பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக் காலத் தடைவிதிக்க மறுத்த நிலையில், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில், நான்காம் தேதி காலை 11 மணியளவில் கோட்டை நோக்கிப் புறப்பட்டனர். சட்டசபையைக் கூட்டி, நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி, சட்டமாக்க வேண்டும் அல்லது தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பேரவைத் தலைவரிடம் மனு அளிக்க வந்தபோது, நேப்பியர் பாலம் அருகிலேயே, காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர்.
கடும் வாக்குவாதத்துக்குப் பிறகு, கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பேரவைத் தலைவர் அங்கு இல்லை; அதிகாரிகளும் சந்திக்க மறுத்தனர். பேரவைச் செயலாளர் அறைக்குள் உறுப்பினர்கள் எதிர்ப்பு முழக்கமிட்டு, வெளியேறி, செய்தியாளர்களிடம் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். அதற்குப் பிறகு பேரவைச் செயலாளர் வெ.ராசாராமன் அங்கு வந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|