பெண்ணியத்தின் வெற்றி விடை சொல்லும்!
மருத நாடன்
தெற்கிலொரு மாவட்டம் அதிலே நல்லுத்
தேவன்பே ரால்பட்டி அங்கே வாழும்
பிற்படுத்தப் பட்டுழலும் தேவர் மக்கள்
பெரும்பான்மை யாயுள்ள அச்சிற் றூரில்
கற்கோயில் துர்க்கையெனும் அம்ம னுக்காம்!
காலையிலும் மாலையிலும் பூசை உண்டாம்!
முற்போக்குக் கருத்தெதுவும் நுழைவதற்கு
முற்றாக வாலிப்பின்றிக் கிடக்கும் பட்டி!
பின்னியக்கா என்றொருபெண் அவளோ அவ்வூர்ப்
பின்னப்பத் தேவருக்கு மகளாம் இந்தப்
பின்னப்பத் தேவர்கோ யிற்பூ மரி!
பெற்றவன்நோலி வாலிப்பட்டு மறைந்த பின்னர்
பின்னியக்கா பூமரித் தொழிலை யேற்றாள்!!
பெண்ணென்ப தாலூரார் ஏற்க வில்லை!
பின்னப்பப் பூமரிக் காண்கள் இல்லை
பிறங்கடையாலய் ஒருமகளே பின்னி யக்கா!
பெண்ணொருத்தி செய்துளதோ புரட்சி! மதிப்
பின்னடைவுக் குள்ளான சமுதா யத்தில்
எண்ணிப்பார்த் திடமுடியா வொன்றாங் கண்டீர்!
இதையெதிர்த்து வழக்காடப் போனார் ஊரார்!
பெண்ணென்றால் ஆணுக்குள் அடக்கம் என்று
பிழையாகக் கருதியுள ஆண்கள் நாணப்
பெண்ணுரிமை தனையேற்று நயன்மை மன்றம்
பிசிறின்றி யொருதீர்ப்பு வழங்கக் கண்டோம்!
பெண்தெய்வ மேதுர்க்கை யம்மன்! இந்தப்
பீடையினைக் கட்டிக்கொண் டழும்பெண் மக்கள்
பெண்களதை யேற்றுக்கொள் ளாத வாறு
பிடிதளரா திறுக்கியுள தாணா திக்கம்!
பெண்ணினத்திற் கேயெதிராய் எழுந்துள் ளாரே!
பெண்களுக்குச் சமவுரிமை தேடி வந்தும்
பெண்ணினத்தின் விடியலினி வருநாள் எந்நாள்?
"பெண்ணியம்'' தான் இதற்குவிடை சொல்ல வேண்டும்!
|