அதிகாரம் பாரதி வசந்தன்
நடந்து போகும் சமயம்
நாய்கள் எதிர்ப்பட்டால்
ஒரு வணக்கம் வைத்துவிடுவது
நல்லது
வஞ்சம் வைத்தபடி
எந்த நாய் எப்போது கடிக்குமென்று
யாருக்குத் தெரியும்
கடித்தால்
தொப்புளைச் சுற்றிப்
பதினாறு ஊசிகள் போடுவது
அந்தக்காலம்
இப்போது ஒரே ஒரு ஊசிதான்
அதுவும்
நாய்களின் கையிலேயே இருப்பதால்
நாடு முழுக்க
இந்த நாய்கள் என்றாலே பயம்
எப்போதாவது
நாய் வண்டிக்காரர்கள் வருகிறார்கள்
வண்டிக்குள் எட்டிப் பார்த்தால்
பாவம்
வாயில்லாத ஜீவன்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|