நேராமலும் போகலாம். ஏனெனில் சாதாரணமாக விற்பனையைத் தொடர்ந்து பொருட்களை வாங்குதல் என்பது நடந்தேறக் கூடியதே.

இந்த முறை (அதாவது சரக்கு பணமாகவும், பணம் சரக் காகவும் மாற்றப்படும் முறை- பதிப்பாளர்) நெருக்கடி நேர்வதற்கான சாத்தியத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் என்பது தவிர்க்க வியலாத எதார்த்தமாக மாறுவது நீண்டத் தொடர் உறவு களின் விளைவாக ஆகும். இந்தவகையான தொடர் உறவுகள் எளிமையான பண்டமாற்று பரிவர்த்தனை சுழற்சியில் இல்லை. பணம் - செலாவணி, நெருக்கடியின் சாத்தியம்:

சரக்கு உற்பத்திமுறையில் ஒரு பொதுவான சாத்தியமாக மட்டும் இருக்கிற நெருக்கடி, கடன் அடிப்படையிலான வணிகம், பணம் செலாவணியாக பரிவர்த்தனையில் பயன்படுத்தப்படுவது ஆகியவற்றினூடாக வலுவடைந்து வளர்கிறது. அதாவது சரக்கு விற்கப்படுகிறது. ஆனால் அதற்கான பணம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே அளிக்கப்படுகிறது. அதன் பிறகுதான் அந்த குறிப்பிட்ட வணிக நடவடிக்கை முற்றுப்பெறுகிறது. கடன் அடிப் படையில் நடக்கும் வணிகத்தை பணம் செயல்படுத்துகின்றது.


கடன் அடிப்படையிலான வணிகத்தின் துவக்கத்திற்கும் அந்த பரிவர்த்தனைக்குரிய பணம் கையளிக்கப்படுவதற் கும் இடையேயுள்ள கால இடைவெளியில் சரக்கின் மதிப்பு மாறிவிடலாம். பணம் உரியகாலத்தில் கையளிக்கப்படாமல் போகலாம். விற்பனையும் கொள் முதலும் விரிவுண்டு தத்தம் அளவில் சுயேச்சையான செயல்களாக ஆனதை இது காட்டுகின்றது.


விவசாயி 2 மீட்டர் துணியை 100 ரூபாய்க்கு வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் இன்னமும் துணிக்கான பணத்தை கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் இன்னமும் தன் கைவசமுள்ள கோதுமையை விற்க வில்லை. அவரிடம் உள்ள கோதுமையின் மதிப்பு துணி வாங்கிய தினத்தன்று 100 ரூபாயாக இருக்கலாம். அதே போன்று நெசவாளர் தனக்குத் தேவைப்படும் கருவிகளை வாங்குகிறார். தான் விற்பனை செய்த துணிக்கான பணம் கிடைத்தவுடன் கருவிக்கான பணத்தை அளிப்பதாக உறுதி கூறுகிறார். ஆனால் விவசாயி தன்னிடமுள்ள கோது மையை விற்பனை செய்யும்போது அதன் மதிப்பு மாறி அவருக்கு கிடைப்பது 100 ரூபாய்க்கு குறைவாக இருக் கலாம். அல்லது அவரால் கோதுமையை விற்க இயலாம லும் போகலாம். அப்படி நேர்ந்தால் அவர் நெசவாளருக்கு பணம் கொடுக்க முடியாது. நெசவாளர் தான் வாங்கிய கருவிக்கு உரிய பணத்தை அளிக்க இயலாது. கடன் வணிகம் இந்த வகையில் அதில் ஈடுபடும் சரக்கு உற்பத்தி யாளர்கள் அனைவரையும் பரஸ்பர சார்பு எனும் ஒரு சங்கிலியால் பிணைக்கின்றது. இந்த பணப்பட்டுவாடா சங்கிலியில் ஏதேனும் ஒரு கண்ணி அறுந்தாலும இந்தத் தொடர் சங்கிலி சீர்குலைவுக்கு உள்ளாகும். அதாவது நெருக்கடி உருவாகும்.


நெசவாளர் பணம் அளிக்காத காரணத்தால் நூல் நூற்பவர் பணம் அளிக்க இயலாது. நூல் நூற்பவர், நெசவாளர் இருவருமே இயந்திர உற்பத்தியாளருக்கு பணம் அளிக்க இயலாது. அவர் தான் வாங்கிய இடுபொருளுக்கும் மரத்திற்கும் நிலக்கரிக்கும் பணம் கொடுக்க இயலாது. இவர்கள் யாவரும் தாம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க இயலாது. ஏனெனில் இவர்களது சரக்கின் மதிப்பை இவர்கள் ஈட்டவில்லை. ஆக ஒரு பொது நெருக்கடி உருவாகின்றது.(6) பயன்பாட்டு மதிப்பு- மதிப்பு ஆகியவற்றுக்கு இடையே உற்பத்தி - கைமாறும் சுழற்றி ஆகியவற்றுக்கு இடையே விற்பனை - கொள்முதல் ஆகியவற்றுக்கு இடையே மூலதனம் - உழைப்பு ஆகியவற்றுக்கு இடையே - ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் பிளவு ஏற்படுவது ஏன்?


முதலாளித்துவ நெருக்கடி, மிதமிஞ்சிய உற்பத்தியால் நிகழும் நெருக்கடி என்பதை முன்னரே கண்டோம். ஆனால் இது நவீனயுகத்தில் நிகழும் நெருக்கடியின் வெளிப்படையாய் தெரியும் தோற்றம் மட்டுமே. முதலா ளித்துவத்தில் மிதமிஞ்சிய உற்பத்தி என்பது தவிர்க்க இயலாத விதத்தில் ஏற்படுவது ஏன்? மிதமிஞ்சிய உற்பத்தி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் ஏற்படுவது ஏன்? இவையெல்லாம் விளக்கப்பட வேண்டிய வினாக்கள்.


உற்பத்தி - சமூகத்தின் கூட்டுப்பணி பலன் - தனியார் அபகரிப்பு

சமூகமயமான உற்பத்திக்கும் முதலாளித்துவ முறையி லான பங்கீட்டிற்குமிடையேயான முரண்பாடே நெருக் கடி உருவாக பிரதான காரணமாகும். உற்பத்திச்சக்திகளுக் கும் உற்பத்தி உறவுக்கும் இடையேயான முரண்பாட்டின் மூர்க்கமான மோதலின் வெளிப்பாடே நெருக்கடி என்று மார்க்ஸ் கண்டுரைத்தார். முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாடாகிய, சமூகவயப்பட்ட உற்பத்திக்கும் முதலா ளித்துவ கைக்கொள்ளலுக்கும் இடையேயான முரண் பாடே நெருக்கடியை, நடந்தேத் தீரும் நிச்சயம் என்று ஆக்கும் காரணி என்று மார்க்ஸ் அவதானித்தார்.

உற்பத்தியின் பலனை தனியார் கைக்கொள்ளல், எளிமை யான சரக்குப் பொருளதார அமைப்பிலும் நடந்தது. அப்போது உற்பத்தியாளராகிய தனிநபர் தனது உற்பத்தி யின் பலனை தானே கைக்கொண்டார். ஆனால் முதலாளித்துவத்தின் கீழ் சமூகரீதியான உற்பத்தியில் மற்றவர் உழைப்பால் உருவானதை உற்பத்தி சாதனங்களின் உடமையாளர் தன்னுடையதாக கைக்கொள்கிறார்.

முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி சமூகரீதியாய் நடை பெறுகிறது என்று கூறுவதன் பொருள் என்ன? உழைப் பாளர்கள் தனிமனிதர்களாய் இல்லாமல் ஒரு பெருங் கூட்டமாய் ஒரு கூரையின் கீழ், ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகின்றார்கள். சமூகரீதியான உற்பத்தி என்பதன் பொருள் இதுவல்ல. இது ஒரு சிறு அம்சமே. மூலதனத் தின் குவிப்பு என்பதோடு தனித்துவ உயர்நுட்பத்தோடு கூடிய சமூக உழைப்பு உடனிணைந்து நிகழ்கின்றது. ஒவ்வொரு தொழிற்பகுதியிலும் அதில் ஈடுபடும் உடமை யாளர்களின் எண்ணிக்கை குறைந்து, தனித்துவமான தொழில்களின் எண்ணிக்கை உயர்கின்றது.பல்வேறு இடங்களில் நடக்கும் உற்பத்தி நிகழ்வுகள் சமூக உற்பத்தி எனும் ஒரு பெருநிகழ்வின் பகுதிகளாய் நடக்கின்றன.(10) ஆனால், இந்தவகையில் ஒவ்வோர் உற்பத்தி நிகழ்வும் பெருநிகழ்வான சமூக உற்பத்தியின் பகுதி நிகழ்வாய் மாறும்போது உற்பத்திமுறைக்கும் பலனை கைக்கொள் ளும் முறைக்கும் இடையே தீர்க்க முடியாததொரு முரண் பாடு தோன்றுகிறது. உற்பத்தி நிகழ்வு ஒவ்வொன்றும் ஒரு தனி முதலாளியால் அவர்தம் விருப்பம் போல் நடத்தப் படுகிறது. சமூக உற்பத்தியின் பலன் அவரது தனியுடமை என்றாகிறது.

மற்றவர் உழைப்பின் பலனை கையகப்படுத்துவதற்கு உள்ள வேட்கைக்கு நிறைவு என்பதே இல்லை. இயற்கை யாக இது வரம்பும் முடிவும் இல்லாதது. ஒரு வர்த்தகப் பரிவர்த்தனையில் லாபம் என்பதல்ல; முடிவற்ற, ஓய்வற்ற தொடர்ச்சியான லாபம் என்பதே ஒரு முதலாளியின் குறிக்கோளாய் இருக்கிறது. (12) பணம் மூல தனமாய் மாற்றமடைவது குறித்த தனது ஆய்வில் மார்க்ஸ் மூலதனத்தின் சுழற்சிக்கு வரம்பேதுமில்லை (13) என்பார்.


உழைப்பின் பலனை கைக்கொள்வதை அதிகரிக்க நடக்கும் போராட்டத்தில், ஒவ்வொரு முதலாளியும் மூல தனம் மென்மேலும் திரள்வதற்கு கடும் முயற்சி செய்கின் றனர். அதாவது, தான் ஈட்டும் லாபத்தை (உபரி மதிப்பை) மறுமுதலீடு செய்து தனது உற்பத்தியை விரிவுபடுத்தவும், பெருக்கவும் முயற்சிக்கின்றனர். வியாபாரப் போட்டி காரணமாக உற்பத்தியை பெருக்குவது ஒவ்வொரு முதலா ளிக்கும் நிர்ப்பந்தமாகிறது. இந்த கடும் போட்டியில் தேக்கம் தோல்விக்கும், வியாபாரக் களத்திலிருந்து அப்புறப்படுத்தலுக்கும் வழிவகுக்கின்றது. உற்பத்திச் சக்தி களை ஓயாது அதிகரிக்கும் இந்த ஓட்டத்தின் விளைவால் உற்பத்தி, முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் கட்டும் வரம்புகளையெல்லாம் உடைத்து மீறிப் பாய்வதாகிறது.


சமூகரீதியான உற்பத்தி அளவுகளை தீர்மானிப்பது உற்பத் திக்கு இருக்கும் சமூகத்தேவை அல்லது விற்பனைச் சாத்தியம் அல்ல; மாறாக மூலதனம்தான் உற்பத்தியை தீர்மானிக்கின்றது. முதலாளித்துவ உற்பத்திமுறையின் வளர்ச்சியில் உற்பத் தியின் அளவை அந்தப் பொருளுக்குள்ள விற்பனைச் சாத்தியம் தீர்மானிப்பதில்லை. உற்பத்தி அளவை ஒவ் வொரு தனிப்பட்ட முதலாளியின் கையிலுள்ள மூலதனம் தீர்மானிக்கின்றது. மூலதனத்தின் மதிப்பை அதிகரிப்பதற் கும், உற்பத்தியின் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கான இயல்பான வேட்கையும் இதனை தீர்மானிக்கின்றது. (14)


வியாபாரத்தில் உள்ள போட்டியின் காரணமாக உற்பத்தி அதிகரிப்பு என்பது உற்பத்தி சாதனங்களை பெருக்குவது என்ற விதத்தில் நடக்கும் அளவுரீதியான மாற்றத்தால் மட்டுமல்ல; பண்புரீதியாக தொழில்நுட்ப முன்னேற்றத் தின் மூலம் உற்பத்தித்திறனைப் பெருக்குவதன் மூலமும் நடைபெறுகிறது. அதாவது சமூக உழைப்பின் திறனை உயர்த்துவதால் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. அதிகலாபத்திற்கான வேட்டை, தொழில்நுட்ப வல்லமை முன்னேற்றமடைய வழிவகுக்கிறது. முடிவற்றதும், தொடர்ச்சியானதுமான தொழில்நுட்ப செழுமைக்கும் முழுமைக்கும் வழிவகுப்பதின் மூலம் சமூக உழைப்பின் திறனுக்கு மிகுந்த உத்வேகமளிக்கின்றது.


முதலாளித்துவ உற்பத்தி நடைபெறும் சமூக நிலைமை குறித்து எந்தவித கவனமுமின்றி உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுப்பது முதலாளித்துவ உற்பத்திமுறையின் இயல்பாகும். (15) மூலதனம்தான் இந்த அபரிமிதமான உற்பத்தி அதிகரிப்பை கொண்டு செலுத்தும் விசையாகும். உற்பத்தி யின் உபரியில் பெரும்பகுதி மூலதனமாக மாற்றப்படுகி றது. இருக்கின்ற உற்பத்திநிலைகளை தக்கவைத்துக் கொள்ளவும், வரம்பற்ற உற்பத்தி அதிகரிப்புக்கும் மென் மேலும் மூலதனம் தேடியும் முழுமூச்சாக பாடுபடும் முதலாளித்துவம் உற்பத்திப் பொருட்களின் சமூக நுகர்வு அதிகரிக்க ஏதும் செய்வதில்லை. (16)

இது ஒரு கண்மூடித்தனமானப் போராட்டம். மிக அனுப வமும், சமநோக்குநிலையும் கொண்ட முதலாளிகள் கூட இந்த பொதுவான சூறாவளியிலிருந்து ஒதுங்க முடிவ தில்லை. மனிதகுலம் முழுமைக்கும் புதிதாய் அளிக்க வேண்டும் என்பதுபோல் ஆலைகளும், தறிகளும், சுத்தி யல்களும் இடைவிடாது இயங்கி பொருட்கள் உற்பத்தி செய்து குவிக்கப்படுகின்றன. ஏதோ சந்திர மண்டலத்தில் கோடிக்கணக்கான புதிய நுகர்வாளர்கள் கண்டுபிடிக்கப் பட்டதுபோல் இது நடக்கின்றது. (17)


உற்பத்திச்சக்திகளின் கட்டற்ற வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இந்த நிகழ்வுப்போக்கு முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் விதிக்கும் வரம்புகளை மூர்க்கமாக அடித்துத் தகர்க்கிறது. இதன் காரணமாக உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே மோதலை தோற்றுவிக்கிறது. இந்த மோதல் ஒரு நெருக்கடியில்தான் ஓய்கிறது. முதலாளித்துவம் சமூகரீதியான உழைப்பு என்பதை நடை முறைப்படுத்துகின்றது. ஆனால் சமூகரீதியான உழைப்பின் காரணமாக செய்யப்படும் பிரம்மாண்டமான உற்பத் தியின் பலன்கள் சமூகரீதியாய் பங்கிடப்படுவதில்லை. மாறாக அவை உற்பத்தி சாதனங்களின் உடமையாளர் களால் கைக்கொள்ளப்பட்டு அவர்களின் சொந்த பயன் பாட்டுக்கு மட்டுமே என்று ஆகின்றது. அதாவது பெரும் பான்மையான மக்களுக்கு உற்பத்திச்சக்தி வளர்ச்சியால் எந்த பயனும் இல்லை.


