 |
கட்டுரை
காத்திருந்து! காத்திருந்து! தியாகு
காத்திருந்த
கணங்களில்
மண்ணில் நுழைந்த
காதல் மரமாக
பின்னால்!
நிமிசத்தை
தின்னாமல்
வேர்களை தின்னும்
விரக நாக்குகள்!
நிழலில் இருந்தும்
வேர்க்கும் மனது!
அசையாத இலைகளால்
ஓவிய மரங்கள்!
பொழுது போக்க
என்னையே படிக்க
முயலும் புத்தகம்!
சடுதியில் வரும்படி
காற்றை அனுப்பு
இலைகளுடனாவது
பேசிக் கொண்டிருக்க!
- தியாகு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|