 |
கட்டுரை
நண்பா உன் கையைகொடு தியாகு
பள்ளிக்கூடங்கள்-உயர்
பல்கலைகழகங்கள்
சிந்தனை கூடங்கள்
சிறப்பான பாலங்கள் கட்டியவனே!-உன்
கையைகொடு
வானாளாவிய கோபுரங்கள்!
கவின்மிகு கட்டிடங்கள்!
கலைமிகு கோவில்
கருவறைகள் கட்டியவனே!-உன்
கையைகொடு!
வண்ணப்பட்டாடைகள் வனப்புறு
வடிவங்களில் தோலாடைகள்
கதராடைகள் நல்ல
கைத்தறியில் தந்தவனே -உன்
கையைகொடு!
வாழும் உயிருக்கெல்லாம் -நல்
சோறும் நீரும் கொடுத்தவனே
கலைப்பை நீ பிடித்து உலகின்
பிழைப்பை நடத்துபவனே-உன்
கையைகொடு!
உணவும், உடையும் இருக்க
இடமும் படைத்து தந்தாய்
உனக்கு நாங்கள் தந்தது
எதுமில்லை அதனால்-உன்
கையைகொடு அதற்கொரு
முத்தம் தருகிறேன்!
- தியாகு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|