Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜூலை 2006
குலசேகரன் கவிதைகள்

கடவுளுக்கு ஒரு கடிதம்

எங்கும் நிற்காமல்
ஓடிக்கொண்டிருக்கும் சாலையின்
சலசலப்பிலிருந்து கரையொதுங்கி
கடைப்படிக்கட்டுகளில் அமர்ந்து
தலைகலைந்து கிழிந்த ஆடையில்
எழுதிக் கொண்டிருக்கிறாள் கிழவி
சற்றும் தயங்காமல் தொடர்ந்து
பழையதான சில தாள்களில்
உலகின் கடைசியில் மிஞ்சியிருக்கும்
ஒரு புழுக்கைப் பென்சிலால்
மிகத் தீர்க்கமான எழுத்துக்கள்
சீராய் ஓடிக்கொண்டிருக்கும் வரிகள்
குழந்தைமையின் கோணல்களற்று
மெத்தப் படித்ததுப்போன்றக் கையெழுத்தில்
அச்சடித்ததைப் போலிருக்கின்றன
எல்லாம் சிறு சுழிகள் கோடுகள் கூட்டல்
பெருக்கல் குறிகளாகவே நிரம்பி
காகிதங்கள் கூடிக் கொண்டிருக்கின்றன
இறுதித் தேர்விலிருப்பவள் போல்
சிரத்தையாக எழுதி
யாராலும் வாசிக்க முடியாத அதை
அவ்வப்போது எடுத்து
அவளேப் படித்து ரசிக்கிறாள்


கழுவ முடியாத இரத்தம்

சற்றுமுன் நடந்து கொண்டிருப்பவள்
கீழே வீழ்ந்து விட்டாள்
அசைவற்றிருக்கும் அவளின்
தலையிலிருந்து பெருகும் இரத்தம்
சாலையின் கண்கள் கால்கள்
எல்லாவற்றையும் நனைத்து சிவப்பாக்கி
மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது
அனைவரும் பார்த்திருக்கிறோம்
கனத்தப் பேருந்து இடித்து
பயணம் தடைபட்டதையும்
அடியற்ற மரம் போல்
அவள் சரிந்ததையும்
யாரோ ஒருவர் ஊற்றும்
கடைசித் தண்ணீர் வாயில்
சிற்றோடை போல் ஓடுகிறது
சக்கரங்கள் சுழல முடியாமல்
அங்கேயே நின்றிருக்கிறது
அந்த ஒரு கணத்தோடு
மனிதர்கள் வாகனங்கள்
உடன் மரணமுற்றோம்
பிறகு மீண்டும் உயிர்பெற்று
அவரவர் வழியில் செல்கின்றோம்
கைகளில் ஒட்டியிருக்கும் கறையை
போகும் வழியெங்கும் துடைத்து


நின்ற வழி

ஆட்களாலும் வாகனங்களாலும்
இட்டு நிரப்பப்பட்டிருக்கும் சாலையில்
நான் கொண்டு செல்லப்படுகிறேன்
சுற்றிலும் பல்வேறு முகங்கள்
கண்ணில் விழுந்து மறைகின்றன
செல்ல வேண்டிய வழி
முன்னால் வளர்ந்து கொண்டிருக்கிறது
என் மேல் குறிக்கப்பட்டுள்ள
நேரத்தை நோக்கி விரைகிறேன்
அடைவது எப்போதுமே சந்தேகம்
எனக்கான முடிவு காத்திருக்கிறது
அதற்குள் நெருங்க வேண்டும்
மேலும் என்னை வேகமாக்க
இடையில் தடுப்பது போல்
ஒரு கரம் நீள்கிறது


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com