விடுதலைப் பாதையும் பொதுவுடைமைப் பயணமும் அ.சி.சின்னப்பாதமிழர்
பெற்ற தாய் இமைவிழி திறக்கும் முன்னாலே
பெண்ணா? ஆணா? வினா எதனாலே
உற்றார் உறவார் கேட்பதும் அதுதானே
கற்றார் கல்லார் நிலையும் இதுதானே
தாலி பெண்ணுக்கு வேலி என்பாங்க
தாலி மோதிரம் கருகமணி கட்டுவாங்க
பெண்ணடிமைச் சின்னம் என்பதை மறைப்பாங்க
ஆண்களுக்கு அடையாளம் எதுவென்று சொல்லுங்க
படிதாண்டாப் பத்தினி பட்டயம் கொடுத்தவங்க
படியேறி வந்தாங்க படித்துச் சொன்னாங்க
முடிந்தவரை ஆணுறை பெண்ணுறை அணிந்திடுங்க
படிதாண்டும் பாவையர் காளையர் யாருங்க?
பெண்புத்தி பின்புத்தி என்று சொன்னவங்க
பெண்கள் தன்முயற்சிக் குழுவையும் அமைப்பாங்க
பெண்ணுக்குச் சொத்துரிமை உண்டென்று சொல்வாங்க
மண்ணைப் பிரித்தா ஆணுக்கு ஒதுக்குவாங்க
பெண்ணுரிமைப் பாதுகாப்பு சட்டம் என்பாங்க
பெண்ணிடம் பொருட்கொடை பெற்றால் சிறையென்பாங்க
பெண்ணிடம் வன்புணர்ச்சி முயற்சிக்கும் வழக்கென்பாங்க
பெண்களின் உரிமையை ஏட்டளவில் ஏற்பாங்க
நாடாளுமன்றக் குடிநாயகம் நமக்கானது இல்லிங்க
ஆணாதிக்க தனியுடைமைச் சமூகத்தை காக்குமுங்க
சொத்துடைமை ஆளுமையில் பெண்ணுரிமை கிடைக்காதுங்க
பொதுவுடைமை பிறந்தால்தான் பெண்விடுதலை மலருமுங்க!
|