ஆப்பிள் சதி
சிநேகிதன்
பாம்புருச் சாத்தானின்
பிரதான வைரி
கடவுள் தானெனில்
ஏன் ஆதாமும் ஏவாளும்
தண்டிக்கப்பட்டனர்
சூன்யங்களுக்கோ
கொடுங்கோன்மைக்கோ
சுவர்க்கத்தின் கதவுகள்
வழிவிடாதெனில்
அங்கெப்படிச் சாத்தான்?
கடவுளின் சுட்டுக்கு
எதிர் சுட்டும்
நெளிந்த சாத்தானின்
வியூகக் காய்களெனப்
படுகிறார்கள்
ஏவாளும்
சபிக்கப்பட்ட கனியும்
இப்படியும் இருக்கலாம்
ஏவாள் பேரழகியெனில்
ஆதாம் மீதான
பொறாமையிலும்
நிகழ்ந்திருக்கலாம் ஆப்பிள்சதி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|