 |
கவிதை
தேநீரும் தேவதையும் உதயகுமார்.ஜி
என் தேவதை
அவள் தோழியோடு
தேநீர் அருந்த
வருகிறாள்.
அவள் கரம்
பிடிக்க காத்துக்
கிடக்கின்றன
தேநீர்க் கோப்பைகள்.
எல்லா கோப்பைகளையும்
ஏமாற்றி விட்டு
ஒரு கோப்பைக்கு
மட்டும் உயிர்
கொடுக்கிறாள்.
அவள் பிஞ்சு
விரல் தொட்டு.
அவள் உதடு
பதித்து உறியும்போதெல்லாம்
தீர்ந்து போவது
தேநீர் மட்டும்
அல்ல,
என் உயிரும் தான்.
அவள் அதரம்
தொட முடியாத
சோகத்தில்,
தேவதையின் தோழி
கரத்தில் இருந்து
தற்கொலை செய்து
கொள்கிறது
இன்னொரு கோப்பை.
இதைப் புரிந்து
கொள்ள முடியாமல்
"கை தவறி
விழுந்து விட்டது"
என்கிறார்கள்.
அவளோ கோப்பைக்குள்
இருக்கும் தேனீரைப் பருக,
கோப்பையோ அவள்
எச்சிலை அமுதமென
எண்ணிப் பருகுகின்றது.
மலருள் இருக்கும்
தேனை பட்டாம்பூச்சி
பருகுவது இயல்பு.
ஆனால் இங்கு
பூவே அல்லவா
தேனைப் பருகுகிறது?
இன்னொரு பிறவி
இருந்தால் எப்படியாவது
கோப்பையாய் பிறந்து
விட வேண்டும்.
என் தேவதையின்
இதழ் ஈரம்பட.
அதற்குள் முடிந்து விட்டதா?
தேவதையின் தேநீர் திருவிழா.
காத்து இருக்கிறேன்.
தேவதையின் இன்னொரு
திருவிழாவிற்காக.
- உதயகுமார்.ஜி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|