Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
டிசம்பர் 2008
உலகின் வருங்காலம்
பாலா

இயற்கை மீதான மாந்த அதிகாரம் ஊன நாம் சொல்வது சிலர் இயற்கையைத் தங்கள் 'கருவியாகக்' கொண்டு மற்றவர் மீது செலுத்தும் அதிகாரம் என்றாகி விட்டது." - சி. ஊஸ். லூயிஸ்

இந்தத் தொடரின் இந்த இறுதிக் கட்டுரையை மூன்று கதைகளைச் சொல்லித் தொடங்குவது பொருத்தமாக இருக்கக் கூடும். அவை ஒவ்வொன்றும் நன்கறிந்த கதைகளே என்றாலும் அவற்றை ஒன்றாகக் கண்டால் அவை இன்னும் பெரிய பாங்கைக் காட்டும் வெண்திரையை விரிக்கின்றன. முதலாவதாக நர்மதை ஆறு பற்றிய கதை.

நர்மதை அறு மத்திய பிரதேசத்தில் அமர்கன்டக்கில் மைக்கல் மலைத்தொடர்களில் பிறந்து, மத்திய பிரதேசம், மகாராத்திரம், குசராத் அகிய முன்று மாநிலங்கள் வழியாக 1312 கிமீ பாய்ந்து ஆறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது. 30 பேரணைகளும், 135 நடுத்தர அணைகளும், 3000 சிற்றணைகளும் கட்டி நர்மதை மற்றும் அதன் கிளையாறுகளின் நீரைப் பயன்படுத்திக் கொள்வதே அரசின் திட்டமாகும். இந்த அணைக்குப் பரிந்து பேசுபவர்கள் இந்தத் திட்டம் பேரளவுகளில் நீரும் மின்சாரமும் வழங்கும் என்கிறார்கள். இவை வளர்ச்சிக்குக் கட்டாயம் தேவைப்படுவதாகச் சொல்கிறார்கள்.

Chipko அணை எதிர்ப்பாளர்கள் நர்மதை மீட்பு இயக்கம் என்ற பெயரில் அணி திரண்டு அதனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனென்றால் இந்தத் திட்டம் (சுமார் ஐந்து லட்சம்) பழங்குடிகளையும் தலித்துகளையும் இடம்பெறச் செய்கிறது; புலம்பெயர்ந்தவர்களுக்குச் சரிவரப் புனர்வாழ்வும் அளிப்பதில்லை; முழு அகக்கட்டமைப்பும் 40 கோடி சதுர அடிக்காட்டுப் பரப்பை மூழ்கடிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே திணைமவியல் அமைப்பு அழிகிறது. ஆற்றுக் கழிமுக அமைப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இரண்டாவது கதை சிப்கோ ஆயக்கம் (சிப்கோவை அப்படியே மொழிபெயர்த்தால் 'ஒட்டு' ஊனப் பொருள் தரும்) தொடர்பானது. இது 1973இல் சாமோலி மாவட்டத்தில் அரம்பிக்கப்பட்ட ஆயக்கம். இது அங்கிருந்து மற்றப் பகுதிகளுக்குப் பரவியது. பெண் உழவர்க் குழுக்கள் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும் மாநிலக் காட்டுத் துறையின் ஒப்பந்தக்காரர் அமைப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தங்களது வழிவழியான காட்டு உரிமைகளை மீட்டெடுக்கவும் போராடினர். மரங்களைக் 'கட்டித் தழுவுதல்' அவர்களது போராட்ட முறையாக இருந்தது. முதலில் எங்களை வெட்டி விட்டுப் பிறகு மரங்களை வெட்டுங்கள் எனக் கூறாமல் கூறினார்கள்.

அவர்களது கூட்டங்களில் ஒன்றில் இருக்க நேரிட்ட அனில் அகர்வால் என்னும் இந்தியா டுடே செய்தியாளர் கூறுகிறார்: "அவர்கள் தாங்கள் மேலை வகைப்பட்ட சுற்றுச்சூழல் அர்வலர்கள் அல்லர் என அழுத்தந்திருத்தமாகக் கூறினார்கள். அவர்களைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் என்பது வெறும் அழகு மரங்களும், புலிகளும் மட்டுமல்ல, இவற்றையெல்லாம் விட மிகப் பெரிது. அவர்கள் குறிக்கோள் முழுக்க முழுக்கத் தங்களைப் பற்றியதாகவே இருந்தது. அவர்கள்தம் வாழ்வே மரங்களின் இருப்புடன் பின்னிப் பிணைந்திருந்தது. எனவே அவையின்றி அவர்கள்தம் பண்பாடும் ஆய்வுமே கேள்விக்குறியானது."