சரி, இந்த இயக்கப் போக்கின் மறுமுனையில், அதாவது உழைப்பாளி மக்களின் மத்தியில் நடப்பதென்ன? லாப வேட்டை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. அதேநேரத்தில் மனித உழைப்புச்சக்திக்கான தேவையை ஒப்பீட்டளவில் குறைக்கிறது. அதாவது வேலையற்றோ ரின் சேமப்படை ஒன்றை உருவாக்குகிறது. முதலாளித்துவம் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, எந்த அளவுக்கு உற்பத்தித்திறன் அதிகரிக்கி றதோ அதன் நேர்விகிதத்தில் மனித உழைப்பின் தேவையைக் குறைக்கிறது. 18 இதனால் சமூகத்தில் பயன்படுத்தப்படும் மூலதனத்தின் அளவில் வளர்ச்சி ஏற்படுகிறது. அதேநேரத்தில் முதலாளித்துவம் வேலைக்கமர்த்தும் தொழிலாளர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைகின்றது.

லாபவேட்டையில் முதலாளித்துவம் உற்பத்தியில் ஈடு படும் தொழிலாளர் எண்ணிக்கையை குறைப்பதோடு, அவர்களது கூலியையும் ஒப்பீட்டளவில் குறைக்கின்றது. வேலையற்றோரின் சேமப்படை இதனை நிறைவேற்ற ஒரு கருவியாக பயன்படுகின்றது. நெருக்கடிக்கு முந்தய காலகட்டத்தில் முதலாளித்துவம் கூலியை அதிகரிக்க அனுமதிக்கும் என்றாலும் இது பலமடங்கு லாப அதிகரிப்பை ஒட்டியே நடக்கின்றது. இந்த அதிகப்படி லாபம் என்பதும் மூலதனமாக மாறுகிறது. இதன் காரணமாக உற்பத்தி, மேலும் அதிகரிக்கின்றது.

தனது நோக்கமான மூலதன அதிகரிப்பு நிறைவேற ஒரு முதலாளி சில வழிமுறைகளை கைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. ஆனால் இந்த வழிமுறைகளே தவிர்க்கவியலாதவண்ணம் வரம்புகளற்று வளர்த்தெ டுக்கப்படும் உற்பத்திக்கும் மிகக்குறுகிய நுகர்வுத்தளத் திற்கும் இடையேயான சிக்கலை உருவாக்குகிறது. முதலாளித்துவத்தின் வழிமுறையே அதன் நோக்கத்திற்கு எதிரானதாக இருக்கின்றது.

ஆக முதலாளித்துவத்தின் கீழ் மூலதனப் பெருக்கம், உற்பத்திப்பெருக்கம் ஆகியவை, அதாவது உற்பத்திச் சக்தி களின் வளர்ச்சிக்கும் முதலாளித்துவத்தின் சமூகரீதியான உற்பத்திக்கும் இடையேயுள்ள முரண்பாடு முதலாளித்துவம் மேலும் வளர்வதை தடுக்கின்றது. நுகர்வுத்தளத்தை விரிவு செய்யாமல் உற்பத்தியை மட்டும் பெருக்குகின்ற இந்த செயல் முதலாளித்துவ சமூக கட்டமைப்பின் வரலாற்றுப்பணி (19)

உற்பத்திச்சக்திகள் கட்டமைக்கும் வரம்புகளை மூலதனத் தின் இயக்கம் கட்டுடைப்பதே நெருக்கடி. இத்தோடு கடன் அடிப்படையில் வணிகம் புரிய ஏற்படும் வசதிகள் இந்த இயக்கத்தை பலப்படுத்தி, முரண்பாடுகள் கூர்மை யடைவதை துரிப்படுத்துகிறது. முதலாளித்துவத்தின் எழுச்சிக் கட்டங்களில், மூலதனத்திற்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கின்றன. இதனால் இந்தக் கட்டத்தில் உபரி- மதிப்பு மாறாமல் இருந்தாலும் லாப விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆக, கடன் மூலதனமும் முதலாளித்துவ சமூக அமைப்பு இடும் வரம்புகளைத் தாண்டி உற்பத்தி நடைபெற வழிவகுக்கின்றது. கடைசியில் வங்கி மூலதனம்:



தனது கைவசமுள்ள சமூகத்தின் சேமிப்பு அனைத்தையும் தொழில் மற்றும் வணிக முதலாளித்துவம் தமது விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது. இதன் மூலம் மூலதனத்தின் மேலுள்ள தனியுடமைப் பாங்கு களையும் நீக்குகிறது... வங்கி மற்றும் அதன் கடன் வசதிகள் முதலாளித்துவ உற்பத்தியை அதன் சமூக வரம்புகளைத் தாண்டி வளர்ச்சியுற வைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது. இவை நெருக்கடிக்கும் ஊழலுக்கும் வகை செய்யும் கருவிகளாகவும் விளங்குகின்றன. (20)

ஆக முதலாளித்துவத்தின் சகல விசைகளும் உற்பத்தியை ஆன மட்டும் பெருக்குவது என்ற திசையில் செயல்படுகின்றன. முதலாளித்துவ உற்பத்திமுறை ஒரு நெகிழ்வுத் தன்மையை பெற்றுள்ளது. மிகக் குறுகிய அவகாசத்தில் உற்பத்தியை பல்கிப் பெருகச் செய்வது அதற்கு சாத்திய மாக உள்ளது. கச்சா ப்பொருட்களின் விநியோகம் மற்றும் உற்பத்தி பொருட்களின் விற்பனை சாத்தியம் ஆகியவை மட்டுமே பிரச்சினை. 21

முதலாளித்துவம் கச்சாப் பொருட்களின் உற்பத்தியையும் வளர்ச்சியடையச் செய்கிறது. புதிய சந்தைகளை வென் றெடுக்கிறது. புதிய வகை கச்சாப் பொருட்களை கண்டு பிடிக்கிறது. பலநாடுகளை கச்சாப் பொருள் வழங்கும் பண்ணையாகவே மாற்றுகிறது. இவற்றின் மூலம் கச்சாப் பொருள் என்கிற வடிவிலான தடைகளை வெல்கின்றது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சி, முதலாளித்துவ சமூக அமைப்பு ஏற்படுத்தும் மிகக்குறுகிய வரம்புகளால் தவிர்க்கவியலாத வகையில் மீண்டும் மீண்டும் சீர்குலை வுக்கு உள்ளாகிறது. உழைக்கும் வர்க்கத்தினை கடுமை யாக சுரண்டுவதன் மூலம் உற்பத்திச்சக்திகளை பிரம் மாண்டமாக வளர்த்து, உற்பத்திச் சாதனங்களையும், நுகர்வுப் பொருட்களையும் மலைபோல் செய்து இப்படி மலைபோல் குவியும் பொருட்கள் சரக்கு எனும் வடிவில், மிகப்பெரும் அளவையும் உபரி மதிப்பையும் தன்னிடத்தே கொண்டு விளங்குகிறது. ஆனால் இவற்றை வாங்கும் சக்தி கொண்டவர் இருந்தால்தான் இவை பயன் பாட்டுக்கு வரும். அதாவது மலைபோல் செய்து குவிக்கப்பட்ட சரக்குகளை விற்பனை செய்து ஆக வேண்டும்.

உழைப்பாளிகளைச் சுரண்டுவது நடந்தேறிவிட்டது. ஆனால், இச்சுரண்டலின் பலனை முதலாளிகள் இன்னும் அடையவில்லை.22 முதலாளித்துவத்தின் கீழ் வரம்பு களற்ற சுரண்டலுக்கும் சுரண்டலின் பலனை அடைவதற் குள்ள மிகக் குறுகிய சாத்தியத்திற்கும் இடையேயுள்ள இந்த முரண்பாடு நெருக்கடியில் வெளிப்படுகிறது.

