 |
கட்டுரை
நீ போனாலும்.... தியாகு
கடற்கரையெங்கும்
பரந்து கிடக்கும் உன்
சிரிப்பென்னும்
கிளிஞ்சல்களை
கைநிறைய அள்ளுகிறேன்!
காதல்எனும்
மணல் வீட்டை
திரும்ப திரும்ப
கட்டுகிறேன்
"இல்லை"எனும் அலைகள்
இனிவராது இருக்கலாம்!
பார்வையெனும்
சிறு குழிகள்
கரையோரம்
தோண்டுகிறேன்
கிடைப்பதென்னவோ
கண்ணீர்எனும்
அதே உப்புநீர்தான்!
மணல்வெளியெங்கும்
உன் பாதத்தின்
சுவடுகளையாவது
விட்டுசெல்
முன்னறிவிப்பின்றி
உன்போல்
போகமுடியாதென்னால் !
- தியாகு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|