மூன்றாவது கதை போபால் நச்சுவாயுத் துயரம் தொடர்பானது. 1984 திசம்பர் 2-3 இரவுகளில் மத்தியப்பிரதேசம் போபால் யூனியன் கார்பைடு தொழிலகத்திலிருந்து 27 டன் மெத்தில் ஏசோ சயனைடு என்னும் கொடு நஞ்சு வாயு கசிந்தது. கொள்கலனுள் நீர் நுழைந்து எற்படுத்திய வேதி வினை விபத்தை உண்டாக்கியது. இத்தகையக் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கென்று அமைக்கப்பட்டிருந்த ஆறு பாதுகாப்பு அமைப்புகளில் எதுவுமே செயல்படவில்லை. இதனால் மரண வாயு போபால் நகரெங்கும் பரவியது. ஐந்து லட்சம் மக்கள் வாயுவை உட்கொள்ள நேர்ந்தது. இதனால் இன்று வரை 20,000 பேர் மடிந்துள்ளனர். 1,20,000க்கு அதிகமானோர் இன்றுங்கூட பார்வையிழப்பு, கடுமையான மூச்சுத் திணறல், மாதர் நோய்கள் எனப் பல தீவிர நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

நிகழ்விடத்தை ஐருபோதும் சவரத் தூய்மை செய்யவில்லை. இதுவிடாது போபால்வாசிகளுக்கு நஞ்சூட்டி வருகிறது. 1999இல் நிகழ்விடத்துக்கு அருகே நிலத்தடி நீரையும் கிணற்று நீரையும் சோதித்துப் பார்த்ததில் பாதரசம் எதிர்பார்த்த அளவுகளைப் போல் 20,000-60,00,00 மடங்கு இருந்தது. கரு வளர்ச்சிக்கு உறு விளைவிப்பதாக மெய்ப்பிக்கப்பட்டுள்ள டிரைகுளோரோஈத்தேன் என்னும் வேதிப்பொருள் சுற்றுச்சூழல் காப்பு முகவாண்மை (Environment Protection Agency) ஆன விதிக்கும் பாதுகாப்பு வரம்புகளைப் போல் 50 மடங்கு அதிகமாக ஆருந்தது. இந்த விபத்துக்காகச் சொற்ப இழப்பீடே தரப்பட்டுள்ளது. சரியான முடிவு வேண்டி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நர்மதை மீட்பு இயக்கம் போராட்டம் நடத்துவது மக்களின் இடப்பெயர்வை எதிர்த்தா? அல்லது காடுகளின் அழிவை எதிர்த்தா? சிப்கோ ஆயக்கம் நம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவா? அல்லது நம் பிழைப்பைப் பாதுகாக்கவா? போபால் நச்சு வாயுத் துயரத்துக்குச் சரியான முடிவு வேண்டிப் போராடுவது குடிமக்களின் உரிமைக்காகவா? அல்லது காற்றையும் நீரையும் மாசுபடுத்தும் வேதிக் குழுமங்கள் ஆன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ள வலியுறுத்தியா?

உலகெங்கும் இத்தகைய எண்ணற்ற சமூக இயக்கங்களை ஆய்ந்துள்ள பால் அக்கன் அண்மையில் எழுதியுள்ள வாய்த்த கலகம் நூலில் விடையளிக்கிறார்: தொடக்கந்தொட்டு ஒரு சுற்றுச்சூழல் இயக்கம் சுற்றுச்சூழல் நீதி இயக்கமாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்துள்ளது. சுற்றுச்சூழல் நீதி இயக்கம் என்பது நடப்பில் ‘சமூக நீதி ஆயக்கமே. இதற்கு எராளமான ஊடுத்துக்காட்டுகள் ஈள்ளன. கென்யாவைச் சேர்ந்த வங்கரி மத்தாய் பசுமை நில இயக்கம் என்னும் அமைப்பை நிறுவினார். பசுமை நில இயக்கம் சமூகத்தின் துணையுடன் மரம் நடுதல் நிகழ்ச்சிகள் வாயிலாக இது வரை 4 கோடி மரங்களை நட்டுள்ளது. மரம் நடுதல் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் வறுமையைக் குறைப்பதும் அந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

இயற்கை உணவு இயக்கம் இதே காலத்தில் உலகின் பல பகுதிகளிலும் தோன்றி வேக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த இயக்கம் என்னும் பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, நுகர்வோருக்கான இன்னும் பாதுகாப்பான உணவு வேண்டியும் போராடுகிறது. இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. உலக வெப்பமாதலுக்கு எதிரான இயக்கமுங்கூட உழவர்களையும் பிழைப்புக்குக் கடலை நம்பியுள்ளவர்களையும் பாதுகாக்கும் அமைப்பே.

