 |
கவிதை
நளினம் முருகன்
அன்று..
நீ
என்
வசந்தம்...
என்
வாசல்
வருவாயா..
என
வரம் வேண்டி
தவமிருந்தேன்...
வந்தாய்..
வருடம்
மூன்று
முடிந்து...
வசந்தமாய்த்தான்..
வருடம்
ஒன்று
முழூதாய்
முடியும் முன்...
விடை
பெற்றுக்கொண்டாய்...
புயலாய்...
வசனம்
இல்லா
படம்
பார்த்த
உணர்வு
எனக்கு...
வருடம்
மாறும் முன்...
என்
வசந்தம்
மாறியது
ஏன்..???
விளங்காத
வினா
இது...
நானே
விளங்கி..
எனக்கே
விளக்கிக்கொண்ட
விடை
இது...
நளினம்
தேவை
நங்கையின்
நட்பைக்கொள்ள...
நடிப்பும்
தேவை
நங்கையின்
காதலைக்கொள்ள...
- முருகன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|