யாழி கவிதைகள்
.
1.
சினேகமாய் புன்னகைத்து
மறைந்து சென்றாய்
குழந்தைகளுடனே
எதையோ காட்டுகிறாள்
என் மனைவி
வேடிக்கைக்கென
கைக்கொட்டி சிரிக்கிறது
என் குழந்தை
உற்றுப்பார்க்கையில்
அழுக்கு பிசிப்பெறி
ஆங்காங்கே கிழிசலாய்
அந்தரங்கள் புலப்பட
தலைசொறிந்து நிற்கிறது
எப்போதோ நாம் விட்டுச்சென்ற
காதல்.
2.
எட்டா உயரத்தில் இருப்பதாய்
உணர்த்தப்பட்டது
ஏறிச்செல்லும் வாய்ப்புத்தர
முற்படாமல்
முடக்கப்பட்டிருந்தது ஏணி.
பிரயாசைப்பட்டு முயலுகையில்
சேர்ந்தன கற்கள்
விழுந்த பாடில்லை
அஸ்திரங்களாய் பிரயோகித்த பின்னும்
விக்கிரமாதித்தனாய்
வேடந்தரிக்க
ஆட்கொண்டது அயர்ச்சி
மீள முற்படுகையில்
கொய்து சென்றான்
யாரோ ஒருவன்
தொரட்டி ஒன்றை
கையில் பிடித்தவாறு....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|