ஜென்னத்துல் பிர்தவ்ஸ் கவிதை
அவள் குடும்பம்
பட்டினியால் வாடியபோது
யாரும் கண்டுகொள்ளவில்லை
மஹல்லாவில்
வாழ்க்கையைத் தொலைத்த
முதிர்கன்னியானாள் அவள்
அப்போதும் -
‘ஏழைக்குமர்’ என்று
கரைசேர்க்கவோ
நிக்காஹ் செய்யவோ
தோன்றவில்லை
மஹல்லாவில் உள்ள
எந்த இளைஞனுக்கும்
அவள் நிலையைக் கண்டு வருந்தி.
சிறுதனம் வேண்டாம்
நகையும் வேண்டாம்
வாழ்க்கை கொடுக்க
முன் வந்த
வேற்று மத இளைஞனை
அவள் திருமணம் செய்து
கொண்ட போது மட்டும்-
குமுறிக் கொந்தளிக்கும்.
ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ்
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|