சுரண்டலுக்கும், சுரண்டலின் பலனை அடைவதற்கும் வேறுவேறு விதமான நிபந்தனைகள் உள்ளன. சுரண்டலும் சுரண்டலின் பலனை அடைதலும் ஒருசேர நடப்பதில்லை. இரண்டிற்கும் இடையில் காலம், இடம் மற்றும் தனித்துவமான இயங்கு விதிகள் என்ற இடைவெளிகள் உள்ளன. சுரண்டலுக்கு சமூகத்தின் உற்பத்தி சக்திகள் மட்டுமே வரம் புகளாய் உள்ளன. ஆனால் பலன் அடைவதை வெவ்வேறு உற்பத்தி நிகழ்விலும் உள்ள உற்பத்தி உறவின் பங்குகளின் விகிதாச்சாரம் மற்றும் சமூகத்தின் நுகர்வுச்சக்தி ஆகியவை தீர்மானிக்கின்றன. பலன் என்பதை சமூகத்தின் உற்பத்தி பலமோ அல்லது சமூகத்திற்கு உள்ள நுகர்வுத் தேவையோ தீர்மானப்பதில்லை. மாறாக மிகவும் பகையுணர்வுடன் கூடிய பங்கீட்டு முறைகள்தான் நுகர்வு பலம் என்ன என்பதை தீர்மானிக்கின்றது. இது, மிகப் பெரும் மக்கட் தொகுதியின் நுகர்வானது மிகவும் குறுகிய அளவுடைய தாய் இருக்க நிர்ப்பந்திக்கின்றது... நுகர்வு மாறக்கூடி யதே. ஆனால் மிகவும் குறுகிய வரம்புகளுக்குள் மட்டுமே மாறக்கூடியதாய் உள்ளது. (23) உற்பத்தி - நுகர்வு:

உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையேயான சிக்கலும், சமமின்மையும் முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாட் டின் வெளிப்பாடு. சமூகரீதியான உற்பத்தியும் முதலாளித் துவ முறையான கைக்கொள்ளலும் முரண்படுதலே நெருக்கடி உருவாவதற்கான பிரதான காரணம் என்பதைக் கண்டோம். இது உற்பத்திக்கும் நுகர்வுக்குமிடையேயான சமமின்மை என்ற வடிவில் வெளிப்படுகின்றது. தனக்கு முந்தைய சமூக அமைப்புகளிலும் இருந்த இம்முரண் பாட்டை முதலாளித்துவம் காத்து வளர்த்து, உழைப்பிற் கும் மூலதனத்திற்கும் இடையேயான முரண்பாடு என்ற ஒரு புதிய வடிவத்தை பெறச் செய்கின்றது. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையேயான பெரும் இடைவெளி என்கிற வடிவில் வெளிவரும் முரண்பாடு முற்றி நெருக்கடியாய் வெடிக்கிறது. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையேயான முரண்பாடு எப்போதும் முதலாளித்துவத்தில் இருந்து வரக்கூடியதே. சமூகரீதி யான உற்பத்திக்கும் முதலாளித் துவரீதியான கைக்கொள்ளலுக்கும் இடையேயான முரண்பாடே இம்முரண்பாட்டை வளர்த்தெடுத்து நெருக்கடியாய் வெடிக்கச் செய்கிறது.

சமூகரீதியான உற்பத்திக்கும் முதலாளித்துவரீதியான கைக்கொள்ளலுக்கும் இடையேயான முரண்பாடாய் மட்டும் ஒரு ஒற்றைத் தோற்றம் தருவதில்லை. அது பல் வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. மார்க்ஸியக் கோட்பாடுகள் உற்பத்திக்கும் நுகர்வுக்குமிடையேயான உறவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் பிரதான முரண்பாடு அதுவல்ல. அதைப் போலவே உற்பத்தியின் வெவ்வேறு பிரிவுகளுக்குள் உள்ள சமச்சீரின்மையையும் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் இந்த சமச்சீரின்மையும் பிரதான முரண் பாட்டின் ஒரு வெளிப்பாடு மட்டுமே என்றுதான் அவதானிக்கிறது.

உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையேயான முரண்பாடும், வெவ்வேறு உற்பத்திப் பிரிவுகளுக்கும் இடையேயான முரண்பாடும் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாட் டின் வெவ்வேறு வெளித்தோற்றங்களே என்றும் ஒன்றை யொன்று சார்ந்து நிற்பவையென்றும் மார்க்ஸ் வலியுறுத்தி வந்துள்ளார்.

உற்பத்திச்சாதனங்களின் உற்பத்தி, நுகர்வுப் பொருட்க ளின் உற்பத்தி என முதலாளித்துவ உற்பத்தியை இருகூறு களாக பிரிக்கலாம். முதல் பிரிவு இரும்பு, எஃகு இயந்தி ரங்கள், ஏனைய உற்பத்தி சாதனங்களைப் படைக்கிறது. இரண்டாம் பிரிவு துணிமணி, ஆடை அணிகலன், வாழ்க் கைக்குத் தேவையான நுகர்வுப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. இருபகுதிகளுக்கும் இடையே ஓர் உள்ளார்ந்த உறவு உள்ளது. ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கவிய லாது. ஆனால் வெளியில் முதலாளித்துவ தனியுடைமை நிலைகளின்படி இரண்டும் தன்னிச்சையாய் இயங்குவ தாய் பிரிவுள்ளது. ஒருங்கிணைந்த சமூக உற்பத்தியின் இருபிரிவுகளுக்கு இடையேயான இப்பிளவே சமச்சீரின் மையின் சாத்தியத்தை உருவாக்குகிறது. சமூகரீதியான உற் பத்திக்கும் முதலாளித்துவரீதியான கைக்கொள்ளலுக்கும் இடையேயான அடிப்படை முரண்பாட்டின் தொடர்ச்சி யாய் இந்த சாத்தியம் ஒரு நிச்சயமாக மாறுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தியாகும் மதிப்பு இரண் டாகப் பிரிகிறது. ஒருபகுதி மூலதனம் என்ற வடிவில் உற்பத்திக்காகவும், மறுபகுதி வருவாய் என்ற வடிவில் முதலாளிகள், தொழிலாளர்களின் நுகர்வுக்கும் உரியதாகி றது. உற்பத்திச் சாதனங்களான சரக்குகள், நிலைமூலதனம் என்ற பகுதியால் வாங்கப்படுகிறது. அதாவது மீண்டும் மூலதனம் என்றாகிறது. எந்திரங்களை யாரும் நுகர்வுக் காக வாங்குவதில்லை, அவை உற்பத்திக்கான முதலீ டாய்த்தான் பயன்பட இயலும். எனவே அவை மூலதனப் பகுதியால் வாங்கப்பட்டு மீண்டும் மூலதனம் என்றுதான் ஆகவேண்டும். நுகர்வுக்காக உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் வருவாய் எனும் பகுதியோடு பரிவர்த்தனை செய்யப்படுகிறது. ஆக துணிமணி, ஆடை அணிகலன் போன்ற மக்கள் உபயோகிக்கும் பொருட்களை சரக்கு களாய் உற்பத்தி செய்யும் தொழிற்பகுதி, இந்த சரக்கு களை தனிநபர்களோடு அவர்களது வருவாயோடுதான் பரிவர்த்தனை செய்து கொள்ள இயலும். இவற்றை உற்பத் திக்காக மூலதனம் வாங்கவியலாது. நுகர்வுப்பொருட்கள் ஒருவிதத்தில் மாறு மூலதனத்தின் மூலம் கொள்முதலாகும். மறுஉற்பத்திக்கான பயன்பாடற்ற தனிநபர் நுகர்வுக்காகவே கொள்முதல் ஆகும்.


