 |
கவிதை
கற்பகம்.யசோதர கவிதைகள்
யாருடனோ யாருடைய குடைகளுக்குள்ளோ
நடந்த தெரு வழியே போகிறார்கள் (றோம்)
மாடுகள் ஓடுற வெளிகள் கடந்து
காடுகள் தேடுற வேட்கை இழைய
இத் தெருக்கள்
அவர்க்காகவே (எமக்காகவே) காத்திருக்கின்றன
உ(எ)ன்னிடம் ஏதோ ஒரு துயரம் இருக்கிறது;
இனிய துயரம்!
சமயத்தில்
வன்மமாய் விச நாக்கு நீட்டிடும்
அரவத்தை மறைத்து விடுகிறாய்(கிறேன்)
உ(எ)ன் கண்களில் உதடுகளில் மூக்கில்
நிலைக்கையில்
முகத்தி லிருக்கிற உலர்வை மறந்து போகிறான்
- இவன்.
இன்றைய மங்கள தினம்
காடுகளை விலத்தி
விரியும் பிரதேச மூலைகள் எங்கேனும்
யாரோ புணர்வதற்காய்க் காத்திருக்கிறது;
அறிவாயா அன்பே?
நகரங்கள் தாண்டி நாம் வந்தது இதற்காக
- கற்பகம்.யசோதர ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|