 |
கட்டுரை
சிலேடை வெண்பா சிங்கைத் தமிழ்க்கிறுக்கன்
சிட்டுக்குருவியும் சிக்கனத்தார் வாழ்க்கையும்
சிக்கனமாய் வீடுகட்டி சித்திரமாய் வாழ்ந்து கொண்டு
பக்குவமாய் விண்ணேறிப் பாய்வதனால்- இக்கணமே
சிட்டுக் குருவியாகும் சிக்கனத்து வாழ்க்கையரும்
ஒட்டி உறவென்றாய் ஓது
கேழ்வரகின் நெய்யும் கஞ்கரின் கையும்
எடுக்கத்தான் பார்க்கத்தான் எந்நாளும் காணோம்
வடிக்கத்தான் வைக்கத்தான் வந்தால் - தடுக்கித்தான்
காணாது போனதுபோ கஞ்சரின்கை கேய்வரகின்
தேனான நெய்யென்றே தேடு
எறும்பும் உழைப்பாளியும்
தன்னெடைக்கு பல்மடங்கை தான்சுமையாய் தூக்குதலால்
உன்னதமாய் ஓயாமல் ஓடுதலால் - நன்னயமாய்
நள்ளிரவில் தூங்காரோ! நாளும் எறும்பாரே!
வல்லள் உழைப்பவராம் வாழ்த்து
வெளவாலும் பெருங்குடீகாரரும்
கண்ணற்றக் காரணத்தால் கால்மேலாய் நிற்பதுவாய்
புண்ணறவே போய்மோதும் போக்கினிலும் - மண்ணுலகில்
வெளவாலை போலாகி வாட்டும் குடிகாரர்
ஓவ்வாமல் ஒன்றென்றே ஓப்பு
- சிங்கைத் தமிழ்க்கிறுக்கன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|