அஞ்சலி
புகழ்பெற்ற நாடக ஆசிரியர் மற்றும் இயக்குநரான ஹபீப் அகமத் கான் ‘தன்வீர்’ சட்டீஸ்கரில் ராம்பூரில் 1923 செப்டம்பர் மாதம் முதல் தேதி பிறந்தார். இவர் தன்வீர் என்று புனைப் பெயரை சூட்டிக் கொண்டார். 1945ல் மும்பைக்கு குடிபெயர்ந்த இவர், அகில இந்திய வானொலியில் தயாரிப்பாளராக வேலை செய்து கொண்டு இந்தி திரைப்படங்களுக்கு பாடல் எழுதினார். ஒரு நடிகர் என்ற வகையில் இந்திய மக்கள் நாடகம் கழகத்தில் முக்கிய பங்காற்றியவர். 1959ல் போபாலில் நயா தியேட்டர் என்ற அமைப்பை தொடங்கினார். சங்கீத நாடக அகாடமி விருது (1969), பத்மஸ்ரீ விருது (1983), சங்ககீத் நாடக அகாடமி பெலோஷிப் விருது (1996), பத்மபூஷன் (2002) ஆகிய விருதுப் பெற்றவர். ஜூன் 8ஆம் தேதி போபாலில் காலமானார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|