 |
கட்டுரை
தொலைந்த மண் விஜய்கங்கா
எங்கே சென்றது ஈர மண்?
நூற்றாண்டுகளின் செயலினால்
நதிகளின் நீரோட்டம்
குவித்து சேமித்த
மணற்பெருக்கங்கள்
எங்கே சென்றன?
வானளாவி நிற்கும்
உயர் கட்டடங்களின்
உறுதியற்ற அடித்தளத்தில்
அமுங்கியதோ?
வடித்து வைக்கப்பட்ட
நதி படலத்தினின்றும்
அத்துமீறி
வார்க்கப்பட்டதோ?
வறண்ட நிலங்களின்
பிடிப்பற்ற பரப்பெங்கிலும்
பாகாய் தகிக்கிறது
மஞ்சற் பூமி
இயற்கை நீர்நிலைகள்
சீர்குலைத்த
மனித செயல்பாட்டால்
இன்று
தூர்த்துவிட்ட நீரூற்றுகளும்
நதிதேடி கலக்கவரும்
காட்டாற்று வெள்ளமும்
ஈரமண்ணின் ஈர்பற்று
மெல்ல
நகர்புறம் நோக்கிய
முற்றுகை துவங்கும்
ஏய்க்கப்பட்ட கடுஞ்சினத்துடன்
- விஜய்கங்கா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|