இவ்வகையில் சுற்றுச்சூழலுக்கும் மாந்த உயிர்களுக்கும் இடையே நிலவும் எண்ணற்ற இணைப்புகளில் மாந்த நலவாழ்வின் மீது தீய வேதிப் பொருள்கள் எற்படுத்தும் விளைவு வினையூக்கியாகத் திகழக் கூடும். இதன் காரணமாக நகர நுகர்வோர் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதே காரணம். ரேசன் கார்சன் தாம் எழுதிய (புதுமக்காலச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் தொடக்கம் எனப் பலரும் கருதும்) அமைதியான இளவேனில் நூலில் வாதிடுவதன்படி, மாந்தக்குலம் உற்பத்தி செய்யும் வேதிப் பொருள்கள் சுற்றுச்சூழலையும் மனித நலவாழ்வையும் பாதிக்கத் தொடங்கியுள்ளன. தாய்ப்பாலும் தடம் பதித்த, அனைவருமறிந்த வேதிப்பொருளான டிடிடி (பக்கம் அவர் குறிப்பாகத் தன் கவனத்தைச் செலுத்தினார். அவரை மாண்சாண்டோவும் பல குற்றாய்வர்களும் எளனம் செய்தாலும் அதன் பின் டிடிடி என்ற சொல் ஒரு கெட்ட வார்த்தையாகிப் போனது.

அமைதியான இளவேனில் வெளியிடப்பட்ட போது டிடிடி ஈற்பத்தி ஒராண்டுக்கு 10.8 கோடி ராத்தல் என உச்சத்தில் ஆருந்தது. மனிதத் திசுக்களில் கண்ட அளவுகளுங்கூட பத்து லட்சத்துக்கு 12.6 டிடிடி திசுக்கள் என உச்சத்தில் ஆருந்தது. 16 அண்டுக்குப் பிறகு உடலில் இந்தச் சுமை பத்து லட்சத்துக்கு 4.8 டிடிடி திசுக்கள் ஊனக் குறைந்தது. ஆன்று பத்து லட்சத்துக்கு 1 டிடிடி திசு ஊன்ற அளவில் ஈள்ளது.

இது வரை சமூக நீதி, சுற்றுச்சூழல் அகியவற்றுக்காக நடந்துள்ள இத்தகைய போராட்டங்களே கிளர்ச்சியின் மையமாக இருந்து வந்துள்ள நிலையில், புவியின் நண்பர்களாகிய மற்ற உயிரினங்களுக்காகப் போராடவும் இன்னும் பல அமைப்புகள் இன்று எழத் தொடங்கி விட்டன. காட்டாகப் பசுமை அமைதி இயக்கம் (Green Peace Movement), உலகக் கானுயிர் அறக்கட்டளை (World Wildlife Foundation) ஆகியவற்றைச் சொல்லலாம். அவை இன்று பேரெண்ணிக்கையிலான ஆதரவாளர்களைக் கொண்ட பெரும் பன்னாட்டுச் சுற்றுச்சூழல் நிறுவனங்களாகத் திகழ்கின்றன. உலகெங்கிலும் உள்ள அரசுகள், குழுமங்கள் அகியவற்றின் கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

உலகெங்கிலும் எழும்பிக் கொண்டிருக்கும் அத்தகைய எராளமான நிறுவனங்கள் பற்றி பால் அக்கனின் சொற்களில் உரைத்தால், புவிக்கோளின் உடல்நலம் கெட்டு வருவதற்குத் 'தற்காப்பு அமைப்பு அளிக்கும் மறுமொழி' ஆகும். அவர் உலகெங்கும் தாம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் சுற்றுச்சூழல் நீதி, மாந்த நீதிக் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் ஊண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 30 லட்சத்துக்குள் இருக்கலாம் என மதிப்பீடு செய்துள்ளார்.

