நானாவதி ஆணையம் : அரசு செய்யப் போவது என்ன?
1984 இல் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டபோது - டெல்லியில் 3000க்கும் அதிகமான அப்பாவி சீக்கியர்கள் திட்டமிட்டு படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி விசாரித்த நானாவதி ஆணையத்தின் பரிந்துரை, மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர், எம்.பி. ராஜன்குமார், மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளது. ஜெகதீஷ் டைட்லர் குற்றச்சாட்டை மறுக்கிறார். அவரது மறுப்பு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் 3000 அப்பாவி சீக்கியர்கள் படுகொலை என்பது மன்னிக்க முடியாத கொடுமை! இந்தப் படுகொலைகளுக்கு உள்ளான சீக்கிய மக்களின் உள்ளத்தில் பதிந்துள்ள காயம் போக்கப்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும்; அரசு மூடி மழுப்பி விடும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது! கூடவே கூடாது!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
ச்சீ... ச்சீ... மானங்கெட்ட பிழைப்பு
தொலைக்காட்சிகளிலும், விளம்பர பேனர்களிலும், நாளேடுகளிலும் வெளிவந்து குடும்பத்தினரை எல்லாம் முகம் சுளிக்க வைத்த ‘sunday’னா ரெண்டு!’ விளம்பரத்தைத் தந்தது யார் என்பது தெரிய வந்துள்ளது.
‘தினமலர்’ பார்ப்பன ஏடுதான். இந்த விளம்பரத்தை தந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் இன்னொரு ‘தினமலர்’ கிடைக்கும் என்பதற்காக இப்படிப்பட்ட ஒரு விளம்பரமாம்!
பார்ப்பன சங்கத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையாக செயல்படும் இந்த ‘தினமலர்’ தான் ஆபாசம் பற்றியும் சினிமா நடிகைகள் பற்றியும் எழுதி “ஒழுக்கத்தின் பாதுகாவலனாக”த் தன்னைக் காட்டிக் கொண்டு வருகிறது.
வசூலுக்காக எந்தத் தொழிலுக்கும் பார்ப்பனர்கள் தயாரானவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!
ச்சீ... மானங் கெட்ட பிழைப்பு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|