உனது நதிக்கரையில்…
கு. உமாதேவி
உனது நதிக்கரையில்
நனைந்து கொண்டிருக்கிறேன்
நீலநிற மீனின் செவுள்களை விரித்தபடி
பெரும் அத்யாயத்தின்
புரட்சிப் பக்கங்களைப்போல
இவ்வாழ்க்கை பரிச்சயம் எனக்கு
என்னால் முடிந்த அல்லது
அப்படி நானேற்றுக்கொண்ட
எனதெல்லைகளை
தீர்மானிக்காமல் பழக்கு
ஒரு பஞ்சினைப்போல் அரவணைத்து
உன்தூரங்களை
அப்போதுதான்
நதிக்கரை துக்கம் விசாரித்தாலும்
இன்னும் தீவிரமாய் - இனிமையாய்
கடக்க முடியும் எனதன்பை
உன்னில் கரைத்தபடி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|