உண்மை ஒவ்வொன்றும் நம்பிக்கை அழிக்கச் செய்யும் ஒரு நேரத்தில், எண்ணற்ற தனியாட்களும், நிறுவனங்களும் எழுப்பும் இந்தக் கூட்டுக் குரல், இந்த அரவார முழக்கம் நம்பிக்கைப் பாடலாகவே ஒலிக்கக் கூடும். "புவியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என விளக்குவதே அறிவியல் என்றறிந்த பின்னும் நீங்கள் ஒர் எதிர்வகைச் சிந்தனையர் அல்லர் என்றால், எங்களிடம் சயான தரவுகள் இல்லை ஊனப் பொருள். பெயர்கூறப்படாத இந்த இயக்கத்தினரைச் சந்தித்த பின்னும் நீங்கள் ஐரு நேர்வகைச் சிந்தனையர் அல்லர் என்றால், உங்களுக்கு ஆதயம் ஆல்லை எனப் பொருள்." - பால் அக்கன்

சான்றுகள்: பால் அக்கன் எழுதிய வாய்த்த கலகம், ரேசல் கார்சன் எழுதிய அமைதியான இளவேனில். இணையத் தளங்கள்: bhopal.net, indiatoday.com, narmada.org
தமிழாக்கம்: நலங்கிள்ளி



மரபீனி மாற்ற உணவு யார் நன்மைக்கு?
மரபீனி மாற்ற உணவு ஊன்றால் ஊன்ன?


பாக்டீயா, வைரஸ், சிலந்தி, தேள் அகியவற்றின் மரபீனிகளை, ஏன், மனிதர்களின் மரபீனிகளைக் கூட எடுத்து அவற்றை வந்து கத்திக்காய், உருளைக்கிழங்கு, சோளம் போன்றவற்றுக்குள் மரபீனிகளுக்குள் நுழைத்து ஈண்டு செய்யப்படுவதே மரபீனி மாற்ற உணவாகும். இதனால் காய்கறிகளில் குறிப்பிட்ட புதிய தனிக்கூறுகள் சேரத் தொடங்கும். இந்தப் புதிய காய்கறிகள் இந்த விசித்திரமான சோதனைகளிலிருந்து விளைந்தாலும் அவற்றில் பலநேரம் இயற்கையல்லாத, கணிக்கவியலாத பண்புக்கூறுகள் சேரத் தொடங்குகின்றன.

நுகர்வோருக்கு நல்லதன்று :

மரபீனி மாற்ற உணவை எலிகளில் சோதித்துப் பார்த்த போது முடிவுகள் கிலியூட்டின. மூளையில் வளர்ச்சிக் குறைபாடும், தற்காப்பு அமைப்புக் கேடும், குடல்களில் முற்புற்றுநோய் செல் வளரும் வாய்ப்பும், கல்லீரல், கணையம், குடல் அகியவற்றின் வீக்கமும் குருதிச் சர்க்கரை உயர்வும் காண முடிந்தது. மரபீனி மாற்றம் இனப்பெருக்கத்திறனைக் குறைப்பதை அண்மை அய்வுகள் ஈறுதிசெய்துள்ளன.

உழவருக்கு நல்லதன்று

மரபீனி மாற்றப் பயிர்களுக்கு ஆதரவாகப் பொதுவாக முன்வைக்கப்படும் வாதம் என்னவென்றால், அவற்றுக்குப் பூச்சி, களைக்கொல்லி ஆகியவற்றை எதிர்த்து நிற்கும் பண்பு இருப்பதால் உழவர்கள் மேம்பட்ட விளைச்சல் பெறுவார்கள். உண்மை என்னவென்றால், மழை, மண் தரம் என விளைச்சலைப் பாதிக்கும் காரணிகள் பல. இப்படியும், இதுவரை மிக அதிகம் பயிடப்பட்டுள்ள மரபீனி மாற்றப் பயிரான சோயா மொச்சையைப் பொறுத்த வரை, விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டுவதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. இந்தியாவில் குசராத்தைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில் இற் பருத்தி எறுமாறான விளைச்சலையே கொடுத்து வந்துள்ளது. இற் பருத்தி என்பது பேசில்லஸ் துஜியென்சிஸ் (Bacillus thurigiensis) eன்னும் பாக்டீய மரபீனிவைத் தனித்தெடுத்து அதனை அமெக்கப் பருத்தி விதை மரபீனிவுக்குள் செலுத்திப் பெற்றபருத்தி வகையாகும். ஆது பின்னர் இந்தியப் பருத்தி விதை மரபீனிவுடன் சேர்த்து ஆந்தியாவிலும் அறிமுகமானது.

