Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
Unnatham Logo

யாழன் ஆதி கவிதைகள்

பதிவு

கண்ணாடியின் பூத்திரையில்
பதிந்திருக்கின்றன உன் முகத்தின் பிம்பங்கள்
பூக்களின் உள்ளீட்டில் கனிகிறது
உன்னிருப்பிடத்திற்கான இருக்கை
மெல்ல
பனியாகிறது கண்ணாடி
பூக்கள் நனைகின்றன
கூந்தல் கற்றையின் நுனியில்
வழிகிறது பனிநீர்
தரையில் உதிர்ந்த சொட்டில்
புலப்படுகிறது உன் பிம்பம்
ஒழுங்காய் வடிவமைந்திருக்கின்றன
உன் கண்கள்
குளிர்ந்திருக்கிறது உன் முகம்
அந்தத் தரையில்.

Morning
புலர்ச்சி

வடிந்த நிலவின் ஒளி கமறும்
இலைகளின் அடியில்
பதுங்கியிருக்கும் இருள்
இருத்தலின் த்வனி கிளறும்
இரவின் தட்டையான பகுதிகளை
உதிராமல் வீசுகின்ற
மரங்களிடையே கிழிந்து
சிக்குகின்றன வெளவால்கள்
சிவந்த பழங்களிலிருந்து
விடியலைக் கொத்திக் கொண்டு
செல்கின்றன கடல் மேல் பறவைகள்
சூரியனில் கரைந்த அவைகள்
மீள்கின்ற வழியில் நிலவில் தங்கிவரும்
வண்ணக் கிளிகளைப் புணர்ந்து
பிரசவிக்கின்றன
பகலின் முட்டைகளை.

இசையறை

இசையில் மிதக்கும் அறையில்
தனித்திருந்தேன்
காற்றில் படிந்த
இசைத்துளிகள் நனைத்தன என்னை
முழுவதும் தொலைந்து மூழ்கிப்
போயிருந்தேன்
மேலெழும் எண்ணம் எதுவுமற்று
கூக்குரலிட்டன இசையின் நூல்களில்
கோக்கப்பட்ட வார்த்தைப் பூச்சிகள்
அறையின் வாசல் முழுதும்
முளைத்திருந்தன இசைச் சுவடுகள்
மௌனத்தை மீறி
நீண்ட ஆலாபனை முடிந்ததும்
சுழல ஆரம்பித்தது என் இசையின் வட்டு
ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன் நான்.

கூந்தல் வழி

துயிலின் அழகில் ததும்பும் உன்னை
காணவேண்டி
இரவின் வழிகளில் அலைகிறேன்
வழிகள் மீட்டுகின்றன என்னை
ஓர் ஒற்றைப் பாதை முடிந்த கானகத்தின்
இருளில் விண்மீன்கள் உதிர்ந்து கிடந்தன
ஒவ்வொன்றாய் சேமித்துவெளியேறுகிறேன்
அடுத்த பாதையில் உன்கூந்தல் முடிகள்
சிக்கிய சீப்பொன்றைக் காண நேர்கிறது
ரத்தச் சிவப்பாய் மாறியிருந்த கூந்தல் மயிர்களை
அடையாளம் காணமுடியவில்லை என்னால்
அதன் வாசத்தின் ஞாபகம்ஆட்கொண்டது என்னை
என்விரல்கள் அளாவிய உன் கூந்தல் வழி
என்னை நடத்தியது
மெதுவாக பள்ளத்தாக்குகளில் இறங்குகிறேன்
உன் மூக்குத்தி தடுக்கி விழ
பவளங்களின் இடுக்குக்குள் சிக்குகிறேன்
மென்மையாக உறங்கிக் கொண்டிருக்கும் உன்னிடமிருந்து
ஒவ்வொன்றாய்ப் பிறந்தன முத்தங்கள்.
(இந்ராவுக்கு)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com