இலக்கிய முற்றம்
பயணம்
மலர்மகள்
சன்னலோர இருக்கையில்
பேருந்துப் பயணம்...
தினமும் சவுகரியமாக...
முகமறைந்து வீசும்
காற்றின் ஸ்பரிசம்
மயிற் கற்றைகளுடன்
சண்டையிட்டு...
வரவேற்பு குரலெடுத்து
சப்திக்கும்
மரத்தின் கிளைகள்
பட்டாம் பூச்சிகளின்
குறுக்கெழுத்துப் புதிர்...
விளையாட்டு நடுவே...
கடந்து போய்க் கொண்டிருக்கும்
நிமிர்ந்த தந்திக் கம்பங்கள்
நெருடி விழும் மனதைத்
தடவித் தரும் புன்னகையாய்
ஆற்றோர நாணல்கள்
பயிரின் மணங்களுடன்
உறவின் ஊமைக் காயங்களுடன்
நனைந்த பஞ்சாய்
கனக்கின்ற நெஞ்சம்...
இயற்கையின் சுவீகரிப்பில்
மிதக்கும் சிலமணிநேரம்...
இலவம் பஞ்சாய்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|