வார்த்தைகள்
அனிதா
இந்த சொற்களின் நடுவேதான் அமர்ந்திருந்தேன்
சில நாள் முன்பு வரை கூட
முடியாத கனவொன்று நெடுநாளாய் தொடரவே
அருகிலிருந்த வார்த்தை ஊன்றி எழுந்து
நடக்க வேண்டியதாகிவிட்டது.
துளிர்க்கும் இலைகளைப் பார்த்தபடியே
பெரும் மரத்தின் வோpல் தடுக்கியதையும்
செருப்பு வழுக்கி கஹக்கால் வீங்கியதையும் தவிர
பெரிதாய் ஒன்றும் நிகழவில்லை.
உலோகம் உருகும் வெப்ப நெடியில்
வியர்த்த உடல்களைக் கடந்து இரவுகளைச் சேமித்தபடி
காற்றில் பறக்கும் மெல்லிய இறகொன்று தரை சேர்வதற்குள்
வந்து சேர்ந்துவிட்டேன்.
ஒற்றை ஊதுவர்த்தி வாசமென
கதவருகே நிற்கிறது என் கவிதை
முடியாத கனவு இப்போது நிறைந்து வழிகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|