உடலும் உள்ளமும் நலம் தானா?
உடலும் உள்ளமும் நலம் தானா?
நூலாசிரியர்: எஸ்.வி.வேணுகோபாலன் வெளியீடு :
பாரதி புத்தகாலயம், சென்னை18.
பக். 48 ரூ. 10
தமிழில் மருத்துவ நூல்கள் அரிது. அதனினும் அரிது வியாபார நோக்கமில்லாது உண்மை பேசும் மருத்துவ நூல்கள். அதனைவிட பல மடங்கு அரிது நமக்கு (உண்மையிலேயே ) புரியும்படியான மருத்துவ நூல். அப்படியே புரியும்படி இருந்தாலும் நம்மை மரணம் பற்றி பீதியடைய வைக்காது... தோழமையுடன் தோளில் கைபோட்டு... “டோண்ட் ஓரி.. இது ஒன்றுமே இல்லாத விஷயம்’’ என்கிற மொழியில் பேசும் ஒரு மருத்துவ நூல் தமிழில் வருவது என்பது அரிதினும் அரிதினும் அரிதினும் அரிது. அத்தகைய முயற்சிதான் இந்தப் புத்தகம்.
நவீன மருத்துவ உலகின் பிரமிக்கத்தக்க சேவைகளை கொண்டாடும் இந்த நூல், அதே விஷயம் ஓர் அபாயசங்கு ஊதுவதாகவே எப்போதும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. டயாபடீஸ் தொடங்கி மது உணவு முறை, தவிக்கும் தொப்பை, மன அழுத்தம். ரத்தக் கொதிப்பு, உறக்கமின்மை, இயற்கை உணவு என பொதுப் பிரச்சனைகள், கருப்பை நீக்கம், சோர்வின்மை, நினைவாற்றல் என தனிப்பட்ட குறிப்பட்ட அவலங்களையும் நூல் எளிய மொழியில் ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்கிறது. எதையும் கண்டுகொள்ளாமல் எல்லாவற்றையுமே அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழும் மத்திய வர்க்க வாழ்வின் கொடிய நோய் ஒன்று உண்டு. எதற்குமே போராடாமல் புன்னகைப்பது. அதை வைத்து தான் “மனசே ரிலாக்ஸ்’’ எனவும் கோபத்தை தவிர்ப்பது எப்படி எனவும் சில முதலாளிய குழலூதிகள் களத்தில் இறங்கி விட்டார்கள். இந்தப் புத்தகத்தில் “போராட பழக்குங்கள் குழந்தைகளை’’ கட்டுரை அத்தகைய ‘சுயநம்பிக்கை’ பம்மாத்துகளுக்கே விழும் சவுக்கடி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|