மாறுமூலதனத்தோடு பரிவர்த்தனையாகும் சரக்குகள் உண்மையில் தொழிலாளர்களது வருவாயோடு பரிவர்த் தனை செய்யப்பட்டு அவர்களது நுகர்வுக்கு தேவையை ஈடு செய்கின்றது. நிலை மூலதனத்தோடு பரிவர்த்தனை செய்யப்படும் சரக்குகள் உற்பத்தி சாதனங்கள் புதிய உற்பத்திக்கான மூலதனம் ஆகின்றது. (24) என்று லெனின் விளக்குகிறார். ஆக முதலாளித்துவத்தில் உற்பத்திக்கும், நுகர்வுக்கும் இடையேயான உள்ளார்ந்த முரண்பாடு மூல தனத்திற்கும் கூலிக்குமான முரண்பாடாய் வடிவம் பெற்று உற்பத்தியில் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே யான முரண்பாடாய் வெளிப்படுகின்றது. இதனால்தான் சமூகத்தின் நுகர்வுச் சக்தியும் வெவ்வேறு உற்பத்திப்பகுதிகளின் விகிதாச்சார இருப்பும் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாதது அல்ல, மாறாக நுகர்வுச் சக்தி இந்த விகிதாச்சாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்று என்று லெனின் வரையறுக்கின்றார்.
நுகர்வை மீறிய உற்பத்தி, மூலதனத்திரட்சியின் வேகத் தோடு ஈடுகொடுக்க இயலாத வருமான உயர்வு, சமூகத் தின் இருபகுதி உற்பத்திக்கு இடையே சமச்சீரின்மை, நுகர்வுப்பொருட்களின் உற்பத்தியை விஞ்சிய உற்பத்தி சாதனங்களின் உற்பத்தி விரிவாக்கம் என்பனவெல்லாம் சமூகரீதியான உற்பத்திக்கும் முதலாளித்துவரீதியான கைக்கொள்ளலுக்கும் இடையேயான அடிப்படை முரண் பாட்டின் வெளிவடிவங்களே. அடிப்படை முரண்பாடு நெருக்கடி என்கிற வன்மையான மோதலுக்கு இட்டுச் செல்வதைப்போல, பல்வேறு உற்பத்தி பகுதிகளுக்கிடை யேயான முரண்பாடும் எந்த சமரசத்திற்கும் விட்டுக் கொடுத்து தீர்வு காண்பதற்கும் நெருக்கடி வடிவிலின்றி சாத்தியமில்லாத வகையில் வளர்ச்சியடைகிறது.

முதலாளித்துவக்கூறுகளில் ஒன்று நாளுக்குநாள் மனித உழைப்பைக் குறைத்து இயந்திரமயமாக்குதலாகும். இது நிலை முதலீடு, மாறு முதலீட்டைவிட ஒப்பீட்டளவில் வேகமாக வளர்வதில் வெளிப்படுகின்றது. மாறு முதலீட் டில்தான் தொழிலாளரின் கூலி உள்ளது. நிலை முதலீடாய் மாறக்கூடிய உற்பத்தி சாதனங்களை தயாரிக்கும் தொழிற் பகுதிகளுக்கே மூலதனம் மென்மேலும் பாய்கிறது. முதலாளித்துவம் வளரவளர இப்போக்கு மேலும் மேலும் தீவிரமடைகிறது. நிலக்கரி, இரும்பு, எஃகு, ஆகியவற்றின் உற்பத்திக்கான முதலீடு ஒப்பீட்டளவில் உணவு, ஆடை, அணிகலன்களின் உற்பத்திக்கான முதலீட்டைக் காட்டிலும் வேகமாக வளர்கிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி விதி களின்படி நிலை முதலீடு, மாறு முதலீட்டைக் காட்டிலும் துரிதமாக வளர்ச்சியடையும். அதாவது புதிய முதலீட்டின் பெரும் பகுதி உற்பத்திச் சாதனங்களை உருவாக்கும் சமூக பொரு ளாதார அமைப்புப் பகுதியால் செய்யப்படுகின்றது. இந்தப் பகுதி நுகர்வுப்பொருட்களை உற்பத்தி செய்யும் அளவைவிட வேகமான வளர்ச்சியும் பெறுகிறது. (25)

மார்க்ஸியக் கோட்பாடு இதிலிருந்து மேலே செல்கின்றது. முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி நடவடிக்கையே சில வரம்புகளுக்கு உட்பட்டு அதன் சந்தையை உருவாக்குகி றது. உருவாகின்ற உபரியின் பெரும்பகுதி முதலாளிகளின் சொந்த நுகர்வுக்காக செல்லாமல் முதலீட்டு திரட்சியாக உற்பத்திப் பெருக்கத்திற்குச் செல்கிறது. இதனால் உற் பத்திச் சாதனங்களின் தேவையும் அதன் சந்தையும் விரிவ டைகின்றன. இதனால் புதிய உழைப்புச்சக்திக்கான தேவையும் அதிகரிக்கிறது. உழைப்பாளர்களின் கூலி நுகர்வுப்பொருட்களுக்காக செலவிடப்படுவதால் அப் பொருட்களுக்கான தேவையும் அதற்கான சந்தையும் விரிவடைகின்றன. ஆக முதலாளித்துவ பொருளுற்பத்தி தனக்கான சந்தையை தானே உருவாக்குகிறது. ஆனால், உற்பத்தி நுகர்வையும் சந்தையையும் மிஞ்சுகின்றது.

ஆனால் உற்பத்தி தன்னிச்சையாக நுகர்விலிருந்து தனிமைப்பட்டு வளர்கிறது. அதைப்போலவே உற்பத்திச் சாதனங்களை உருவாக்கும் பகுதி தன்னிச்சையாக நுகர்வுப் பொருட்களை உருவாக்கும் பகுதியிலிருந்து தனிமைப் பட்டு வளர்கிறது. ஆனால் முந்தய நிகழ்வு பிந்தய நிகழ்வை நடத்தும் செல்வாக்கு பெற்று விளங்குகிறது. உற்பத்திச் சாதனங்கள் பகுதி தன்னிச்சையாய் வளர்ச்சியடைந்தால் அதற்கும் நுகர்வுப்பொருட்கள் பகுதிக்குமிடையே முரண்பாடு ஏற்படுவது தவிர்க்க இயலாததும், எப்போதும் உள்ளுறைந்து இருப்பதும் ஆகும்.

சுயேச்சையான செயலால் உற்பத்திச் சாதனங்களின் உருவாக்கம் நடைபெற்றாலும், அதற்கும் நுகர்வுப் பொருட்கள் உற்பத்திக்கும் ஒரு பிணைப்புள்ளது. இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுவது வெறும் சடங்கிற்காக அல்ல. அவை உணவும் உடையும் ஏனைய நுகர்வுப் பொருட்களும் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. வரம்புகளற்ற உற்பத்தி, பின்தங்கி வரும் நுகர்வோடு முரண்படுவது போல, உற்பத்திச்சாதனங்களின் உற்பத்தியில் துரித வளர்ச்சி மிதமிஞ்சிய உற்பத்தியில் சென்று முடியும். வெவ் வேறு உற்பத்திப் பகுதிகளுக்கிடையேயான சமச்சீரின்மை என்ற வடிவில் வெளிப்படும் இந்நிகழ்வு ஒரு நெருக் கடியை அடைந்தே இடைவெளியை குறைக்கிறது.

