 |
கட்டுரை
மழை வேட்டல் II வே. ராமசாமி
கடைசியில்
மழைபெய்தே விட்டது
வேப்பமரத்தின்
கிளைவரை
பெருகியது நீர்
பேராசை கொண்ட
மரம்
கிளைநுனியில்
தண்ணீர் குடிக்கிறது
பஞ்சிட்டானின்
சிறகு
மாதமொன்றாகியும்
உலரவில்லை
சிறகு கோதியே
களைத்தன
புள்ளினங்கள்
வொவ்வொரு
சொட்டையும் விடாமல்
பருகினவென் கண்கள்
மழைநீரில்
காகிதக் கப்பலென
கிளம்பி விட்டன
அவை
குளத்தில் மிதக்கிறது
என் சடலம்
பிணத்தை
விரைவில்
அப்புறப்படுத்தாவிடில்
நான்
குளத்தைத் தூர்த்துவிடுவேன்
- வே. ராமசாமி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|