மா.காளிதாஸ் கவிதைகள்
அதிர்ந்து கொண்டேயிருக்கிறது
ரகசியங்களின் செவிப்பறை.
ஒப்பனைகளைப் பூசிப்பூசி
சவக்களை கட்டுகின்றன
நெறிகட்டிய காயங்களிலிருந்து
தானாகவே கசியும் ரகசியங்கள்
யாரும் யாரிடமும் சொல்லாத
ரகசியமொன்று
தெருவோரம் கிடக்கிறது
அனாதைப் பிணமாய்.
யாரோ கொளுத்திப் போட்ட தீயில்
பற்றி எரிகிறது சொற்களின் காடு.
மீண்டு வந்த ரகசியம்
பொலபொலவென உதிர்கிறது.
ரகசியக் குறியீடுகள் புரியாமல்
விலகி நடந்தவரின்
பால்கட்டிய இடது முலையில் வடிகிறது
ஒரு ஒற்றைச் சொல்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|