பேரறிவாளனை விடுதலை செய்க! நீதிபதி கிருஷ்ணய்யர் வேண்டுகோள்
இந்தியாவின் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தமிழக முதலமைச்சர் கலைஞருக்கு எழுதியுள்ள மடலில், கடந்த 17 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள பேரறிவாளன் உயிரைக் காப்பாற்றும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கடிதத்தில் இருந்து சில வரிகள்:
மகாத்மா காந்தியிலிருந்து அன்புள்ளம் படைத்த ஒவ்வொருவரும் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். ஐ.நா. சபையும் மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்தியப் பண்பாடும் மரண தண்டனையை எதிர்க்கிறது. பேரறிவாளன் மரண தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 17 ஆண்டுகளாகத் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனிக் கொட்டடிச் சிறைவாசம் என்பதே ஒரு பயங்கரமான சித்தரவதை ஆகும். மரண தண்டனை கொடுவாள் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டுள்ள இத்தகைய நிலைமையில் 17 ஆண்டுகள் என்பது எண்ணிப் பார்க்க முடியாத வேதனையாகும். இப்பொழுது உன்னதமான மனிதநேயர் அண்ணாதுரையின் நூற்றாண்டு விழா வருகிறது. இந்த புனிதமான சூழலில் பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு மனித நேயமிக்க முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென்று உங்களை வேண்டுகிறேன்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|