Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கவிதை

உசுப்பும் உபதேசம் வேண்டாம்
சி.வ.தங்கையன்

Man கருகிப்போன பயிரைப் பார்த்து
உருகிப்போச்சு உசுரு - பின்
காலேஜிலே மகனைச் சேத்தேன்
பிஞ்சுது தல மசுரு - இங்கு
மதத்த ஜாதியை நெனச்சுப் பாக்க
நேரம் எங்கே கூறு - நம்
மக்கள் சிக்கலை போக்கிறதுக்கு
வழிகளுண்டா பாரு!

சோத்துப் பாட்டுக்கு ஒழைப்பதுவே
சோலியான போது - வேறு
சுகங்களெல்லாம் யோசிக்க
சூழல் இங்கே ஏது - இப்போ
ஆசுப்பத்திரி செலவு வந்தா
அதோடு நாங்கள் காலி - அரசு
ஆசுப்பத்திரி நல்லா இருந்தால்
எனக்கு கொஞ்சம் காமி!

நல்ல நாளு பெரிய நாளு
வந்து போற நாளில் - நாங்க
நகர முடியாம பெரிய வெலங்கு
விழுந்துவிடும் காலில் - நல்ல
சந்தோசத்தே தருவதுதான்
விழாவுங்கன்னு சொல்வார் - இது
சங்கடத்தத் தருவதெல்லாம்
யாரு கண்டு கொள்வார்?

கவனமெல்லாம் வேறு பக்கம்
திசை திருப்ப வேண்டாம் - எங்கள்
கஷ்டம் தீர சுலபமான
வழிகளும்தான் உண்டா? - ஏதும்
உண்டுன்னா இங்கே வந்து
உபதேசம் பண்ணு - அது
இல்லை என்றால் பேசாமல்
இடத்தை காலி பண்ணு!

- சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com