மால்கம் எக்ஸ்
மால்கம் எக்ஸ்
வெளியீடு: கிழக்குப்பதிப்பகம் விலை: ரூ. 80 பக். 176
வெள்ளையர் இனவெறிக்கு எதிராகத் தோன்றிய கருப்பினத் தலைவரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். மார்ட்டின் லூதர் கிங் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் அறவழிப் போராட்டம் நமக்கு உதவாது என்று கூறினார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால் மால்கம் எக்ஸோ அறைந்த கையை பிடித்து முறுக்கி இரண்டு கன்னங்களில் அறை என்றார். சாத்வீக முறைப்படி கொடி பிடித்தால் அமெரிக்கா நம் தலையில் மிளகாய் அரைத்துவிடும் என்றார். மால்கம் எக்சை கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ சந்தித்திருக்கிறார். இருவருக்கும் அடிப்படை வித்தியாசங்கள் இருந்தன.
காஸ்ட்ரோ அமெரிக்க அரசியலை, காலனியாதிக்க எண்ணங்களை எதிர்த்தார். ஆனால் அமெரிக்கர்களை எதிர்க்கவில்லை. மால்கம் எக்சோ அமெரிக்கா வேறு. அமெரிக்கர்கள் வேறு என்று வேறுபடுத்தவில்லை. அவர்களின் இனவெறியை எதிர்த்தார். ஒரு நாடு செய்த தவறுக்கு அந்த நாட்டு மக்களை பழிவாங்குவது சரியல்ல என்பது காஸ்ட்ரோவின் கொள்கை.
அமெரிக்க அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டதில் நேஷன் ஆஃப் இஸ்லாமின் எலிஜா முகமதுக்கும், மால்கம் எக்சுக்கும் கருத்து வேறு ஏற்பட்டது.
அது பெரிதாகி முற்றிப்போய் மால்கம் எக்சின் சாவில் முடிந்தது. 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று கருப்பின முஸ்லிம் இளைஞனால் பதினாறு தோட்டாக்களால், சுட்டுக் கொல்லப்பட்டார். மால்கம் எக்சின் இந்த நூல் வாசகர்களை கண்டிப்பாக ஈர்க்கும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|