 |
கட்டுரை
எட்டுமணிநேரமல்ல! தியாகு
சாயபட்டறைகளில் எங்கள்
சந்ததிகள் வளருது!
காலையில் காய போட்ட
துணியெடுக்க -சூரியன்
போனபிறகு வருகிறாள் அம்மா
நிக்க நேரமில்லை நினைத்து
பார்க்க வழியுமில்ல - வேலை
எட்டுமணிநேரமல்ல!
நீங்கள் போட்டுருக்கிற பனியனுக்குள்
புதைந்திருக்கு எங்கள்
வாழ்க்கை - வேலை
எட்டுமணி நேரமல்ல!
படிக்க போன பிள்ளைக்கு
பசியாத்த வழியுமில்ல
குடிக்கிற கூழுக்கே
குடும்பம் முழுக்க
வேலைக்கு - வேலை
எட்டுமணிநேரமல்ல
பள்ளிகூடம் விட்டவுடன்
பறந்து வருவான் பிள்ளை-அம்மா
பாயாசம் வைத்திருப்பாளென
பாசத்துடன் அள்ள வழியில்ல-வேலை
எட்டுமணி நேரமல்ல
நின்னுகிட்டே பார்க்கிறாள்
வேலை அம்மா
உட்கார வாரத்தில்
ஒரு நாள் லீவு
அன்னைக்கும் வேலையாம்
அர்ஜென்டாம் ஆர்டரு-வேலை
எட்டுமணி நேரமல்ல
[திருப்பூரில் பனிரெண்டு மணிநேர வேலை கட்டாயம் குறித்து எனது வேதனையை எழுதியுள்ளேன்]
- தியாகு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|