 |
கட்டுரை
காலம்! தியாகு
பொருள் தேடும் பொருட்டாக
பொதுவாழ்வை மாற்றிட்ட
போக்கிரிகள் அதிகாரம்
போக்குவது எக்காலம்!
புத்தகங்கள் நூறிருக்க
பொழுதுகளை தொடர்களிலே
போக்கிடும்நோய் வெகுதூரம்
போவதுதான் எக்காலம்!
பொருள்தேடும் உலகினிலே
அருள்தேடி திரிந்து அவன்
அடியவர்தம் பாதத்தை
பணிவதுதான் எக்காலம்!
அமிழ்தான தமிழிருக்க
ஆங்கிலத்தில் அப்பாவை
அழைக்காமல் மகனிருக்க
நினைப்பதுதான் எக்காலம்!
- தியாகு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|