 |
கட்டுரை
மலையாங்குளம் 1 வே. ராமசாமி
தவளைகளைப்
பெய்கிற மழை
கொக்குகள்
காய்க்கிற மரம்
சாரைகள்
கண்ணுறங்கும்
நெடுவயல்
தானியம்
நிறைந்த குதிர்
தோள் தூக்கிச்
சுமக்கும்
தாய்மாமன்
காசுதருகிற
அத்தை
தாயமிடும்
அவள் மகள்
தம்பியின்
ஈரக்காலில் இறங்கிய
கருவமுள்ளை
கிளறியெடுக்கிற
அக்கா
ஊர்தாங்கி
நிற்கிற ஆல்
கரிந்து திமிர்ந்து
மேற்பார்வை செய்யும்
பனைகள்
கைகாட்டி
முன்னேகும்
வரிசைப்
புளியமரங்கள்
வாழைத் தோப்பின்
இலை விரிந்து
மூடிய வானம்
தரைக்கு
ஒருசாண் மேலே நேர்க்கோட்டில் பறந்து
ஈசலை
இரையெடுக்கும்
தைலான்
தானியம்
உடைத்து உடைத்து
பூமி சுற்றாவிட்டாலும்
தான் சுற்றும்
திருவைக்கல்
வடக்கே
வாழவந்த அம்மன்
தெற்கே
ஆனைக்காரன்
மேற்கே
கூடாரத்தம்மா
கிழக்கே
உச்சி உடையார்
நாலுபுறமும்
குளங்கள் சூழ்ந்தாலும்
ஒன்றின் பெயர்
ஊருக்கானது
மலையாங்குளம்
- வே. ராமசாமி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|