 |
கண்ணாடி மீன்கள் பாலமுருகன்
கண்ணாடி மீன்கள் வாழ்கின்றன
சிரிப்பதில்லை
ஏன் சிரிப்பதில்லை என்ற உங்கள் கேள்வியை
அவை புரிந்துகொள்கின்றன
ஆனால் பதிலளிப்பதில்லை
ஒவ்வாத நீரைப்பற்றி
மீன்களைத் தவிர
யாரும் புரிந்துகொள்வதில்லை.
அதன் கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும்
திகைப்பை
நீங்கள் இயல்பானது என்றால். . .
ஆனால் அவை மீன்கள்
வேறு என்னதான் செய்யும்?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|