நுகர்வுப்பொருட்களின் உற்பத்தி வளர்ச்சியைவிட உற் பத்திச் சாதனங்களின் உற்பத்தி வளர்ச்சி அதிகமிருப்பது, முதலாளித்துவத்தில் நுகர்வுக்கும் உற்பத்திக்கும் இடையேயான முரண்பாட்டின் வெளித்தோற்றமே. இது மூலதனத் திற்கும் கூலிக்குமிடையேயான முரண்பாடு கூர்மையடை வதைக் காட்டுகிறது. அதாவது ஒருமுனையில் செல்வம் குவிவதையும் மறுமுனையில் வறுமை வளர்ந்தோங்கு வதையும் காட்டுகிறது. உற்பத்திச்சாதனங்களின் உற்பத்தி துரித வளர்ச்சி அடைந்தது நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சியை மிஞ்சி நடப்பதற்கு ஒரு எல்லைவரையில் தான். உற்பத்திச்சாதனங்களை உருவாக்கும் பகுதிக்குள் ளாக நடக்கும் பரிவர்த்தனைகளை தாங்கி நிறுத்தும் வகையில்தான். தான் சொந்தமாக உருவாக்கிய சந்தை அனுமதிக்கும் வரையில்தான் இது நடக்க இயலும்.

நீண்டகால அளவில் பார்க்கும்போது உற்பத்தி சாதனங்களின் உற்பத்தி வளர்ச்சி, நுகர்வுப்பொருள் உற்பத்தி வளர்ச் சியைப் பாதிக்கும். ஆக முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாட்டையும், வெவ்வேறு உற்பத்திப் பகுதிகளுக்கு இடையேயான முரண்பாட்டையும் கூர்மைப்படுத்தி நெருக்கடியை உருவாக்குகின்றது. நெருக்கடி குறித்த மார்க்ஸியக் கோட்பாடு இந்தவிதத்தில் ஏனைய முதலா ளித்துவமும் அதன் ஒருவகையான சமூக ஜனநாயகமும் உருவாக்கியுள்ள நெருக்கடி குறித்த கோட்பாடுகளிலிருந்து பெரிதும் மாறுபடுகின்றது.

முதலாளித்துவ நெருக்கடி குறித்து பூர்ஷ்வா மற்றும் சமூக ஜனநாயகக் கோட்பாட்டாளர்கள் செய்யும் ஆய்வு முதலா ளித்துவத்தின் உள்முரண்பாட்டை மூடிமறைக்கும், மறு தலிக்கும் முயற்சியாகவே உள்ளது. நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் மீளவும் அதனை மறக்கவும் நெருக்கடி என்பது ஏதோ சில கணக்குகள் தவறாகிப் போனதால் ஏற்படுவதைப் போலவும், முதலாளித்துவத்தின் சட்டகத் திற்குள் அதற்கு ஆபத்தில்லாமல் நெருக்கடியை சமாளித்து விடலாம் என்பது போலவும் கூறிவருகின்றனர். மார்க்ஸ், நெருக்கடி என்பது முதலாளித்துவத்தின் சாரத்திலிருந்து உருவாகிறது என்று அவதானிக்கிறார்.

முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பண்பாகிய சமூகரீதியான உற்பத்தி - முதலாளித்துவ கைக்கொள்ளல் என்ற முரண்பாட்டிலிருந்து பீடிக்கி றது. முதலாளித்துவ உற்பத்திமுறை என்பதே நெருக்கடி யின் தோற்றுவாய். முதலாளித்துவ உற்பத்திமுறை இருக்கும்வரை நெருக்கடி தவிர்க்க இயலாததும் வெல்ல இயலாததும் ஆகும். நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமெனில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் முடிவுக்கு வர வேண்டும். நெருக்கடிகளின் கால இடைவெளி:

முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி இரவு - பகல் போல் மாறி மாறி வரும் நெருக்கடி, மந்தம், புத்துயிர்ப்பு, பெருக்கம், நெருக்கடி என்ற சட்டகங்களின் ஊடாக நடைபெறுகிறது. இச்சம்பவங்கள் ஒன்றையொன்று தொட்டும் தொடர்ந்தும் வருவதாய் உள்ளன. பல்வேறு விஷயங்களில் மார்க்ஸை குற்றங்கூறும் பூர்ஷ்வா பொருளாதார நிபுணர்களுக்கு மார்க்ஸின் நெருக்கடி கோட்பாட்டிலும் கூறுவதற்கு குற்றங்கள் உள்ளன. மார்க்ஸ் நெருக்கடி குறித்து மிகவும் மிகையாய், ஒரு பக்கச் சார்பாய், முதலாளித்துவத்தின் பன்முக வளர்ச்சிக்கட்டங்களில் ஒன்றான அதைப்பற்றி மட்டும் அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து விளக்குகிறார் என்பர்.

முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் மார்க்சியத்தின் நெருக்கடி கோட்பாட்டுக்கு மாறாக வணிகத்திற்கான நல்லகாலம், கெட்ட காலம் என்ற கட்டங்களைக் கொண்ட சுழல் ஓட்டம் என்ற கோட்பாட்டை முன்வைக்கின்றனர். அவர்கள் நெருக் கடியை, முதலாளித்துவ பொருளுற்பத்தியின் தலையாயப் பண்பு என்று அவதானிப்பதில்லை. மாறாக நெருக்கடி என்பது பல கட்டங்களாய் மாறி ஓடும் சுழல் ஓட்டத்தில் கடந்து செல்லக்கூடிய ஒரு கட்டம்தான் என்று கூறுகின் றனர். நெருக்கடி என்பதும் வணிகத்திற்கு சாதகமான காலகட்டங்கள் என்பதும் இந்த சுழல் ஓட்டத்தின் மாறிமாறி வரும் கட்டங்கள்தான் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் மார்க்ஸ் அவர்களைப் போலில்லாது நெருக்கடிக்கு அதற்குரிய அழுத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அளித்தார். வணிகச்சுழற்சியின் தலையாயப் பண்பாய் விளங்குவதாலும், முதலாளித்துவ பொருளுற்பத்தி அடையும் மாறுதல்கள், வளர்ச்சிகள் அனைத்தையும் தீர்மானிப்பதாக இருப்பதாலும் மார்க்ஸ் இங்ஙனம் வலியுறுத்தினார். இதனால் மார்க்ஸிய வணிகச்சுழல் கோட்பாடு, அடிப் படையில் நெருக்கடியின் கோட்பாடே.முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை, ஒரு குறிப்பிட்ட கால இடை வெளியில் நெருக்கடியால் ஆட்டம்கண்டு போவதாலும், முதலாளித்துவத்தின் அனைத்து முரண்பாடுகளும் இணை யும் புள்ளியாய் நெருக்கடியே இருப்பதாலும் இது சரியே. ஆனால் மார்க்ஸிய நெருக்கடி கோட்பாடு வணிக மந்தம், வணிக உத்வேகம் ஆகிய கட்டங்கள் இருப்பதை நிராகரிக்க வில்லை. மாறாக நெருக்கடி எங்ஙனம் வணிகச் சுழற்சியின் தலையாயப்பண்பு என விளக்குமிடத்தில் மற்ற கட்டங்கள் குறித்த ஒரே ஒரு அறிவியல்பூர்வமான விளக்கத்தை அளிப்பது மார்க்ஸ் மட்டுமே.

மார்க்ஸின் கூற்றுப்படி நெருக்கடி இருப்பிலுள்ள முரண் பாடுகளுக்கு ஒரு தற்காலிகமான, வன்மையான தீர்வைக் காண்பது ஆகும். (26) முதலாளித்துவத்தின் அடிப்படை யானதும், அதன் வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிப்பதுமான முரண்பாடுகளுக்கு ஒரு தற்காலிகமான முரட்டுத்தனமான தீர்வாக நெருக்கடி விளங்குகின்றது. முதலீட்டின் மதிப்பிழப்பு, பொருட்களின் விலையாக்கம், சரக்குகளை அழிப்பது, உற்பத்திக் குறைவு ஆகிய நடவடிக்கைகள் மூலமாக உற்பத்திச் சக்திகளை இட மாற்றம் செய்கிறது. உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் தனது குறுகிய நுகர்வு அடித்தளத்திற்கும் உற்பத்திக்கும் இடையேயான தற்காலிக இடைவெளியை ஒழிக்கிறது. நெருக்கடி என்பதின் பலன் இந்த தற்காலிகத் தீர்வுதான்.

