 |
கட்டுரை
அலையா விருந்து? ப.திருநாவுக்கரசு
மண்ணையும்
புனலையும்
நெய்திட
யுகங்களாய்
நெய்தல் நிலங்கள்!
ராட்சத அலைகள்
நுழைந்திட
கதவற்ற குடிசைகள்!
அமுதைப் பொழியும்
அழகொளிர் நிலவால்
கிளர்ந்தெழும்
உப்பும் புலவும் கொண்டு
உக்கிர நீர்க்கரங்கள்!
கடலின்
கவனமற்ற
ஆரோகனத்தில்
அன்றாட விடியல்!
முடிந்தால் வருவேன்
என்றவர் சொற்களில்
முரண்படும் பொருள் என்ன?
முடிந்துபோனபின்
வருவதெங்கே?
முடியவில்லை எதுவும்..
எங்களுக்கென்று
வெவ்வேறு உயரங்களில்
புனல் மாலைகள்!
வந்ததும் விளங்கவில்லே
போனதும் புரியவில்லே!
அலைக்கழிப்பது அதற்கு
அன்றாட வேலையாகிவிட்டது! .........
- ப.திருநாவுக்கரசு ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|