 |
கட்டுரை
நாற்காலி! நாற்காலி!
மா.வீ.தியாகராசன்
நாற்காலி என்பது
இடுகுறி பெயரா?
காரணப் பெயரா?........
இலக்கண ஆசிரியர்
எழுப்பிடும் கேள்வி... ...!
காரணப்பெயர்தான்
காரணப் பெயர்தான்
காரணம் கேட்க
காதுகள் தாரீர்... ... !
ஊனம்
இருந்த இடத்தில் இருந்து
நகரவேண்டும்
இங்கே சக்கர நாற்காலி... ...!
அறுபது வயதைக் கடந்தால்
அரசு ஊழியர்க்கு
சாய்வு நாற்காலி... ...!
நாட்டைக் காலி செய்ய
நாட்டு மக்களே
கோட்டைக்குக் கொடுப்பது
பதவி நாற்காலி ... ...!
ஏழையர் பற்றி
எண்ணிப்பார்க்க
ஏ.சி அறையில்
எத்தனை நாற்காலி ... ...!
வட்ட மேசையில்
வயிறு இழுக்க
பெட்டிகள் பற்றிப்
பேசிடும் நாற்காலி ... ...!
காலை ... ... மாலை......
இரண்டு வேளையும்
மாத்திரைச் சீட்டு
எழுதிக் கொடுத்து
வெள்ளி வாங்கும்
மருத்துவ நாற்காலி ... ...!
- டாக்டர் மா.வீ. தியாகராசன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|