சுற்றுச்சூழலுக்கு நல்லதன்று

இயற்கை ஆனப்பெருக்கத்தைப் போலன்றி மரபீனி மாற்றம் இயற்கையானதன்று. மரபீனி மாற்ற விதைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு உயிரினங்களின் இனப்பெருக்கத்தில் ஈண்டுசெய்யப்படுகின்றன. காட்டாகச் சொன்னால், பன்றியும் பன்றியும் அல்லது கத்திரிக்காயும் கத்திரிக்காயும் கலவி புரிவது ஆயற்கை. ஆனால் பன்றியும் கத்திரிக்காயும் கலவி புரிவது இயற்கையன்று. இந்தச் செயல் லட்சக்கணக்கான அண்டுகளாக உயிரினங்களைப் பிஇத்து வைத்துள்ள இயற்கைத் தடைகள் தாண்டி மரபீனிக்களைக் கடத்திச் செல்கிறது. மேலும், இது மீள்செயல் அன்று. ஏனென்றால் இன்று உலகளவில் விந்து செல்கிற ஈற்பத்தி, பரப்பீடு என்னும் சங்கிலித் தொடரில் மட்டும் இது மாட்டிக் கொண்டு விட்டால் கறையைக் கண்டறிவது கடினம்.

மரபீனி மாற்றப் பயிர்களை வணிகமயமாக்குவதைத் தடுக்கும் நோக்கில் மரபீனி மாற்றமற்ற இந்தியாவுக்கான கூட்டணி என்னும் அமைப்பால் 'நான் அய்வக எலியல்லன்' என்னும் பரப்புரை இயக்கம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இற் கத்திரிக்காய் (பேசில்லஸ் துஜியென்சிஸ் பாக்டீய மரபீனிவைக் கத்திரிக்காய் விதை மரபீனிவில் நுழைத்துப் பெறும் கத்திக்காய்) மீது முதன்மையாக இந்த இயக்கத்தின் கவனம் இருந்தது. நாடு முழுதும் செய்யப்பட்ட பரப்புரையால் இற் கத்திக்காயைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி மைய நலவாழ்வு அமைச்சடம் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட முறையீடுகள் குவிந்தன. மேலும் உழவர்க் குழுக்கள் விறுவிறுப்பான களப் பரப்புரை செய்தன. அனைத்து முயற்சிகளுக்கும் பலன் கிடைத்துள்ளது. 10.12.2008 அன்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தாம் மரபீனி மாற்றத் தொழில்நுட்பத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளார்.

அவர் இப்படிச் சொன்னார்: "பாமக ஊப்போதுமே மரபீனி மாற்றவிதைகளை எதிர்த்து வந்துள்ளது. பாமகவைச் சேர்ந்த ஒர் அமைச்சர் என்றவகையிலும், மைய அமைச்சர் என்றவகையிலும் நான் இதனைத் தொடர்ந்து எதிர்ப்பேன். அண்மையில் எழுந்துள்ள சொற்போரைப் பொறுத்த வரை, இற் கத்திக்காய் அதன் பாதுகாப்பு குறித்து முறைப்படியாக எந்த அய்வும் நடத்தாது இந்த நாட்டுக்குள் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாம் இதனைக் கூட்டாக எதிர்க்க வேண்டும். கொள்கையளவில் நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் நலவாழ்வுப் பாதிப்புகள், உழவர்ச் சிக்கல்கள் என (இற் கத்திக்காய் பற்றி) முழுதளாவிய அய்வு நடத்தும்படிப் பார்த்துக் கொள்ளும். அப்படி இல்லை என்றால், நாங்கள் கண்டிப்பாக அதனை இந்தியாவில் நுழைய விட மாட்டோம்."

அனால் போராட்டம் இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. "அரசாங்கம் மரபீனி மாற்றத்துக்கு அதரவாக உள்ளது" என மைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல் மறுவுறுதி செய்துள்ளார். மரபீனி மாற்றத்துக்கு எதிரான பரப்புரை என்பது விடாமல் தொடர்ந்து செய்யப்பட வேண்டிய ஒன்று, அதனை ஆந்தியாவுக்குள் நுழையாது தடுக்கும் வரை போராட்டம் ஒயாது.

மேலும் செய்திகள் அறிய www.iamnolabrat.com இணையத் தளத்துக்குள் செல்லுங்கள். தளத்தில் உங்கள் உறுதிப்பாட்டையும் கருத்துகளையும் வெளிப்படுத்துங்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com