ஆகவே வளர்ச்சிநிலையிலுள்ள முதலாளித்துவத்தில் இடைவிடாத, நிரந்தர நெருக்கடிநிலை என்பதில்லை. ஏனெனில் நெருக்கடி கட்டத்தின்போது முதலாளித்துவத் தின் முரண்பாடுகளுக்கு ஒரு தற்காலிகத் தீர்வு கிடைக் கிறது. நிரந்தரமான நெருக்கடிகள் என்பன இல்லை. (27)

நெருக்கடி தற்காலிகமானதாக இருக்கின்றபடியால்தான் அது முதலாளித்துவச் சுழல் ஓட்டத்தில் முரண்பாடுகளை தீர்த்துவைக்கும் நிகழ்வாக இருக்கிறது. நெருக்கடியின் போது ஏற்பட்ட தீர்வைத் தொடர்ந்து முதலாளித்துவ உற் பத்திமுறை மீண்டும் துவங்குகிறது. நெருக்கடியின்போது முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் ஒழிக்கப்படுவ தில்லை. தற்காலிகமான தீர்வுதான் கிடைக்கிறது. இந்தத் தற்காலிகத் தீர்வைத் தொடர்ந்து ஒரு புதிய திசையில் மீண்டும் உற்பத்திக் குவிப்பை நோக்கி முதலாளித்துவம் பயணிக்கிறது. ஏனெனில் இந்தநிலையை ஏற்படுத்தும் முரண்பாடுகள் ஒழிக்கப்படுவதில்லை. இந்தப்போக்கில் முதலாளித்துவம் தனது குறுகிய உறவுகளால் மீண்டும் மீண்டும் கட்டப் போவது நேர்கிறது. ஏனெனில் முதலா ளித்துவ முறையில் சந்தையின் வரம்புகளை கணக்கில் கொள்ளாமல்தான் உற்பத்தி நடைபெறுகிறது. (28)


சமூகரீதியான உற்பத்தி முதலாளித்துவ கைக்கொள்ளல் எனும் அடிப்படை முரண்பாடு ஒழிக்கப்படாத காரணத்தால் முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி மீண்டும் ஒரு புதிய நெருக்கடியை நோக்கி நகர்கின்றது. இந்தவகையில் நெருக்கடி மீண்டும் மீண்டும் ஒரு நெருக் கடியைத் தோற்றுவிக்கும். அதே காரணங்கள் நெருக்கடி காலச்சுழற்சியில் மீண்டும் மீண்டும் ஏற்படவும் காரண மாயிருக்கிறது. அதுவரையில் உள்ள முரண்பாடுகளை நெருக்கடி தற்காலிகமாக தீர்த்து வைக்கிறது. உற்பத்தி தொடர்ந்து வளர்ந்து ஒரு புதிய நெருக்கடிவரை செல்கிறது.


முதலாளித்துவ பொருளுற்பத்தியின் சுழல் ஓட்டத்திற்கு நிலை மூலதனம் எங்ஙனம் புதுப்பிக்கப்படுகிறது என்பது கூர்ந்து கவனிக்கப்படவேண்டும். கச்சாப் பொருட்களின் மதிப்பும், மாறு முதலீடும் தன்னகத்தே அடக்கியுள்ள சுற்று மூலதனம் ஒவ்வொரு முடிவிலும் முதலாளிகளை வந்தடைகிறது. இயந்திரங்கள், கட்டிடங்கள் தன்னகத்தே கொண்டுள்ள நிலை மூலதனம் மெதுவாகத்தான் தன் மதிப்பை இழக்கிறது. அது மெதுவாகத்தான் சிறுசிறு துளியாம் கடன் அளிப்பு தேய்மான ஈடு ஆகியன மூலம் முதலாளிக ளால் மீட்கப் படுகிறது. ஆனால் புதிய மூலதனம், மிகப் பெருமளவில் ஒற்றைத் தவணையில் ஒரு தொழிலரங்கில் இடப்படுகிறது. இது உற்பத்திச்சாதன பொருட்களான கட்டிடம், பொருட்கள், இரும்பு, எஃகு, இயந்திரங்கள் போன்றதின் தேவையை திடீரென பலமடங்கு அதிகரிக் கிறது. இதனால் இவற்றுக்கான சந்தையும், இவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் துரித வளர்ச்சி அடைகின்றன.

நிலை மூலதனத்தின் பகுதியான இயந்திரங்கள் தேய் மானம், பழுதுபடல் ஆகிய காரணங்களாக மட்டும் மாற் றப்படுவதில்லை. அறிவியல், தொழில்நுட்ப முன்னேற் றங்களின் காரணமாக நவீன இயந்திரங்கள் உருவாக்கப்படு கின்றன. இவை மேம்பட்ட பின்னர் வழக்கிலிருந்த இயந்தி ரங்களைக் காட்டிலும் அதிகத் திறனுடையவையாக இருக் கின்றன. விற்பனை அரங்கிலிருக்கும் கடும் போட்டி இந்த புதிய இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பழைய இயந்திரங்களை மாற்றுவதை நிர்ப்பந்தப்படுத்துகின்றது.

புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்க ளும் நெருக்கடி மற்றும் தொழில் மந்தமான கால கட்டங்க ளில்தான் பெரும் எண்ணிக்கையில் நிகழ்கிறது. ஏனெனில் இந்தக் கட்டங்களின் போதுதான் முதலாளிகளுக்கிடையே யான சந்தைப் போட்டி உக்கிரமாக இருக்கும். நஷ்டத்தை தவிர்க்கவும், விலையிறக்கத்தை சமாளிக்கவும் முதலாளி கள் உற்பத்தி செலவை ஆனமட்டும் குறைக்கப் பாடுபடு கின்றனர். இது இரண்டுவழிகளில் நடைபெறுகிறது. ஒன்று கூலியைக் குறைப்பதும் வேலைப்பளுவை அதிகரிப்பது மாகிய நடவடிக்கை. மற்றொன்று பழைய இயந்திரங்களை மாற்றி புதிய மேம்பட்ட இயந்திரங்களை புகுத்தும் நடவடிக்கை அதாவது நிலை மூலதனத்தை புதுப்பிக்கும் நடவடிக்கை.


முதலாளித்துவ பொருளுற்பத்தியோடு இணைந்து கடும் வேகத்தில் முன்னேற்றமடையும் உற்பத்திச் சாதனங்களின் தொழில்நுட்பம் நிலை மூலதனத்தின் வளர்ச்சியை துரிதப் படுத்துகிறது. இயந்திரங்கள் உண்மையிலேயே தேய்மானம், பழுதுபடல் ஆகிய காரணங்களால் மாற்றப்படுவ தற்கு பதிலாக வழக்கொழிவது என்ற கண்ணுக்கு புலனா காத தேய்மானத்தின் காரணமாக மாற்றப்படுகின்றன. நெருக்கடி பல பெருமளவிலான புதிய முதலீட்டுக்கான துவக்கமாய் அமைகின்றது. (29)


ஆக வர்த்தகத்தின் நற்காலப் பொழுதுகளில் ஒன்று திரண்ட முரண்பாடுகளுக்கு நெருக்கடி கட்டத்தின்போது தற் காலிகத் தீர்வு ஏற்படுகிறது. உற்பத்திச்சக்திகளின் ஒரு பகுதி அழிக்கப்படுவதால் இந்தத் தீர்வு ஏற்படுகிறது. இது புதிய பெருமுதலீடுகள் செய்வதற்கேற்ற சூழலை உருவாக்குகி றது. வேறு வார்த்தைகளில் கூறினால் ஒரு புதிய முன்னேற் றத்திற்கான துவக்கப்புள்ளியாக நெருக்கடி திகழ்கின்றது. இந்த முன்னேற்றங்கள் முதலில் உற்பத்தி சாதனங்களை உருவாக்கும் கனரக தொழிற்சாலைகளில் ஏற்படுகின்றன. புதிய உற்பத்திச் சாதனங்களுக்கான தேவை ஏன் ஏற்படுகி றது. அது உற்பத்திச் சாதனங்களை உருவாக்கும் பகுதி யிலிருந்து எழுகின்றதா அல்லது நுகர்வுப் பொருட்களை உருவாக்கும் பகுதியிலிருந்து எழுகின்றதா என்பதெல்லாம் கவனத்திற்குள்ளாவதில்லை. ஏனெனில் நெருக்கடி எல்லா வகை உற்பத்தியையும் பாதிக்கிறது. வியாபாரப் போட்டி உக்கிரம் அடைவது எல்லாத் தளங்களிலும் நடக்கிறது. விலைச்சரிவு எல்லாப் பொருட்களிலும் ஏற்படுகிறது. உற்பத்தி இயந்திரங்கள் அவற்றின் உண்மையான ஆயுளுக்கு முன்பே மாற்றப்படுவதற்கான அடிப்படை உருவாகிறது.


