எதிர் சங்கமம்
.
உட்கார்ந்திருக்கும் இடம் விட்டு நகராமல் ரிமோட் மூலம் விரும்பியச் சேனல்களை அமுக்கிப் பார்க்கிற நகரவாசிகளை குஷிப்படுத்த சென்னை சங்கமம் நடக்கிறது. தப்பாட்டம் ஆடிய மேடையில் தான் பாட முடியாது என்று ஒரு சாஸ்திரீய சாரீரி மறுத்தது, கிராமியக் கலைஞர்களை உதாசீனமாக நடத்தியது என்றெல்லாம் வரும் புகார்களை அறியாமல் கிளம்பிப் போன கலைஞர்களும் எழுத்தாளர்களும் நொந்து திரும்புகின்றனர்.
இதற்கொரு மாற்றாக கலைஞர்களும் கலையும் எங்கே இருக்கிறதோ அங்கே தேடிப் போய் கொண்டாடுவதாக அமைந்தது சேலம் மாவட்டம் ஏர்வாடி கிராமத்தில் தெருக்கூத்துக் கலைஞர்களின் சங்கமம். அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் விமானநிலையம் இல்லாததால்அதிகாரப்பூர்வ கலைவளர்ப்பு உரக் கம்பனியார் வர மறுத்துவிட்டாலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எழுத்தாளர்களும் நாடகக் கலைஞர்களும் திரண்டிருந்தது நம்பிக்கையளிக்கிறது.
கலைஞரைத் தேடிப் போவதா, கலைஞர்களைத் தேடிப் போவதா என்ற குழப்பத்திற்கு விடை சொல்வதைப் போலவும் தெருக்கூத்து சங்கமத்தை நடத்திய களரி தெருக்கூத்து பயிற்சிப்பட்டறை அமைப்புக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் புதுவிசையின் பாராட்டுகள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|