 |
கட்டுரை
மின்மினிகள்! தியாகுஆசாத்
சற்றுமுன் வரைந்த ஒவியத்தில்
புதிதாய்...
பூத்திருந்தது ஒரு மலர்.!
ஆசையாய் பரித்தேன்!
அடடா...!
பட்டாம்பூச்சி..!
***
மேகங்களின் கால்களில்
தீக்காயம்!
பாவம்.
சூரியனை மிதித்துவிட்டதாம்.
***
பஞ்சும் நெருப்பும் பற்றிக்கொள்ளுமாம்..!
பற்றவில்லையே..!
சூரியனும் மேகமும்.?
***
மழையில்..
நனைந்து வந்த குடை
திண்ணையில்.!
உள்ளே போனவர்கள்
தலை துவட்டிக் கொள்கிறார்கள்.!
**
- தியாகுஆசாத் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|