 |
கவிதை
தாத்தாவும் பல்லியும் சேவியர்
தலைக்கு மேல்
விடாமல்
கத்திக் கொண்டிருந்ததாம்
பல்லி.
இரவில் சில நாட்களாய்
கனவுகளின்
தொந்தரவாம்.
யாரோ இரவில்
உலுக்கி எழுப்பும்
உணர்வும் வந்ததாம்.
ஊரில்
தாத்தா காலமான
தகவல் அறிந்ததும்
அடுக்கத் துவங்கினர்
ஒவ்வொருவராய்.
அப்போதும்
சத்தம் போட்டது பல்லி.
- சேவியர் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|