சுயமரியாதை வாளைச் சுழற்று - அவையஞ்சான்
பெண்கள்...
வீட்டின் - நாட்டின்
கண்களாம்...
யார் சொன்னது?
அவளுக்குத்தான்
எத்தனை பரிணாமங்கள்
மகள், மனைவி, காதலி, தோழி, தாய்...
ஆனால்...
மனிதத்தில் சரிபாதி
என்பதை மட்டும் காணோம்.
ஊடகங்கள் யாவும்
பெண்களை வைத்தே
வணிகம் செய்கின்றன
காரணம் - வியாபாரம்
‘சூடு' பிடிக்கவாம்.
தொலைக்காட்சித்
தொடர்களிலும்
மனிதத்தின் சரிபாதி
இழிவுபடுவதும்
கொடுமைப்படுவதும்
கேவலத்தின் உச்சம்..
போதும் - இனியாவது
அடுக்களையில் பிடித்த
கரண்டிகளை வீசுங்கள்
சுயமரியாதை வாளை
எடுத்துச் சுழற்றுங்கள்
அடிபணியக்
காத்திருக்கிறது
ஆதிக்க சமூகம்...!
|