 |
கட்டுரை
அப்பா..! தியாகுஆசாத்
திண்ணையின் மூலையில்
எதையோ பார்த்தவாறு
படுத்திருக்கிறாய்...
பள்ளிகுடம் விட்டு
ஓடும் குழந்தைப்போல்
கண்களை விட்டு
ஓடுகிறுது கண்ணீர்.
சில வருடமாய்
நீ ஒன்றுமே பேசுவதில்லை
பேசமுடிவதுமில்லை..
நான்
பேசமாலிருந்த பருவத்தில்
கொஞ்சியும்.. விளையாட்டு செய்தும்
சிரிக்க வைப்பாய்...
உன்னை கொஞ்சுவதற்கோ
சிரிக்க வைப்பதற்கோ
மனம் முன்வராமலிருக்கிறது.
ஓவ்வொரு தீபாவளிக்கும்
பழைய சட்டையை
துவைத்து அணிந்து கொள்வாய்..!
எனக்கு புன்னகையுடன்
புதுத்துணி வாங்கி தந்து.
இந்த தீபாவளிக்கு
பழைய சட்டையை
அணிந்து கொண்டு..!
என் மகனுக்கு மலர்ச்சியோடு
புதுத்துணி வாங்கி தந்தேன்.
திண்ணையின் மூலையில்
எதையோ பார்த்தவாறு கிடக்கிறாய்.
மலம் சிறுநீர் வீசும்
வேஷ்டியோடு....!
- தியாகுஆசாத் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|