உற்பத்திச்சாதனங்களை உருவாக்கும் தொழில்பகுதிதான் சமூக உற்பத்தியின் போக்கை மாற்றும் செல்வாக்கு உடையதாகத் திகழ்கின்றது. வணிகத்தின் நற்காலத்தை நோக்கிய முன்னேற்றம் இந்த தொழில்பகுதியில் ஏற்படும் வளர்ச்சி அதில் ஈடுபடும் தொழிலாளர் எண்ணிக் கையை அதிகரிக்கின்றது. நுகர்வுப் பொருட்களின் தேவை அதிகரிக்க நுகர்வுப்பொருட்களின் உற்பத்தி அதிகரிக்க வேண்டியுள்ளது. இதனால் இதற்கான உற்பத்திச் சாதனங்களின் உற்பத்தி அதிகரிக்க வேண்டியுள்ளது.


வணிக வளர்ச்சி முழுமையாய் மலர்கின்றது. உற்பத்திச் சாதனங்களை உருவாக்கும் அரங்கு தேவையை சமாளிக்குமளவுக்கு உற்பத்தி செய்யவியலாமல் திண் டாடும் நிலைவரை இது செல்கின்றது. பின் இது மித மிஞ்சிய உற்பத்திவரை சென்று ஒரு புதிய நெருக்கடியை தோற்றுவிக்கின்றது. இந்தப் போக்கு மீண்டும் மீண்டும் நடந்தேறுகிறது. நிலை மூலதனத்தை புதுப்பிக்க கடைப்பிடிக்கப்படும் முரண்பாடுகள், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நெருக்கடி ஏற்படுவதற்கான பொருளடிப்படையை உரு வாக்குகின்றது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி, திரட்சி மற்றும் குவிப்பு என்பதை உடன் ஒட்டி நிலை மூல தனத்தின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.


ஒவ்வொரு முறை ஏற்படும் நெருக்கடியும் அதற்கு முந்தய நெருக்கடிகளைக் காட்டிலும் அகண்டதொரு தளத்தை தாக்கிச் செல்கின்றது. ஒவ்வொரு நெருக்கடியும் அதற்கு முந்தய நெருக்கடியைக் காட்டிலும் அதிகப்படியான சேதத்தை விளைவித்துச் செல்கிறது. சமூகத்தின் உற்பத்திச் சாதன பரிமாணம் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக ஆகின்றதோ அதற்கு ஏற்ப சமூகரீதியான உற்பத்திக்கும் - முதலாளித்துவரீதியான கைக்கொள்ளலுக்குமான முரண் பாடும் கூர்மையாகிறது. எனவே நெருக்கடிகளுக்கிடை யேயான கால இடைவெளி முதலாளித்துவம் வளர வளர மேலும் மேலும் சுருங்குகின்றது. அதாவது நெருக்கடி முன்னர் ஏற்பட்டதைவிட அடிக்கடி ஏற்படுகின்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை சராசரியாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்ட நெருக்கடி பின்னர் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டது.


முதலாளித்துவம் அதன் உயரிய கட்டமாகிய ஏகபோகம் என்ற நிலையை அடைவதற்கு முந்தய காலத்தில் மார்க்ஸ் தனது நெருக்கடி குறித்த கோட்பாட்டை உருவாக்கினார். இது அவரது அரசியல் எதிரிகளுக்கு ஒரு வசதியான சாக்கா கியது. குறிப்பாக சமூக ஜனநாயகவாதிகளுக்கு மார்க்ஸின் நெருக்கடி கோட்பாடு ஏகபோக நிலைக்கு முந்தய முதலாளித்துவத்திற்கு வேண்டுமானால் பொருந்தக் கூடியதாக இருக்கலாம். அது ஏகபோக முதலாளித்துவத் திற்கு பொருந்தாது. குறிப்பாக உலகப்போருக்கு பிந்திய தும் மிகவும் ஒருங்கமைக்கப்பட்டதுமான முதலாளித் துவத்திற்கு இது பொருந்தாது என்றும் கூற முற்பட்டனர். ஆனால் உலகப்போர்களுக்குப் பின் வந்த ஏகபோக முதலாளித்துவம் மார்க்ஸின் நெருக்கடி கோட்பாட்டை தவறென நிரூபிக்கவில்லை. மாறாக மார்க்ஸின் நெருக் கடி கோட்பாடு அட்சரம் பிசகாமல் சரியென நிரூபித்தது. நெருக்கடி குறித்த மார்க்சிய கோட்பாடு மிகச் சரியானதும் துல்லியமானதும் ஆகும் என்பதற்கான மறுக்க இயலாத நிரூபணம் 1929ஆம் ஆண்டு ஏற்பட்டதும் முதலாளித்துவத்தின் வரலாற்றில் மிகக் கடுமையானதுமான நெருக்கடி ஆகும்.

மேற்கோள்கள்:

1.மார்க்ஸ் - உபரி மதிப்பு கோட்பாடுகள், தொ 2, பகுதி 2, ப. 281
2,3. மார்க்ஸ் - மூலதனம் - தொகுதி 1 ப. 127
4. மார்க்ஸ் - மூலதனம் - தொகுதி 1. ப. 126
5. மார்க்ஸ் - மூலதனம் - தொகுதி 1 ப. 128
6.மார்க்ஸ் - உபரி மதிப்பு கோட்பாடுகள் - தொகுதி 2, பகுதி 2 பக்கம் 289 - 285
7,8,9. மார்க்ஸ் - உபரி மதிப்பு கோட்பாடுகள் 10,11. லெனின் - மக்களின் நண்பர்கள் - 1894,தொ.நூ - தொகுப்பு - 1
12,13,14. மார்க்ஸ் - மூலதனம் - தொகுதி 1
15. மார்க்ஸ், மூலதனம் - தொ. 2
16. மார்க்ஸ் - தொ. 3, ப. 292
17. மார்க்ஸ், உபரி மதிப்பு கோட்பாடுகள் - தொ. 2, ப. 263
18. ஏங்கெல்ஸ் - உழைக்கும் வர்க்கத்தின் நிலை - ப. 84
19. லெனின் - தொ.நூ. தொ. 3
20. மார்க்ஸ் - மூலதனம் - தொ. 3 - ப. 712 - 713
21. மார்க்ஸ், மூலதனம் - தொ. 1 ப. 492
22,23. மார்க்ஸ் - மூலதனம் - தொ. 3, ப. 286
24. லெனின் - தொகுப்பு நூல்கள் - தொ. 2, ப. 495
25. லெனின் , தொ.நூ. தொ. 2, ப. 400
26. மார்க்ஸ், மூலதனம், தொ. 111
27,28. மார்க்ஸ் - உபரி மதிப்பு கோட்பாடுகள் தொ. 2, பகுதி 2 ப. 269
29. மார்க்ஸ், மூலதனம் , தொ. 2, ப. 130


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com