 |
கவிதை
ஓலம் வீரமணி இளங்கோவன்
அதீதத் தனிமையும்
மிகுந்த உற்சாகமும் கலந்த
அந்த சிருஷ்டி உலகத்திலிருந்து
தூக்கியெறியப்பட்டு அநேகநாட்களாகிவிட்டன
கையில் விளக்கோடும்
உள்ளம் நிறைய ஒளியோடும்
அவள் வந்தாள்
என் வானம் வெளிச்சமானது
கனிமரங்களும்
நிறைய காலடித்தடங்களும் கொண்ட
பரபரப்பான பாதைகள்
தினங்களை தின்றுகொண்டிருக்கின்றன
எங்காவது
சற்றே இளைப்பாறுகிற
நிசப்தவினாடிகளில் மட்டும்
பலவீனமாய் கேட்கிறது
என்னைத் தொலைத்துவிட்ட
என் கவிதைகளின் அழுகுரல்
- வீரமணி இளங்கோவன் [email protected]
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|