மூதோழி
புனிதன்
சிறியா நங்கையும்
பெரியா நங்கையும்
தோழிகள் அவளுக்கு
நெடுஞ்சாலையோரம்
அரசமரமும் அத்திமரமும்
வளர்க்கிறாள்
எதிர்ப்பாடும் நலவிசாரிப்புகளையே
சிறியவனமாய் வளர்த்து வருகிறாள்
வெகுமைல்கல் தொலைவு சென்று
தண்ணீர் சுமந்து வரும்
அவள் கண்களின் மொழி
இயல்பானது
அவள் சிறிய வனத்தில் அடையும்
பறவைகளின் எண்ணிக்கையோ
ஒருபோதும்
அவளுக்குத் தெரியாது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|